என் மலர்
நீங்கள் தேடியது "Husband wife"
- தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
- மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.
பலரும் எழுந்து ஓடிவந்தனர். வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, பலரும் கதவைத் தட்டினர்.
சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள்.
நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.
மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார் அவர். தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார்.
- குஷ்பு அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.
மத்தியப் பிரதேசத்தின் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கார்கோன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குஷ்பூ பிப்லியா (23) போலீசில் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான நாளிலிருந்தே கணவர் என்னை துன்புறுத்தத் தொடங்கினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குடிபோதையில் இருந்த கணவர், முதலில் என்னை கண்மூடித்தனமாக அடித்தார். பின்னர் சமையலறைக்கு இழுத்துச் சென்று கால்கள் மற்றும் கைகளைக் கட்டினார்.
சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார். வலியால் அலறியபோது கொதிக்கும் கத்தியை என் வாயில் வைத்து துன்புறுத்தினார்.
"எனது பெற்றோர் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர், எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை" என்றும் கூறி என்னை தொடர்ந்து தாக்கினார்.
தாக்குதல் நடந்தபோது வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்" என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் குஷ்பு எப்படியோ அங்கிருந்து தப்பித்து, வீட்டு வேலைக்காரரின் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் குஷ்புவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குஷ்புவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
வரதட்சணை கேட்டும் தனது மகளை பிடிக்கவில்லை என்றும் மருமகன் துன்புறுத்தியுள்ளான். அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குஷ்புவின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார் .இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கொண்டுவராத மனைவியை கணவன் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும்.
உடல் பருமனாக இருக்கும் பெண்கள் நிறைய பேருக்கு, பாலியல் உறவின்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையால் அதிகமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
கருத்தரிப்பதற்கு தாம்பத்திய உறவு சரியாக இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் ஏற்படும்.
அவர்களுக்கு உடல் பருமனை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அவர்களுக்குள் ஒரு எதிர்மறை உணர்வு உருவாகும் நிலையில், கண்டிப்பாக தாம்பத்திய உறவில் பிரச்சனை வரும். அப்படி இருக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். மேலும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துதல், மன அழுத்தத்தை உருவாக்குதல் ஆகியவையும் கருத்தரிப்பதை பாதிக்கும்.
இவை தவிர உடல் பருமனால் பல பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பாதிப்பு சர்க்கரை வியாதி. ஏனென்றால் கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு குளுக்கோஸ் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதால், பல நேரங்களில் இந்த பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சனை வரும், ஒருவேளை கருத்தரித்தால்கூட, கரு வளரும்போதும் பிரச்சனை வரும். மேலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இந்த பெண்களுக்கு முட்டைகளின் தரம் குறைவாகும்.
ஏனென்றால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகமாகும்போது, அதில் இருந்து வருகிற சில ரசாயனங்களால் கரு முட்டைகளுக்கான குரோமோசோம்களில் உள்ள இணைப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு, அதனால் கரு முட்டைகளின் தரம் பாதிக்கப்படும்.
சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சிலருக்கு இருதய நோய் ஏற்படலாம். மேலும் சில பெண்களுக்கு உடல் பருமன் அதிகமானால் மன அழுத்தம் ஏற்படும். இதுவும் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.
உடல் எடை குறைவாகும்போது அவர்களுக்குள் ஒரு நேர்மறை சிந்தனை வரும். அவர்களின் தாம்பத்திய உறவில் முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலமாக கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் அதிகமாகும்.
- கணவர்-மனைவி இருவரும் தங்களது பிரச்சனைகளை பேசித்தீர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
- திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று சேருவது.
புதுடெல்லி:
சிங்கப்பூரில் வசித்து வரும் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி அவரை பிரிந்து ஐதராபாத்தில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, இளைய மகனின் பிறந்தநாள் 23-ந் தேதி வருவதால், அதை கொண்டாட கணவர் இந்தியா வந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பெண், காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்.
அவரிடம், கணவர்-மனைவி இருவரும் தங்களது பிரச்சனைகளை பேசித்தீர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
அந்த பெண், தனது கணவர் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பவில்லை என்றும், தனக்கு ஜீவனாம்சம் கூட அளிக்கவில்லை என்றும் கூறினார்.
நீதிபதிகள், ''நீங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிங்கப்பூரில் கணவருடன் வாழ்வதில் என்ன பிரச்சனை?'' என்று கேட்டனர்.
