என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australia"

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

    நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் அபாயங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

    ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    கான்பெரா:

    இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

    எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தங்களது தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள சிறுவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
    • ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.

    இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.

    ஜெமிமா விவகாரத்தில் கடந்த ஆண்டு அவரது தந்தையையொட்டி நடந்த மதமாற்ற சர்ச்சையும் சேர்ந்துகொண்டது.

    அதாவது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள ஜிம்கானா கிளப்பின் உறுப்பினரில் இருந்து ஜெமிமா நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு கிளப்பின் வளாகத்திற்குள் அவரது தந்தை ரோட்ரிக்ஸ் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தி மத மாற்றம் செய்ய ஊக்குவித்ததாக சிலர் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த மதமாற்ற குற்றச்சாட்டுகளை அப்போதே கிளப்பின் தலைவர் மறுத்திருந்தார்.

    அதேபோல், ஜெமிமாவின் தந்தையும் கிளப் வளாகத்திற்குள் கூட்டங்கள் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் கிளப்பின் விதிகளுக்கு உட்பட்டே நடத்தியதாக விளக்கம் அளித்தார்.

    அந்த சமயத்தில் ஜெமிமாவின் கிறிஸ்தவ மத நம்பிக்கை குறித்து எதிர்மறையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் மீது மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், அவரது குடும்பம் மீது வைக்கப்பட்ட மத ரீதியிலான விமர்சனங்கள் குறித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக இந்தியா டுடேவுக்கு பிரத்யேக பேட்டியளித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், "உண்மையைச் சொல்லப் போனால், அது எப்போது நடந்தது என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. .நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோர் அதில் இழுக்கப்பட்டபோது எனக்கு அது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நேரத்தில், நாங்கள் விதிமுறைகளின்படிதான் செயல்பட்டோம். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. ஆனால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்தார். 

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    சிட்னி:

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    • போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.

    பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகார்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

    செப்டம்பர் 2 அன்று அரியானாவில் உறவினர் உறவினர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய சென்ற போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்து காரில் தப்பிச் சென்ற ஹர்மீத் சிங்கை போலீசார் தேடி வந்தனர்.

    பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே அவருக்கு போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில் ஹர்மீத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.

    அந்த பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சதி என்றும் தனக்கு ஜாமீன் கிடைத்ததும் நாடு திரும்புவேன் என்றும் பேசியுள்ளார். மேலும் தனது சொந்த கட்சியினர் குறித்தும் அந்த பேட்டியில் அவர் குறை கூறியுள்ளார். 

    • இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
    • இணையத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வைரலானார்.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை வென்றது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இணையத்தில் அவர் வைரலானார்.

    இந்நிலையில், மும்பை விமான நிலையம் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் துணை ராணுவத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது
    • இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் அணியில் இடம் பெறாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனமாக நியமிக்கப்ட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

    ஸ்மித் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அபோட், போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, லாபுசாக்னே, நாதன் லியோன், ஜேக் வெதரால்ட், வெப்ஸ்டர்

    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
    • ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.

    இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.

    இந்நிலையில், ஜெமிமா மீதான மத ரீதியான ட்ரோல்களுக்கு முன்னாள் இந்திய வீராங்கனை சிகா பாண்டே பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிகா பாண்டே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆமாம் ஜெமிமா கடவுளுக்குப் பிடித்த குழந்தைதான். நீங்கள் அதற்காக பொறாமைப்பட்டால்... மன்னிக்கவும், யாரும் உங்களுக்கு உதவ முடியாது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடந்த பரபரப்பான அரைஇறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன், 14 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்) ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப்பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.

    கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளப்பூரிப்பில் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுதார்.

    இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.

    127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    2018ம் ஆண்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் செய்த வலைப்பயிற்சிக்கு பின், 'ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று அவள் சில தோல்விகளைச் சந்தித்தார். ஆனால் ஜெமிமா இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்' என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.



    • உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது.
    • சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் ரத்தானது. சுப்மன் கில் 37 ரன்களுடனும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது.

    உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (20 ஓவர்) தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி நல்ல நிலையில் உள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் தடுமாறிய சூர்யகுமார் யாதவ் முதலாவது ஆட்டத்தில் ஹேசில்வுட், எலிஸ் பந்து வீச்சில் இமாலய சிக்சர் விரட்டி அசத்தினார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை கட்டமைக்க முடிவு செய்துள்ள இந்தியா அதிரடி அணுகுமுறையை கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகமாக மட்டையை சுழற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் களம் காணும் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூர் சூழல் சாதகமான அம்சமாகும். அத்துடன் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆட இருப்பது நிச்சயம் பரவசமூட்டும்.

    அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோனிஸ் என அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், சேவியர் பார்லெட் கைகொடுக்கிறார்கள்.

    மொத்தத்தில் சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை 6 இருபது ஓவர் போட்டியில் ஆடி இருக்கும் இந்திய அணி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.

    கடந்த ஆட்டத்தை போல் மெல்போர்னிலும் மழை புகுந்து விளையாட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்லெட், நாதன் எலிஸ், மேத்யூ குனேமேன், ஜோஷ் ஹேசில்வுட்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன்.
    • கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும் (134 பந்து, 14 பவுண்டரி), அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 15 வைடு உள்பட 26 ரன்கள் கிடைத்தது.

    மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்குஎதிரான லீக்கில் 331 ரன் இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப்பிடித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்ததுடன், அந்த தோல்விக்கும் இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்து இருக்கிறது.

    மேலும் மகளிர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

    இதனிடையே, 127 ரன்கள் திரட்டி ஆட்டநாயகியாக ஜொலித்த இந்திய மிடில் வரிசை பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்றதும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.

    இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.

    • மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
    • மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.

    மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், நாக் அவுட் போட்டிகளில் முதல் முறையாக 300+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற புதிய சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.

    இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்களை நியூசிலாந்து ஆண்கள் சேஸிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×