என் மலர்
நீங்கள் தேடியது "Family"
- ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது.
- உடல் சோர்ந்து மயங்கும் நிலையிலும், அங்கிருந்தவர்களிடம் தனது குடும்பத்தினர் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரிவித்தான்.
ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு ஆஸ்டின் ஆப்பல்பீ (வயது 13) என்ற சிறுவன் தனது தாய் ஜோன் (47) மற்றும் தம்பி, தங்கையுடன் துடுப்புப் படகில் கடலுக்குச் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றால், அவர்களது படகு கட்டுப்பாட்டை இழந்து நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது சிறுவன் ஆஸ்டின், சற்றும் பயப்படாமல் ராட்சத அலைகளுக்கு இடையே, சுறாக்கள் உள்ள பகுதியில் சுமார் 4 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கரையை அடைந்தான்.
உடல் சோர்ந்து மயங்கும் நிலையிலும், அங்கிருந்தவர்களிடம் தனது குடும்பத்தினர் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரிவித்தான். உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவனது தாய் மற்றும் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். தன் உயிரைப் பணையம் வைத்து குடும்பத்தை மீட்ட இந்த சிறுவனை உலகம் முழுவதும் 'அதிசயப் பிறவி' எனப் பாராட்டி வருகின்றனர்.
- சிறந்த தகவல் தொடர்பு திறன்தான் உறவுக்குள் நெருக்கத்தை பேணுவதற்கு அடிப்படையானது.
- தம்பதியரை பொறுத்தவரை ஒரே கனவுகள், இலக்குகள் கொண்டு செயல்படுதல் உறவை வளர்க்கும்.
குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், இளம் தம்பதியர்கள், நட்பாக பழகி குடும்ப இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் அளவுக்கு உரிமை கொண்டிருப்பவர்கள் என உறவு வட்டத்துக்குள் இருப்பவர்களுக்குள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மனஸ்தாபம் ஏற்படலாம். அது உறவுக்குள் விரிசலை உண்டாக்குவதற்கு வித்திடலாம். அதற்கு இடம் கொடுக்காமல் ஆரம்ப நிலையிலேயே முற்றுப்புள்ளிவைத்து, உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க செய்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
உடல் ரீதியான அன்பு
தம்பதியரை பொறுத்தவரை நெருக்கம் என்பது உடல் தொடுதலால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது. அன்பான தொடுதல், அரவணைப்பு, கைகளை பற்றி ஆதரவு அளித்தல், அருகில் அமருதல், ஆறுதலாக பேசுதல் போன்றவை உறவை நெருக்கமாக வைத்திருக்க உதவிடும். மற்ற உறவுகளை பொறுத்தவரை அடிக்கடி உரையாடுவது, அன்பை வெளிப்படுத்துவது உறவை வலுப்படுத்தும்.
திறந்த மனம்
தம்பதியரில் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பகிர்வதற்கு சிரமப்பட்டாலோ, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடம் ஏதேனும் முக்கியமான விஷயத்தை கூட பகிர்வதற்கு தயக்கம் கொண்டாலோ உறவுக்குள் நெருக்கம் குறையும்.
தம்பதியரை பொறுத்தவரை தங்களின் ஆசைகள், கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான சூழல் இருந்தால்தான் உண்மையான நெருக்கம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த சூழலை உருவாக்குவதற்கு திறந்த மனதுடன் பேச வேண்டும். தம்பதியர் மட்டுமல்ல மற்ற உறவுகளும் திறந்த மனதுடன் செயல்பட்டால்தான் உறவுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
தகவல் தொடர்பு
சிறந்த தகவல் தொடர்பு திறன்தான் உறவுக்குள் நெருக்கத்தை பேணுவதற்கு அடிப்படையானது. அதற்காக எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. நீண்ட நாட்கள் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருப்பதுதான் தவறானது. குடும்பத்தினரை தவிர உறவினர்களுடன் நிலையான தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வெளியூரில் வசிப்பவர்களாக இருந்தால் வாரம் ஒருமுறையோ முடியாதபட்சத்தில் மாதம் ஒருமுறையாவது அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். யார் முதலில் பேசுவது என்ற ஈகோவுக்கு இடம் கொடுக்கக்கூடாது. முதல் அடியை எடுத்து வைப்பது நீங்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் உறவுக்குள் நெருக்கம் மேம்படும்.