அதற்கு அப்பெண், ''கணவரின் செயல்பாடுகளை பார்த்தால், அவருடன் சிங்கப்பூரில் வாழ்வது கடினம். வாழ்வாதாரத்துக்கு வேலை தேவை'' என்று கூறினார்.
நீதிபதிகள், ''வேலை கிடைக்கிறதோ, இல்லையோ நீங்கள் அங்கு சென்றால் உங்களை அவர் பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால், உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பணம் டெபாசிட் செய்யுமாறு கணவரிடம் கேட்கலாம்'' என்று கூறினர்.
அந்த பெண்ணோ, ''நான் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை'' என்று கூறினர்.
அப்போது நீதிபதிகள் அவருக்கு அறிவுரை கூறினர். அவர்கள் கூறியதாவது:-
எங்களை பழைய ஆள் என்று நினைத்தாலும் பரவாயில்லை. திருமண உறவு நீடிக்கும்போது, கணவரோ, மனைவியோ தாங்கள் அடுத்தவரை சார்ந்திருக்க விரும்பவில்லை என்று சொல்வது சாத்தியமில்லை. யாராவது சுதந்திரமாக இருக்க விரும்பினால் அவர்கள் திருமணமே செய்திருக்கக்கூடாது.
திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று சேருவது. பிறகு எப்படி நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்?
நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். குழந்தைகள் வேறு சிறிய வயதில் உள்ளனர். அவர்கள் உடைந்த குடும்பத்தை பார்க்க வேண்டுமா? அவர்கள் என்ன தவறு செய்தனர்?
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அந்த பெண், இதுபற்றி சிந்திப்பதாக தெரிவித்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை கணவரிடம் ஒப்படைக்குமாறு மனைவிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனைவி மற்றும் குழந்தைகளின் செலவுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செலுத்துமாறு கணவருக்கு உத்தரவிட்டனர்.
- துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது.
- நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மனிதர்களாகிய அனைவரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறைபாடுடையவர்கள்தான். ஆனால் துணையின் குறைபாடு பற்றியோ, அவரின் எரிச்சலூட்டும் பழக்கவழக்கங்கள் பற்றியோ மற்றவர்களிடம் பேசுவது சரியாக இருக்காது. அதுபற்றி அவருக்கு தெரியவரும்போது அவமானமாக உணரலாம்.
தன்னுடைய குறையை மற்றவர்களிடம் பகிரங்கப்படுத்தி தன்னை அவமதிப்பதாக கருதலாம். எந்த சந்தர்ப்பத்திலும் துணையின் குறையை சுட்டிக்காட்டி மனம் நோகச்செய்யக்கூடாது. மற்றவர் முன்னிலையில் தன்னை மதிப்புடன் நடத்தவில்லை என்ற உணர்வை அவரிடத்தில் ஏற்படுத்திவிடும். அவரிடம் தென்படும் குறைகளை நிதானமாக புரியவைத்து திருத்துவதற்குத்தான் முயற்சிக்க வேண்டும். மனைவியிடம் குறையே இருந்தாலும் மற்றவர் முன்னிலையில் பாராட்டி பாருங்கள். அவர் தன் தவறை சரி செய்து, எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்பதை அடுத்த முறை நேரடியாகவே தெரிந்து கொள்ளலாம்.
கடந்த காலம்
துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது. அதை உங்களை நம்பி பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை பற்றி மற்றவர்களுடன், குடும்பத்துடன் கூட விவாதிப்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். துணையை சங்கடப்படுத்தலாம். துணையின் தனிப்பட்ட தகவல்களை, அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனஸ்தாபத்தை உண்டாக்கி விடும்.
ஆளுமை
துணையின் செயல்பாடுகளை விமர்சிப்பது, கேலி செய்வது அவமரியாதைக்குரிய செயலாகும். அதனை மற்றவர்கள் முன்னிலையில் திரும்ப திரும்ப விமர்சனம் செய்வது அவர் மீது எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கிவிடும். அதனை சரி செய்வது கடினம். உளவியல் ரீதியாக நீண்ட கால உறவுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும். துணையின் ஆளுமை திறனை அவமதிப்பதாகிவிடும். விமர்சனத்தை விட பாராட்டு மற்றும் புரிதலுக்கு முன்னுரிமை கொடுங்கள். துணை மனம் நெகிழ்ந்து போய்விடுவார்.
