search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishing"

    • மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
    • மீனவர்களுக்கு இந்த மீன்பிடி இறங்கு தளம் மிக முக்கியமான கட்டுமானம் ஆகும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது, கண்டிக்கத்தக்கது. இந்த மீன்பிடி இறங்கு தளம் உலக வங்கி நிதியுடன் உருவாக்கப்பட்டது. அதன் மேம்பாட்டுக்கும் விரிவாக்கத்திற்கும் மத்திய அரசு ரூ.55 கோடி ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தை சென்ற மாதமே துவங்கி இருந்தால் இந்த விரிசல்கள் ஏற்பட்டு இருக்காது. மீனவர்களுக்கு இந்த மீன்பிடி இறங்கு தளம் மிக முக்கியமான கட்டுமானம் ஆகும். அவர்களது தொழிலை மேம்படுத்தும் ஒரு பெரிய அமைப்பாகும்.

    இதைக்கூட ஒரு தரமான நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய வசதியாக அரசால் உருவாக்கித் தர முடியவில்லை. துவக்க விழா செய்வதற்கு முன்பே அது சேதமாகியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்ததாரர், அதிகாரி மற்ற சம்பந்தப்பட்ட வர்களின் இந்த தரமற்ற வேலைக்கான காரணத்தையும் விளக்கத்தையும் கேட்க வேண்டும்.

    அவர்கள் தங்கள் கடமையில் தவறி இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இந்த சேதத்தை சரி செய்ய தேவையான நடவடிக்கை களை உடனடியாக எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மல்லிபட்டினத்தைச் சேர்ந்த மருதை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.
    • படகில் இருந்த கனமான மரப்பலகை முருகன் தலையில் திடீரென விழுந்தது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 46).மீனவர்.

    இவர் சக மீனவர்களுடன் மல்லிபட்டினத்தைச் சேர்ந்த மருதை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.

    மல்லிப்பட்டினம் துறைமுக பகுதியில் இருந்து, சுமார் 6 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது, படகில் இருந்த கனமான மரப்பலகை முருகன் தலையில் திடீரென விழுந்தது.

    இதில் படுகாயமடைந்த முருகனை உடன் இருந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு கொண்டு வந்தனர்.

    அங்கிருந்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    ராஜபாளையம்:

    நாட்டின் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் குற்றங்களில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சமூக வலைதள வீடியோக்கள் உதவியாக உள்ளன. இதற்கு உதாரணமாக அண்மையில் மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதல் வீடியோ சாட்சி. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

    தமிழகத்தில் கண்மாயில் மீன்பிடித்த வாலிபர்களை அரை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் பல்வேறு கண்மாயின் மீன்பிடிக்கும் உரிமையை பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு குத்தகைதாரர்கள் மீன்களை வளர்த்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஏலம் எடுத்தவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளி நபர்கள் யாரேனும் மீன்களை பிடித்து விற்கக்கூடாது என்பதற்காக கண்மாய்க்கு காவலுக்கு ஆட்களை போட்டு கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருங்கூர் கண்மாயில் அதிக அளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கண்மாயில் அடிக்கடி மீன்கள் திருட்டு போய் வந்தது. இதன் காரணமாக கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மருங்கூர் கண்மாயில் சோமையாபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா, அன்பழகன், மனோகர், மனோஜ் ஆகிய 4 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மீன்பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவலாளிகள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து குத்தகைதாரர் ராஜ்குமாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

    அவர் 4 பேரையும் போலீசில் ஒப்படைக்காமல் அரை நிர்வாணமாக்கி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். அவருடன் சேர்ந்து சதீஷ், சத்தியராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகியோரும் அவர்களை தாக்கி உள்ளனர்.

    அப்போது 4 பேரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். ஆனாலும் தொடர்ந்து ராஜ்குமார் தரப்பினர் அவர்களை தாக்கினர். மேலும் மீன்பிடித்தற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டினர். இந்த தாக்குதலை ராஜ்குமார் தரப்பை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வேகமாக பரவி வைரலானது. 4 இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடக்கும் பதிவு பார்ப்போர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    ராஜபாளையம் வடக்கு போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது 4 வாலிபர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகைதாரர் ராஜ்குமார், சதீஷ், சத்யராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த இருவர் எலும்பு முறிவு காரணமாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • தீடீரென கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்தது.
    • திருப்பனந்தாள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அணைக்கரை மீனவ தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 55). மீன்பிடிக்கும் தொழிலாளி.

