search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்கரை"

    • சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

    சென்னை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

    சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன.

    கடந்த 11-ந் தேதி அன்று 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப் பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    சென்னை மாநகர் முழு வதும் வைக்கப்பட்டிருந்த சிலைகளில் இதுவரை கரைத்தது போக 1,300 சிலைகள் இன்று 17 வழித் தடங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு மீன்பிடி துறை முகம் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட சிலைகள் எண்ணூர் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டன. இதேபோன்று தாம்பரம் சுற்று வட்டாரத்தில் வைக்கப்பட்டிருந்த 600 சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.

    இதையொட்டி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பவர்கள் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்காக முன்னேற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.

    நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும், மீனவர்களும் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தது.

    சென்னை மாநகர் முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளை கவனித்தார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மேற் பார்வையில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.

    ஊர்வல பாதைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து ஊர்வலத்தை கண்காணிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    இன்று காலை 10 மணியில் இருந்தே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் பிற்பகலில் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளுமே கடைசி நாளான இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    பாரத் இந்து முன்னணி சார்பில் புளியந்தோப்பு, பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி. பிரபு ஜி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதேபோன்று அனைத்து இந்து இயக்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் விநாய கர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். விநாயகர் ஊர் வலம் மற்றும் சிலை கரைப்பை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    • கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.
    • தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியை சுற்றி 35 மீனவ கிராமங்கள் உள்ளன. திருமலை நகர் தொடங்கி காட்டுப்பள்ளி வரை நீண்ட கடற்கரை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு கடற்கரை பகுதி கருப்பு நிறமாக மாறி வருகிறது. பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், வைரவன் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் கடற்கரை முழுவதும் கருப்பாக காட்சி அளிக்கிறது. கடல் அலைகளும் சகதியாக மாறிவிட்டன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பாதிப்புக்கு தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.

    கடலில் கலக்கப்படும் கடல்நீரால் மாசு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

    தற்போது கடலில் அலை சீற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த கழிவுகள் கடற்கரை பகுதியில் ஒதுங்குகிறதா? என்று தெரியவில்லை. இதுவரை, இதுபோன்று பழவேற்காடு கடற்கரை கருப்பு நிறமாக மாறியது இல்லை என்றார்.

    • கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும்.
    • கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பழவேற்காடு அடுத்த கருங்காலி பகுதியில் உள்ள பள்ளப்பாடு என்ற இடத்தில் கடல் அலைகள் கரையை தாண்டி வெளியே வந்தது. அந்த பகுதியில் கடற்கரையில் இருந்து சில அடிதூரத்திலேயே சாலை உள்ளது. மேலும் சாலையை ஒட்டி குறைந்த உயரத்திலேயே தடுப்பு சுவர் இருப்பதால் அதனை தாண்டி கடல் நீர் சாலைக்கு வந்தது.

    இதன்காரணமாக கருங்காலி பகுதியில் உள்ள பழவேற்காடு சாலையில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் கடல் மணலால் மூடப்பட்டது. சாலையில் சுமார் 4 மீட்டர் உயரம் அளவிற்கு கடல்மணல் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம்,காமராஜர் துறைமுகம், மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக இதே நிலை நீடித்து வருகிறது. தற்போது கடல் அலையின் சீற்றம் குறைந்து உள்ள நிலையில் பழவேற்காடு சாலையில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதுவரை மணல் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பழவேற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் ஷேர் ஆட்டோவில் பள்ளப்பாடு பகுதி வரைக்கும் சென்று பின்னர் அங்கிருந்து மணலில் 1½ கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது.

    எனவே பள்ளப்பாடு பகுதியில் கடல் நீர் சாலைக்கு வராமல் தடுக்க பெரிய கற்கள் அல்லது தடுப்பு சுவரை உயரமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்திடம் மனு அளித்து உள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வழக்கமாக மழை காலங்களில் கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும். ஆனால் இப்போது இது ஏற்பட்டு உள்ளது. வரும் மழை காலத்திலும் இதே பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே கருங்காலி பகுதியில் கடல் அலை சாலைக்கு வராத அளவில் தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும். அல்லது கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.