பரஸ்பர மரியாதை
நம்மை மதிக்கிறார்கள், நம் பேச்சுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்கள் என்ற உணர்வே உறவை வலுப்படுத்தும். உறவுக்குள் யாரேனும் உங்களுக்கு சின்ன உதவி செய்தாலும் கூட தவறாமல் 'நன்றி' கூற மறக்காதீர்கள். என்றென்றும் நன்றிக்கடன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
எந்த விஷயமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் 'நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள்', 'உங்கள் யோசனை எனக்கு பிடிக்கும்' என்பன போன்ற சிறிய பாராட்டுகள் கூட உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.
ஒரே இலக்கு
தம்பதியரை பொறுத்தவரை ஒரே கனவுகள், இலக்குகள் கொண்டு செயல்படுதல் உறவை வளர்க்கும். அதனை நோக்கி ஒருசேர திட்டமிட்டு செயல்பட வழிவகை செய்யும். உறவுக்குள் நெருக்கத்தை பலப்படுத்தும்.
- கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார் கமலேஷ்.
- மகள் எக்ஷிதா ஏஞ்சல் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியில் வசித்தவர் கமலேஷ் (வயது 48). இவர் கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களது மகள் எக்ஷிதா ஏஞ்சல் (10). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கமலேஷின் மனைவி இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை என தெரிகிறது. இதனால் கமலேஷும், அவரது மனைவியும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் கமலேஷ் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
இதற்கிடையே கமலேஷ் உயிர்மாய்ப்பு தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் உடல்நல பாதிப்பு சரியாகததால் குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்ததாக வீடியோவில் பேசி உள்ளார். பின்னர் வீடியோவை அந்த பகுதியில் உள்ள ஒருநபருக்கு அனுப்பி இருக்கிறார்.
இரவு வெகுநேரத்துக்கு பிறகு வீடியோ அனுப்பியதால் அந்த நபர் உடனடியாக வீடியோவை பார்க்கவில்லை. இன்று அதிகாலை தான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் கமலேசும், அவரது மனைவி மற்றும் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் நோய் பாதிப்பு காரணமாகதான் அவர்கள் இறந்தார்களா அல்லது எதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.
- என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல.
ஜஸ்பிரித் பும்ரா தற்போது உலகின் மிகசிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.
இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு அளித்த பேட்டியில் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய பும்ரா, "நான் தீவிரமாக 2 விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஒன்று எனது குடும்பம், மற்றொன்று கிரிக்கெட். ஆனால் எனக்கு, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை விட என்னுடைய குடும்பம் முக்கியமானது. ஏனென்றால் குடும்பம் தான் நிலையானது என்பது உங்களுக்குத் தெரியும்,
என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. நான் அவர்களில் ஒருவன், ஒரு மனிதன்" என்று தெரிவித்தார்.
- குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்வது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும்.
- குடும்ப சுற்றுலா மூலம் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம்.
அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும்.
அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.
குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்
குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம். அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.
மன அழுத்தத்தை குறைக்கும்
பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.
குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.
உற்சாகத்தை தூண்டும்
குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும். தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.
- வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் தலைமை தாங்கி சங்கனாப்பேரி கிராம பஞ்சாயத்தில் உள்ள 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் கவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முகம்மது சாகுல் ஹமீது, ஆனந்த், சங்கனாப்பேரி பஞ்சாயத்து தலைவர் சமுத்திரவேல், விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் உணவு மற்றும் நுண்ணூட்ட சத்து விநியோகம் திட்டத்தின் கீழ் சுழற் கலப்பைகளை சங்கனாப்பேரி, திருமலாபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு வழங்கினார். திருமலாபுரம் விதைப் பண்ணைகளையும், தென்மலை மற்றும் ராமசாமி யாபுரம் பகுதி களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தரிசு நில தொகுப்பு திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- புதிய வாழ்க்கையை தொடங்கும்போது, பல மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.
- இளம் தம்பதியினருக்கு அத்தியாவசியமான நிதிசார் நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.
'திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பதில் ஆழமான அர்த்தம் அடங்கியுள்ளது. வெவ்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் வளர்ந்த இருவர், ஒன்றாக இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கும்போது, பல மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். அவற்றில் முக்கியமானது நிதி சம்பந்தமான நடவடிக்கைகள். பணம் செலவழிப்பதில் வெவ்வேறு வகையான பழக்கவழக்கங்களை கொண்ட இளம் தம்பதியினருக்கு அத்தியாவசியமான நிதிசார் நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.
