search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The person who"

    • கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த வர் சாமிநாதன் (68). இவரது மனைவி கண்ணம்மாள் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.

    இவர்களது மகன் செல்வக்குமார் (43). இவரை பெருந்துறையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை தூங்கி கொண்டிருந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.

    உடனடியாக மறுவாழ்வு மையத்தினர் பெற்றோர்க ளுக்கு தகவல் கூறி உடனடியாக வர சொல்லி உறவினர்கள் உதவியுடன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை க்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழி யிலேயே இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
    • அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம், போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (59). இவரது மனைவி பேச்சியம்மாள் (47). பாலகிருஷ்ணன் பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவினில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.

    மதியம் சுமார் 2 மணியளவில் குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டிருந்தபோது பூஜை பொருள்கள் வாங்குவதற்காக கோவிலுக்கு வெளியில் உள்ள கடைக்கு பாலகிருஷ்ணனும், அவரது மனைவியும் சென்றனர்.

    அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். உனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×