நிதிநிலை
துணையின் நிதி நிலைமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவருடைய தனியுரிமையை மீறுவதாக அமைந்துவிடும். கடன், வருமானம் அல்லது செலவு செய்யும் பழக்கம் எதுவாக இருந்தாலும் அதனை மற்றவர்களிடம் கூற வேண்டியதில்லை. துணை வீண் செலவு செய்வதாக கருதினால் அதுபற்றி அவரிடம் பேசி நிதி நிலையை சீராக கையாள ஊக்குவிக்க வேண்டும்.
அச்சம்
மனைவியின் ஆள் மனதில் அச்சத்தையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விஷயங்கள் புதைந்திருக்கும். அது ஒருவித பயத்தையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கி இருக்கும். நீண்ட நாட்களாக மனதை ஆட்கொண்டிருந்த அந்த விஷயங்களை தன் கணவரிடம் தெரிவித்து மன ஆறுதல் தேடி இருக்கலாம். அவர் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே அந்த விஷயங்களை கூறி இருக்கலாம்.
அவை மற்றவர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ தெரிந்திருக்க வேண்டியதில்லை. தெரியப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. அதனை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களிடம் கூறுவது கணவன் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். ஒரு துணை தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கணவரிடம் வெளிப்படுத்தும்போது உணர்ச்சி ரீதியான பாதுகாப்பையும் எதிர்நோக்குகிறார். கணவர் தனக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறார். அந்த நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
தகவல் தொடர்பு
எந்தவொரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவிற்கும் தகவல் தொடர்பு முதுகெலும்பாகும். நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி தகவல் தொடர்பு திறன் அவசியமானது. அது புரிதலை வளர்த்தெடுக்கும், தேவையற்ற மோதலை தடுக்கும். துணையிடம் எண்ணங்களையும் உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்தும்போது தவறான புரிதல்கள் மற்றும் அனுமானங்களை தடுக்கும்.
- திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது.
- தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம்.
திருமண பந்தம் என்பது வாழ்வின் இறுதி காலம் வரை நீடித்து நிலைத்திருக்கக்கூடியது. அதனை வலிமையாக கட்டமைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம். எந்த அளவுக்கு தம்பதியருக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவுகிறதோ அதற்கேற்ப இந்த அளவுகோல் அமையும், மாறுபடக்கூடும். ஆனால் இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட சில மணித்துளிகளே போதுமானதாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் உறவை வலுப்படுத்த மனைவி பற்றி மற்றவர்களிடமோ, குடும்ப உறவினர்களிடமோ ஒருபோதும் பகிரக்கூடாத உளவியல் ரீதியான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
அன்பு
திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது. வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை கடந்து உறவு நிலைத்திருக்க துணையின் மீது மரியாதை மற்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அவரிடம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
சண்டை
தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். அது கருத்து மோதலாகவோ, வாக்குவாதமாகவோ மாறி இருவரும் ஒருவருக்கொருவர் மணிக்கணக்கில் பேசிக்கொள்ளாமல் இருக்கலாம். அதுபற்றி நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கூறி ஆலோசனை கேட்பது நல்லதல்ல. ஆரம்பத்தில் அவர்களின் ஆலோசனை ஏற்புடையதாகவோ, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவோ தோன்றினாலும் அது நிரந்தர தீர்வை ஏற்படுத்திக்கொடுக்காது.
தம்பதியர் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் விவாதங்கள் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்வது துணையை பற்றிய அவர்களின் பார்வையை மாற்றிவிடும். துணை மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும். உளவியலாளர்களின் கருத்துபடி, தம்பதியருக்கிடையே மோதல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு அவர்களே தீர்வு காண வேண்டும். மூன்றாம் நபரிடம் பகிரும்போது துணை பற்றி பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களே அவர்களின் மனதில் பதியும். அல்லது ஒருதலைபட்சமாக இருவரில் யாராவது ஒருவருக்கு அவர்கள் ஆதரவு கரம் நீட்டலாம். அது தம்பதியருக்கிடையே விரிசலை அதிகரிக்க செய்துவிடும்.
- 5, 8, 10 வயது மகள்களுக்கு பூச்சிக்கொல்லி கலந்த உணவை வழங்கியுள்ளார்.
- குழந்தைகளின் உடலில் விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து, தனது மூன்று சிறு குழந்தைகளுக்கும் விஷம் வைத்துக் கொன்ற 27 வயது தாய் கைது செய்யப்பட்டார்.