சேமிப்பு : எதிர்காலத்திற்கான முதலீடாக உள்ள பாலிசிகள், வீடு-மனை வாங்குதல் மற்றும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய இருவரும் ஒன்றாக இணைந்து திட்டமிட வேண்டும். பணி ஓய்வு காலத்துக்கான சேமிப்பு மற்றும் இதர முதலீட்டு வாய்ப்புகளை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, சேமிப்புகளை இணைந்தோ அல்லது தனியாகவோ மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு பின்னர் கணவன் அல்லது மனைவிக்கு அவர்களது குடும்ப சொத்துக்களை நிர்வகிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது இருவரும் ஒற்றுமையாக விவாதித்து செயல்படுதல் அவசியம்.
பட்ஜெட் : வங்கி தவணைகள், வீட்டு செலவுகள், இதர செலவுகள், எரிபொருள், ஷாப்பிங் செலவு, பெற்றோருக்கு தரும் மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்ட பலவகை செலவு விபரங்களைத் தெளிவாக கணக்கிட்டு, மாதாந்திர மற்றும் வருடாந்திர பட்ஜெட் தயார் செய்து கொள்வது நல்லது. தம்பதிகள் அவர்களது வருமான வரி சம்பந்தமான கணக்குகளையும் இணைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
ஒருங்கிணைப்பு : திருமணத்துக்கு முன்னர் தனிநபராக மேற்கொண்ட நிதி முதலீடுகளை, மணமான பின்னர் ஒருங்கிணைப்பது அவசியம். ஏனென்றால், அவற்றால் நன்மை ஏற்படும் நிலையில், பிரச்சினை ஏதும் இருக்காது. அதற்கு மாறாக முதலீடு பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், தக்க ஆலோசனைக்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியருக்கிடையே மன உளைச்சல் உருவாகக்கூடும். குறிப்பாக, கணவன் அல்லது மனைவிக்கு நிலுவையில் இருந்த முந்தைய கடன் தவணை காரணமாக குடும்பத்தில் நிதிப் பற்றாக்குறை உருவாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எதிர்காலம் : குழந்தைப்பேறு, தொழில் முதலீடு, புதிய கடனுக்கான அவசியம், தனிநபர் காப்பீடு, விபத்து காப்பீடு, பணியிழப்பு போன்ற விஷயங்களில் தம்பதிகள் ஒருமித்த கருத்து கொண்டு, தெளிவாக திட்டமிட வேண்டும். நான்கு மாத வருமானத்தை, எதிர்கால அவசர செலவு நிதியாக 'லிக்விட்டி' முதலீடாக வைத்திருப்பது பாதுகாப்பானது.
நிதியுதவி : தம்பதியர் கலப்பு மணம் செய்து கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு அரசின் நிதியுதவி கிடைக்கும். மணமான இரண்டு ஆண்டுகளுக்குள் திருமண பதிவு சான்றிதழின் அடிப்படையில் அரசு திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
தீர்மானம் : பழைய நண்பர்கள், மணமாபுதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மைன பின்னர் கிடைத்த புது நண்பர்கள் ஆகியோர்களுடன் வார இறுதி விடுமுறை நாட்களில் செலவு செய்வது, கடனாக பணம் தருவது, இருவரது குடும்ப அங்கத்தினர்களுக்கு அவசர கடன் வழங்குவது, பண உதவி செய்வது போன்ற விஷயங்களில் இருவரின் ஒருமித்த முடிவே நல்லது.
- மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய குழுதலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலா ளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சின்னமேடு மீனவ கிராம மக்கள் 149 குடும்பங்களுக்கும், சின்னங்குடி மீனவ கிராம மக்கள் 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, மருதம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மதியழகன் மற்றும் சின்னமேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் மதியழகன், கனக்குபிள்ளை, குழந்தைவேல், சின்னங்குடி மீனவ பஞ்சாயத்தார்கள், திமுக பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.
- உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி.
- பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார்.
பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நகராட்சி பகுதியை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசுகையில்:-
பிளாஸ்டிக் கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், காடுகள் அழிப்பினாலும் பூமியில் மண், நீர், காற்று பாதிக்கப்படுகிறது.
இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
எனவே, பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும் என்றார்.
இதில் நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.