    தற்போது சாலையில் உள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 40 கி.மீட்டர் தூரம் சுற்றி சென்று கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.

    • ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
    • லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது.

    ராஜாக்கமங்கலம்:

    குமரி மாவட்டம் முழுவதும் இன்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஆரோக்கிய புரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது. 3-வது நாளாக கடல் சீற்றமாக உள்ளதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று பயிற்சி டாக்டர்கள் தடையை மீறி கடலில் கால் நனைத்தபோது ராட்சத அலையில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.


    இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

    நுழைவு வாயில் அருகே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் சிவப்பு கலரில் கொடி கட்டப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். கடற்கரைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை.

    சொத்தவிளை கடற்கரை, முட்டம் கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளிலும் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை. கடலோர காவல் படை போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது.
    • சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

    அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள செடார் கடற்கரையில் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா 152 எனும் சிறிய விமானம் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விமானம் கடற்கரையில் தரையிறங்கிய நிலையில், விமானி மற்றும் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கடற்கரையில் தரையிறங்கியதால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    "ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று செடார் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது. இதன் காரணமாக விமானத்தை இயக்கிய 60 வயது விமானி, கடற்கரையில் தரையிறக்கினார்," என்று அமெரிக்க வான்வழி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 


    • ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
    • உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஸ்மோக் பிஸ்கெட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படை களம் இறக்கியுள்ளது.

    புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.

    திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுக்கிறார்கள்.

    உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.

    இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது.

    இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
    • மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது என்றார்.

    சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை கொண்டு ஒருவர் டி.வி. வாங்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

    ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும், ஒவ்வொரு வாரமும் 210 அமெரிக்க டாலர் முதல் 263 டாலர் வரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன். வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார். 

    • குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.

    கொல்லங்கோடு இறையு மன்துறை பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகள், தடுப்புச் சுவரை தாண்டியதால் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். கடல் நீர், கரையோரம் இருந்த கல்லறை தோட்டங்கள் கடல் நீரால் சூழப்பட்டன. குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு ராட்சத அலைகள் எழும்பியதை பார்த்த அவர்கள், அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர். அவர்கள் அமர்ந்திருந்த மணல்பரப்பு வரை கடல் நீர் வந்து சென்றது. சிலர் அதில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் விரைந்து செயல்பட்டு சுற்றுலா பயணிகளை கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குமரி மாவட்ட கடற்பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடலோரப் பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தன. சுமார் 10அடி முதல் 15 அடி உய ரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

    கடல் சீற்றம் காரணமாக நேற்று மதியம் நிறுத்தப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்து இன்று காலையும் ரத்து செய்யப்பட்டே இருந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக படகு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், கடல் சீற்றம் தணிந்த பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றனர்.

    குளச்சல் கடலில் எழுந்த ராட்சத அலைகள், மணற் பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பைபர் வள்ளங்களை இழுத்து சென்றதால் அவை சேதமடைந்தன. ஒரு சில கட்டுமரங்களையும் காணவில்லை என மீனவர்கள் கூறினர்.

    • பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
    • மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் இந்த கிராம கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 1அடி நீளமும், 6 இன்ச் விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே டேஞ்சர் எனவும், நாட்டச் நோட்டிபை போலீஸ் என எழுதப்பட்டுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார் மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

    • முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
    • ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    பொன்னேரி:

    நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து வருகின்றன. படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி காயம் அடைந்து அவை இறப்பதாக ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ தூரத்துக்கு கடற்கரையில் தடுப்பு கட்டை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் கடலில் இறங்கி குளிக்காமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.

    கடற்கரைக்குப் பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காகக் குழந்தை களுக்கு பாதுகாப்பு கவசம் போன்று அடையாள அட்டைகளை கைகளில் கட்டி விட திட்டமிடப்பட்டு உள்ளது.

    ×