    இவர் வழக்கம் போல் கொள்ளிடத்தில் மீன்பிடிப்ப தற்காக அங்குள்ள மதகு கட்டையில் உட்கார்ந்து கொண்டு தனது மீன்பிடி வலையின் மூலம் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது தீடிரென கொள்ளிட ஆற்றில் உள்ள முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்து தண்ணீரில் இழுத்து சென்றது.

    அப்போது ரவியின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த மீன்பிடி தொழிலாளர்கள் துரிதமதாக செயல்பட்டு ரவியை முதலையிடமிருந்து மீட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ரவியை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

    இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடலுக்கு சென்ற தொண்டி மீனவர்களுக்கு மீன்பாடு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    • கடலுக்கு சென்ற தொண்டி மீனவர்களுக்கு மீன்பாடு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமானது சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் நகர் என்று அழைக்கப்படும் லாஞ்சியடி மற்றும் சோழியக்குடி.

    இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் கரை திரும்புவர்.

    கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன் பிடி தடைக்காலத்திற்கு பிறகு தற்போது ஆழ்கடல் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஆழ்கடலில் கிடைக்கும் இறால், நண்டு, மீன் வரத்து இல்லாமல் சிறிய வகை காரல், நெத்திலி, நண்டு ஆகியவை மட்டுமே வலையில் சிக்குகிறது என மீனவர்கள் வேதனையில் உள்ளனர். மேலும் தற்போது வலையில் சிக்கும் இந்த மீன் வகைகள் கோழி தீவனத்திற்கு மட்டுமே பயன்படும். இவற்றையும் உப்புப் போட்டு வெயிலில் உலர்த்திய பின்னரே விற்பனை செய்ய முடியும். அந்தவகையில் பக்குவப்படுத்தியும் கிலோ ரூ30-க்கு மட்டுமே விலை போகும்.

    மீன் பிடி தடைக்காலத்தில் படகுகளை பழுதுபார்த்து செலவு செய்து கையிருப்பு பணம் அனைத்தும் செலவாகி, 60 நாட்களுக்கு பிறகு மீண்டும் டீசல், பணியாட்கள் சம்பளம், உணவு உள்ளிட்ட செலவுகள் செய்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றும் கருவாடு காயப்போடும் நிலையே உள்ளது என இப்பகுதி விசைப்படகு மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
    • இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர்.

    குளச்சல்:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது.

    இன்று (1-ந்தேதி) காலை முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி உள்ளன. அவை மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலத்தில் உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும்.

    விசைப்படகுகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் குமரி மேற்கு கடலோர பகுதிகளில் மீன்வரத்து குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர். கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் இன்று காலை மீன் பிடிக்க சென்றன. கரை திரும்பிய கட்டுமரங்களில் நெத்திலி மீன்கள், வேளா மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    • வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர்.
    • அவரது மகன் விநாயகமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    வானூரை அடுத்த செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52) டெய்லர் வேலை செய்து வந்தார்.  9 மணிக்கு கொடுக்கூர் ஆற்றங்கரைக்கு மீன்பிடிக்க சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு முருகன் மயங்கிய நிலையில் இறந்த கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் விநாயகமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.15 ஆயிரமாக வழங்க வேண்டும்
    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி புதுவை யில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.

    இடைக்கால நிவாரண மாக மீனவ குடும்பங்களுக்கு புதுவை அரசு வழங்கும் ரூ.6 ஆயிரத்து 500 ஆயிரம் போதுமானது அல்ல. ஏற்கனவே 45 நாட்கள் அறிவிக்கப்பட்ட தடை காலம் 2017ம் ஆண்டு முதல் 61 நாட்களாக அமல்படு த்தப்படுகிறது.

    புதுவையில் 18 மீனவ கிராமங்களில் 360 விசைபடகுகளும், ஆழ்கடலுக்கு செல்லும் 50 பெரும் விசைப்படகுகளும், மீன் பிடிதொழிலுக்கு பயன்படுத்தப் பட்டு வருகிறது.

    இந்த தொழிலை நம்பி சுமார் 19 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாது காப்பாக நிறுத்துவதோடு படகுகள் மற்றும் எஞ்ஜின், வலைகளை ரிப்பேர் செய்வ தற்கான ெசலவுகளும் அதிகரித்து உள்ளன.