- குடும்பம் வழிவழியாக தந்தை, மகன் என தொடர்ந்து நடித்து நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழாஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்சனையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ளி திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.
தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடை பெறும்.
இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல.
இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.
மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை,மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.
தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது.
பாகவத மேளா நாடக விழா முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாட்டிய நாடகம் நடை பெற்றது.
துவக்கவிழா நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த தீனாபாபு, பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சி.கே.கரியாலி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் எஸ்.குமார் செய்திருந்தார்.
- அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை.
- வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள்.
தன் நலம் பேணாமல் குடும்பத்தினர் நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாளும் சுபாவம் கொண்டவர்கள் குடும்பத் தலைவிகள். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அவ்வப்போது பரிசுகளோ, இனிப்பு பண்டங்களோ கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது தங்கள் நலனில் குடும்பத்தினர் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் விதைக்கும். மேலும் உற்சாகத்துடன் செயல்படவும் அவர்களை தூண்டும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
* அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை. ஒப்பனை விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒப்பனை செய்வதற்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை என்ற மனக்கவலை அவர்களிடம் இருக்கும். அவர்கள் செய்யும் எளிய ஒப்பனையை பாராட்டினாலே குஷியாகிவிடுவார்கள். 'உன்னுடைய ஹேர் ஸ்டைல் வழக்கத்தைவிட ஸ்டைலாக இருக்கிறது, உன் முகமும் இன்னைக்கு பொலிவாக இருக்கிறது' என்று பாராட்டுவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.
* புது ஆடை உடுத்தும்போது கணவர் ஏதாவது கருத்து சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் மேலோங்கும். அதனை புரிந்து கொண்டு 'இந்த ஆடை உனக்கு சூப்பராக இருக்கிறது, உன் வயதும் கொஞ்சம் குறைந்துவிட்டது போன்று தோன்றுகிறது' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
* திருமணமான பிறகு உடல் எடை சற்று அதிகரிப்பது இயல்பானதுதான். பெண்கள் பலர் அதனை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று திட்டமிடுவார்கள். ஒவ்வொரு நாளும் எடையை குறைக்கும் முயற்சிகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபடுவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 'நீ பயிற்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே மாற்றம் தெரிய தொடங்கி இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும் போலிருக்கே' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்தும். உடல் எடையை இன்னும் குறைப்பதற்கான பயிற்சிகளில் தீவிரமாக களமிறங்கிவிடுவார்கள். உடற்பயிற்சியாளர்களின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்பதையும் அவர்களிடம் கூறிவிடுங்கள். அதற்கான ஏற்பாடுகளை நீங்களே முன்னின்று மேற்கொள்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.
* உண்மையான வயதை காட்டிலும் வயதை சற்று குறைத்து பேசுவதும் பெண்களை உற்சாகப்படுத்தும்.
* வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள். காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ துணையுடன் பயணம் மேற்கொள்வதும் அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். விடுமுறை காலங்களில் ஓரிரு நாள் வெளி இடங்களுக்கு சென்று வரும்படியான சுற்றுலா பயணங்களை திட்டமிடுங்கள். அவர்களின் பள்ளி, கல்லூரி பருவ காலத்தில் சென்றிருந்த இடமாக அது இருந்தால் இன்னும் சந்தோஷமடைவார்கள். தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஆர்வமுடன் கேட்க தொடங்கினால் குதூகலமாகிவிடுவார்கள்.
* பிறந்தநாள், திருமண நாளின்போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை, அவர்கள் எதிர்பார்க்காத பரிசுகளை கொடுத்தாலோ உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.
- கூட்ட நெரிசலில் சிக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
- முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரைபுதூரை சேர்ந்த சந்திரன் (வயது 55) என்பவர் மதுரை கலெக்டர் அலுவல கத்தில் உறவினர்களுடன் வந்து இன்று மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கணேஷ்பிரபு, சுதாகர் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கணேஷ்பிரபு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சுதாகர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
அவர் கடந்த 5-ந்தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண்பதற்காக நண்பர்களுடன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் வைகை ஆற்றில் விழுந்து இறந்து விட்டார்.
சுதாகர் எங்களை நல்லமுறையில் பாதுகாத்து பராமரித்து வந்தார். அவர் இறந்து விட்டது எங்களுக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே எங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனது மகன் இறந்ததற்கு தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






