என் மலர்
நீங்கள் தேடியது "Australia"
- இந்திய தரப்பில் கவூர், பிரதிகா ராவல் அரை சதம் விளாசினர்.
- ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங், அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 78 ரன்கள் குவித்தது. மந்தனா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிகா ராவல் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 52 ரன்கள் இருக்கும் போது தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11, தீப்தி சர்மா 1, அமன்ஜோத் கவுர் 13 என நடையை கட்டினர்.
இதனையடுத்து கேப்டன் கவூர் - ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிச்சா 19 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காஷ்வி கௌதம் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கவூர் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 54 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங், அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- முதலில் ஆடிய ஓமன் அணி 16.2 ஓவரில் 104 ரன்களுக்கு சுருண்டது.
- ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பல்லேகலே:
டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஓமன் அணி 16.4 ஓவரில் 104 ரன்களுக்கு சுருண்டது. வாசிம் அலி 32 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டும், மேக்ஸ்வெல், பார்ட்லெட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 9.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 33 பந்தில் 64 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
- சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
- இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.
புதுடெல்லி:
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரலாம என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
- இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.
லண்டன்:
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது. ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்திலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் தொடங்கப்பட்டது. விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் மகிழ்ச்சியாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. தம்பிகள் சேர்ந்து சாதித்ததை பார்க்கும் ஒரு அண்ணனை போல உணர்கிறேன்.
நீண்ட காலமாக நாங்கள் உருவாக்கி வந்த ஒற்றுமையை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் இருந்து பார்ப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது, அதற்கு மேல், ஒரு வெற்றி. இது நம்பமுடியாதது.
நாங்கள் வந்த விதம், பந்து வீசிய விதம், நாங்கள் தொடங்கிய விதம், ஒவ்வொரு கேட்சை எடுத்த விதம், சில பவுண்டரி தடுத்தது. இது நம்பமுடியாதது. அதாவது, சிறுவர்களைக் குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. அவர்கள் இன்று வெற்றி பெறத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டோம் என்பதற்காக நிதானத்தை இழக்காமல், ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி முன்னேறுவோம். தனக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு கவலைப்படத்தக்கது அல்ல. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என கூறினார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருமுறை நேருக்கு நேர் சந்தித்த 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் மிகப்பெரிய அணியான ஆஸ்திரேலியா வீழ்த்திய ஜிம்பாப்வே அணிக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழக வீரர் அஸ்வின் கூறியதாவது:- பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, ஆனால் டோனி முன்யோங்காவின் பீல்டிங் அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது. அவர் குறைந்தது 12-15 ரன்களையாவது சேமித்துள்ளார். மேலும் டீப் மிட் விக்கெட்டில் ஒரு அற்புதமான கேட்ச் மூலம் ஒப்பந்தத்தை நிறைவு செய்கிறார். இந்த டி20 உலகக் கோப்பையில் ஆடுகளங்கள் மிகவும் சமநிலையில் இருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது.
இர்பான் பதான்
சிக்கந்தர் ராசா தலைமையில் இந்த ஜிம்பாப்வே டி20 அணி சிறப்பாக உருவாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் ஜிம்பாப்வே இப்போது 120 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை சாதித்துள்ளது.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் இங்கிலிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் இங்கிலிஸ் 8 ரன்னிலும் அடுத்து வந்த கேமரூன் கிரீன், டிம் டேவிட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் வெளியேறினர்.
இதனையடுத்து மேக்ஸ்வெல்- மேட் ரென்ஷா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய மேக்ஸ்வெல் 32 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 6, பென் த்வார்ஷுயிஸ் 6 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய மேட் ரென்ஷா அரை சதம் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய அவர் 65 ரன்னில் வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார்.
- அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வருகிறார்
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் விலகிய நிலையில், அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வரும் நிலையில், மீதமுள்ள போட்டிகளில் ஸ்மித் அணியை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
- இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கில் திரண்டு சிட்னி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிட்னி:
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போண்டாய்க் கடற்கரையில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆயிரக்கணக்கில் திரண்டு சிட்னி நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலகலப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அகற்ற முற்பட்டபோது வன்முறை ஏற்பட்டது. அவர்களை அமைதி காக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, 27 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அமைதியான முறையில் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை கேட்டுக் கொண்டார்.
- ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது.
- உடல் சோர்ந்து மயங்கும் நிலையிலும், அங்கிருந்தவர்களிடம் தனது குடும்பத்தினர் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரிவித்தான்.
ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு ஆஸ்டின் ஆப்பல்பீ (வயது 13) என்ற சிறுவன் தனது தாய் ஜோன் (47) மற்றும் தம்பி, தங்கையுடன் துடுப்புப் படகில் கடலுக்குச் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றால், அவர்களது படகு கட்டுப்பாட்டை இழந்து நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது சிறுவன் ஆஸ்டின், சற்றும் பயப்படாமல் ராட்சத அலைகளுக்கு இடையே, சுறாக்கள் உள்ள பகுதியில் சுமார் 4 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கரையை அடைந்தான்.
உடல் சோர்ந்து மயங்கும் நிலையிலும், அங்கிருந்தவர்களிடம் தனது குடும்பத்தினர் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரிவித்தான். உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவனது தாய் மற்றும் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். தன் உயிரைப் பணையம் வைத்து குடும்பத்தை மீட்ட இந்த சிறுவனை உலகம் முழுவதும் 'அதிசயப் பிறவி' எனப் பாராட்டி வருகின்றனர்.
- ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலை திருடு போனது.
- இந்தச் சிலையை 2021, நவம்பரில் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமுதாய கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 240 கிலோ எடையுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை 2021-ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்திய சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வெண்கல சிலையை மர்ம கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது.
கால்களைத் தவிர்த்து பிற உடல் பாகங்களுடன் காந்தியின் சிலையை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் காந்தி சிலை திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
- மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதனிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த கம்மின்ஸ், ஹேசல் வுட், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் இடம்பெற்று இருந்தனர்.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகினார். இதனால் மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி
மிச்சேல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனெமன், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா






