search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    300 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர்
    X

    300 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர்

    • ராமேசுவரத்தில் 300 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர்.
    • வருகிற 15-ந்தேதி தடைக்காலம் தொடங்குகிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்ப டகுகள் உள்ளன. கிறிஸ்த வர்களின் தவக்கா லத்தை யொட்டி ஏராளமான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசு வரம் மீனவர்களுக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருவதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தினமும் குறைவான அளவிலே மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். ராமேசு வரத்தில் இருந்து 300 விசைப்படகுகள் மட்டும் இன்று மீன் பிடிக்க சென்றன.

    இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதி க்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கு கிறது. ஏப்ரல் 15-ந்தேதி ஜூன் 15-ந் ேததி வரை மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போது ஆழ்கடல் சென்று மீன் பி டிக்க விசைப் படகு மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    ஜூன் 16-ந்தேதிக்கு பிறகே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். அதுவரை நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன்பிடித்து வருவார்கள். அந்த நேரத்திலும் மீனவர்க ளுக்கு வருவாய் இருக்காது.

    இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் தேவதாஸ் கூறும்போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து வருவதாலும், மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதாலும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது குறைந்துவிட்டது என்றார்.

    Next Story
    ×