தானேவை சேர்ந்த சந்தியா சந்தீப் என்ற அந்தப் பெண், ஜூலை 20 அன்று, தனது 5, 8, 10 வயது மகள்களுக்கு பூச்சிக்கொல்லி கலந்த உணவை வழங்கியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் இருவர் ஜூலை 24 மற்றும் 25 ஆம் தேதிகளிலும், மற்றொரு குழந்தை ஜூலை 24 ஆம் தேதியன்றும் உயிரிழந்தனர்.
முதலில் விபத்து மரணமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சனிக்கிழமை இரவு வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைகளின் உடலில் விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. தாய் சந்தியா இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
கணவரின் குடிப்பழக்கம் மற்றும் குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாகவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீசிடம் அளித்த புகாரில் தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர் என்றார்.
- சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
போபால்:
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள கன்வான் காவல்நிலையப் பகுதியில் வசித்து வருபவரின் மனைவி இந்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு போலீசார் அதை 'பூஜ்ய' எப்.ஐ.ஆர் ஆக பதிவுசெய்து தார் காவல்துறைக்கு அனுப்பினர்.
அந்தப் புகாரில், தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர். சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடனில் மூழ்கிய கணவர் தனக்கு பணம் கொடுத்த தனது நண்பர்களில் ஒருவருடன் உடல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கணவர் ஒருவர் தனது மனைவியை ரூ.50,000 கடனை அடைக்க தனது நண்பருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அதன்பின், அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
- விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார்
- சம்பவத்தன்று, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெண் தனது மாமியாரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஆதர்ஷ் காலனியில் வசிப்பவர் விஷால் பத்ரா. இவரது மனைவி நீலிகா. இவர்களுடன் விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார். இந்நிலையில் மாமியாரின் சொத்துக்களை தன்வசப்படுத்திக்கொண்டு அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு தனது கணவனை நீலிகா நச்சரித்து வந்துள்ளார்.
ஆனால் தாயின் உடல்நிலை கருதி விஷால் அதற்கு மறுத்துள்ளார். இதனால் விஷாலை மன ரீதியாகவும், உடல் ரீதியாவதும் நீலிகா துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.
தடுக்க வந்த விஷாலின் தாய் சரளாவின் தலை முடியை பிடித்து இழுத்து மருமகள் நீலிகா தாக்கியுள்ளார். இந்த சம்பவம் மொத்தமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து தாக்கப்பட்ட தாயும் மகனும் நீலிகா குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
- கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும்.
- மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர்.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ். அவர் மீது அவருடைய மனைவி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
அதில், தானும், கணவரும் அந்தரங்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர், தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும், இதர கிராமத்தினருக்கும் அவர் பகிர்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அதன்பேரில், பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின்கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் ஐகோர்ட்டில் பிரதும் யாதவ் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது வக்கீல் வாதிடுகையில், புகார் கொடுத்த பெண், பிரதும் யாதவ் சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர் என்றும், எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவுக்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறினார்.
அதை ஏற்காத கூடுதல் அரசு வக்கீல், சட்டப்படியான கணவர் என்றபோதிலும், அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிடவோ, மற்றவர்களுக்கு பகிரவோ அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார்.
இந்த வழக்கில், நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பு அளித்துள்ளார். பிரதும் யாதவ் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும். நெருக்கமான வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததன் மூலம், அவர் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை மீறிவிட்டார்.
நம்பிக்கையை மீறிய செயல், திருமண பந்தத்தின் அடித்தளத்தையே சிறுமைப்படுத்துகிறது. மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர்.
திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
- அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார்.
- அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை
டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் PGT நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் அன்விதா சர்மா (29 வயது). இவர் கடந்த 2019 இல் கௌரவ் கௌசிக் என்வரை மணந்தார். கௌசிக் தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு நான்கு வயது மகன் உள்ளான்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) அன்விதா சர்மா, 'சமைத்துவிட்டேன், சாப்பிடுங்கள் கௌரவ்' என கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டுதனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து தனது பெற்றோருக்கும், சகோதரருக்கும் அன்விதா நீண்ட வாட்சப் குறிப்பு ஒன்றை அனுப்பினார். அதில் தனது கணவன், மாமியார் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
"அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அது ஒருபோதும் போதவில்லை. அவர்கள் மாமியார் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு மருமகளை விரும்பினர்.