    வருமானம் இல்லாத நிலையில் மீனவ குடு ம்பங்கள் பசி பட்டினியால் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நிவாரண தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு
    • ரூ 6,500 -ஆக உயர்த்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் மீன்வளத் துறை சார்பில் மீனவர்களின் விசை படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. டீசலுக்காக மீனவர்கள் நெடும் தூரம் செல்ல வேண்டியுள்ளதால் அந்தந்த கிராமங்களில் டீசல் பங்க் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக வீராம்பட்டி னத்தில் ஐ.ஓ.சி. நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலையில் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    மீன்பிடி தடை கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை உயர்த்தவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து மீன்பிடி தடை கால நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி யின் அனுமதியின் பேரில் ரூ.6 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியுள்ளோம். உயர்த்தப்பட்ட மீன்பிடி தடை கால நிவாரணம் வரும் (புதன்கிழமை)முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த தொகையை புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 298 மீனவர்கள் பெறுகின்றனர்.

    அரபி கடல் பகுதியில் உள்ள மாகி பிராந்தியத்தில் மீன்பிடி தடை காலம் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. அப்போது அங்குள்ள 515 மீனவர்களுக்கு உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை தெரிவித்து உள்ளது.

    • ராமேசுவரத்தில் 300 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர்.
    • வருகிற 15-ந்தேதி தடைக்காலம் தொடங்குகிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்ப டகுகள் உள்ளன. கிறிஸ்த வர்களின் தவக்கா லத்தை யொட்டி ஏராளமான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசு வரம் மீனவர்களுக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருவதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தினமும் குறைவான அளவிலே மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். ராமேசு வரத்தில் இருந்து 300 விசைப்படகுகள் மட்டும் இன்று மீன் பிடிக்க சென்றன.

    இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதி க்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கு கிறது. ஏப்ரல் 15-ந்தேதி ஜூன் 15-ந் ேததி வரை மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போது ஆழ்கடல் சென்று மீன் பி டிக்க விசைப் படகு மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    ஜூன் 16-ந்தேதிக்கு பிறகே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். அதுவரை நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன்பிடித்து வருவார்கள். அந்த நேரத்திலும் மீனவர்க ளுக்கு வருவாய் இருக்காது.

    இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் தேவதாஸ் கூறும்போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து வருவதாலும், மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதாலும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது குறைந்துவிட்டது என்றார்.

    • குளம் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பலர் எவ்வித அனுமதியும் பெறாமல் பாசனத்தலைவர் தனிநபரிடமிருந்து குறிப்பிட்ட தொகையினை பெற்று கொண்டு மீன்பிடித்து வருகிறார்கள்.
    • ரூ.3லட்சம் பணம் கொடுங்கள் என மிரட்டுகிறார்கள்.

    திருப்பூர்:

    தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தில்லைமுத்து திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மீன்துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் தாராபுரம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கொங்கூர் இடைச்சியம்மன் குளத்தில் ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யப்பட்ட குத்தகையினை பொதுப்பணித்துறைக்கு செலுத்தி மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தார்கள்.

    இந்தநிலையில் புதிய அரசாணை வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சங்க உறுப்பினர்கள் யாரும் மீன்பிடிக்க செல்வதில்லை. ஆனால் குளம் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பலர் எவ்வித அனுமதியும் பெறாமல் பாசனத்தலைவர் தனிநபரிடமிருந்து குறிப்பிட்ட தொகையினை பெற்று கொண்டு மீன்பிடித்து வருகிறார்கள். மீனவ கூட்டுறவு சங்கத்தினர் தட்டிக்கேட்டால் குளம் எங்கள் ஊரில் உள்ளது.

    ஆகவே நாங்கள்தான் மீன்பிடிப்போம் .உங்களால் என்ன செய்யும் முடியுமோ செய்யுங்கள் என மிரட்டுவதுடன் ரூ.3லட்சம் பணம் கொடுங்கள் எனவும் மிரட்டுகிறார்கள். வழக்கு நிலுவையில் உள்ள இந்த காலத்தில் முந்தைய ஆண்டுகளில் மீன்பிடிக்காமல் ஏராளமான மீன்கள் வளர்ந்து குளத்தில் இருக்கின்றன. அவை யாவும் தற்சமயம் அனுமதியின்றி பிடித்து வருவதால் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே இதனை விரைவில் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • புதுவை அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ரூ.63 லட்சத்து 52 ஆயிரத்து 50 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்கால நிவாரணமானது நடப்பு(2022) ஆண்டிற்கு 2-ம் கட்டமாக 1,155 மீனவ குடும்பங்களுக்கு ரூ.63 லட்சத்து 52 ஆயிரத்து 50 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்படி நிவாரண தொகையானது புதுவை பகுதியைச் சேர்ந்த 919 குடும்பங்களுக்கும், காரைக்கால் பகுதியை சேர்ந்த 73 குடும்பங்களுக்கும், மாகி பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கும், மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 143 குடும்பங்களுக்கும் முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×