ஆனால் என் பெற்றோரும் சகோதரரும் எனக்கு அவர்களின் அளவுக்கு சமமாக முக்கியமானவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் என் கணவர் செய்தது போல் யாரும் என்னை இவ்வளவு கேலி செய்திருக்க முடியாது.
நான் செய்த எல்லாவற்றிலும் அவர் தவறுகளைக் கண்டுபிடித்தார். மாமியாரோ, வேலை செய்யும் பணிப்பெண்ணை மட்டுமே விரும்பினார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்து நடித்து சோர்வாக உணர்கிறேன். அவமானங்களை இனியும் தாங்க முடியாது.
என் கணவரால் எனது வங்கிக் கணக்குகள், காசோலை புத்தகம் மற்றும் அனைத்தையும் அணுக முடியும். தயவுசெய்து என் குழந்தையை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன், நீங்கள் அவரை உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை" என்று அன்விதா தனது பெற்றோருக்கு எழுதியுள்ளார்.

கோப்புப்படம்
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கௌஷிக் மற்றும் அவர்களது மகன் வெளியே சென்றிருந்தபோது அன்விஷா தூக்கிட்டு தற்கொலை செய்தார். அன்விதாவின் மெசேஜை பார்த்தவுடன், அவரது குடும்பத்தினர் உடனடியாக அன்விதாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.
ஆனால் அவர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. அவர்கள் கௌஷிக்கிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீடு திரும்பினார், ஆனால் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். வீட்டிற்குள் நுழைய ஜன்னல் கிரில்லை வெட்டினர் . உள்ளே சென்று பார்த்தபோது அன்விதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இந்நிலையில் மகளின் இறப்பு தொடர்பாக அவி அன்விதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், திருமணத்திற்குப் பிறகு, அன்விதாவின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினர்.
அவளுடைய முழு சம்பளம், காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் அவர்களே பெற்றுக்கொண்டனர். மார்ச் 16 அன்று, அவர்கள் என் மகளை கடுமையான உடல் மற்றும் மன ரீதியாகவும் துன்புறுத்தினர், இதனால் அவர் தற்கொலைக் குறிப்பு எழுதி, துயரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை அடுத்து அன்விதாவின் கணவர் கௌஷிக், மாமனார் மற்றும் மாமியாரை வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
- முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த உத்ரா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது.
- உத்ராவின் அண்ணன்கள் ஒலிமுத்து, சுடலைமணி, ஒலிமுத்துவின் மனைவி சுந்தரி, சுடலைமணியின் மகன் சேர்மலிங்கம் ஆகிய 4 பேரும் உத்ராவை எப்படி அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
களக்காடு:
பொதுவாக கணவன், மனைவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டால் மனைவி கோபித்து கொண்டு, தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக கணவர்கள், மனைவியை விட்டு பிரிந்து தாயார் வீட்டிற்கு செல்வது அதிகரித்து வருகிறது. இதை நிரூபணம் செய்யும் வகையில் நாங்குநேரி அருகே சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாங்குநேரி அருகே உள்ள தட்டான்குளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கோமதி (வயது63). சுப்பையா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
இவர்களது மகன் முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த உத்ரா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது. அவர்கள் இருவரும் அதே ஊரில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முருகனுக்கும், அவரது மனைவி உத்ராவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் மனைவியிடம் கோபித்து கொண்டு, அவரை விட்டு பிரிந்து தனது தாயார் கோமதி வீட்டிற்கு துணிமணிகளுடன் சென்று விட்டார்.
சம்பவத்தன்று கோமதி தனது வீட்டில் மகன்கள் முருகன், சித்திரை வேலு ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உத்ராவின் அண்ணன்கள் ஒலிமுத்து, சுடலைமணி, ஒலிமுத்துவின் மனைவி சுந்தரி, சுடலைமணியின் மகன் சேர்மலிங்கம் ஆகிய 4 பேரும் உத்ராவை எப்படி அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதையடுத்து முருகன் அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஒலிமுத்து உள்பட 4 பேரும் சேர்ந்து, கோமதி, அவரது மகன் சித்திரை வேலையும் கம்பால் சரமாரியாக தாக்கினர்.
மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த கோமதி, அவரது மகன் சித்திரவேல் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒலிமுத்து உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.






