search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பம்"

    • சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
    • தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

    குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.

    பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.

    கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.

    முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.

    சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.

    அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.

    • மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
    • ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும்.

    கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.

    ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும்.

    மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம். மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.

    தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும். பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும்.

    அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.

    சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.

    அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    • போலீசார்களுக்கு கடமைகள் எந்த அளவு முக்கியமோ, அதேபோல குடும்பமும் முக்கியம்.
    • உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்க செய்யும்.

    தஞ்சாவூர்:

    தமிழக டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற சங்கா்ஜிவால் முதல் முறையாக தஞ்சாவூருக்கு வந்தாா். பின்னா், தஞ்சாவூா் சரகத்துக்குள்பட்ட மாவட்டக் போலீஸ் சூப்பிரண்டுகள், துணைக் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினார் .

    அப்போது அவா் பேசியதாவது:

    தஞ்சாவூா் சரகத்து க்குள்பட்ட போலீ ஸார்களுக்கு கடமை கள் எந்த அளவு முக்கியமோ, அதேபோல அவா்களுடைய குடும்பமும் முக்கியம். இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் பணிகள் முடிந்த பிறகு குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் அக்கறை காட்ட வேண்டும்.

    அது உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கச் செய்யும்.

    போலீசார்கள் தங்களு டைய குறைகளை துறை ரீதியாக தொடா்புடை யது என்றால், தயங்காமல் என்னிடம் தெரியப்ப டுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி.காா்த்திகேயன், தஞ்சாவூா் சரகக் டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன், மாவட்டக் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூா்), சுரேஷ்குமாா் (திருவாரூா்), ஹா்ஷ்சிங் (நாகை), நிஷா (மயிலாடுதுறை) மற்றும் துணைக் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனா்.

    • நாங்கள் குடியிருக்கும் இடத்தை எங்களிடமே திருப்பி வழங்க வேண்டும் .
    • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    திருவையாறு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு பேரூராட்சி இரண்டாவது வார்டில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் சுமார் 16 குடும்பங்கள் கடந்த 70 வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டிற்கும் முறையாக அரசிற்கு வரி செலுத்தி வருகிறோம்.

    நாங்கள் குடியிருக்கும் தெருவிற்கு சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எங்களின் பல குடும்பங்களுக்கு பசுமை வீடுகளையும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் அனைவரும் விவசாய தின கூலி .

    இந்நிலையில் திருவையாறு சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கு எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சாலை விரிவாக்கம் செய்து வருகிறது.

    நாங்கள் குடியிருக்கும் தெருவில் எங்களின் வீடுகளுக்கு அருகாமையில் சுற்றுவட்ட பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அரசு அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர்.

    இதனால் எங்களில் சுமார் 15 குடும்ப ங்களின் வீடுகள் மற்றும் எங்கள் கிராமத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே நாங்கள் குடியிருக்கும் இடத்தை எங்களிடமே திருப்பி வழங்க வேண்டும் .

    எங்களது இடத்தின் அருகே ஏராளமான காலியிடங்கள் உள்ளது.

    இந்த இடத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய சாலை அமைத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
    • உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும்.

    பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.

    எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் – மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

    மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் – மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.

    கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.

    கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.

    பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.

    • நம்பிக்கையுள்ள பெண்கள் ஆண்களை அதிகம் ஈர்க்கிறார்கள்.
    • தங்களின் பெண் துணையிடம் தேடும் அந்த குணங்கள் குறித்து இங்கு காண்போம்.

    இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெரிய விஷயமல்ல. பெண்கள் தங்கள் துணை தங்கள் மீது அக்கறை உள்ளவராகவும், புத்திசாலித்தனமிக்க ஆளுமையுடையவராகவும் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத் தேடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதுகுறித்து இங்கு காணலாம். அதாவது, பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர். மேலும். திருமணத்திற்கு முன் காதலிக்கும்போது இதனை ஆண்கள் தேடுகின்றனர். இதுகுறித்து இங்கு முழுமையாகதெரிந்துகொள்ளலாம்.

    பெண்கள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்பவராக இருந்தால், அவர்கள் மிகவும் தைரியமாக வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். தனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். அவர்கள் தாங்களாகவே பெரிய முடிவுகளை எடுக்க வல்லவர்கள். அத்தகைய பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள், அவர்களுடன் நட்புக்கொள்ளவும், காதலிக்கவும் கொள்ள விரும்புகிறார்கள்.

    ஆண்களைப் போல சத்தமாக சிரித்து, ஃபன் செய்ய விரும்பும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால், சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி போன்று இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய பெண்களிடம் ஆண்கள் மிக விரைவாக ஈர்க்கப்படுகிறார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் கலகலப்பான பெண்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறார்.

    ஒரு சிலரை பார்த்தவுடன் ஈர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், அவர்கள் உடற்தகுதியை பராமரிக்கும் பெண்களாக இருந்தால் ஆண்கள் அவர்களை விரும்புகின்றனர். உண்மையில், ஆண்களின் முதல் கவனம் பெண்களின் உடல் தோற்றத்தில் மட்டுமே செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தங்கள் உடலைப் பராமரிக்கும் பெண்கள் ஆண்களின் இதய ராணியாக மாறுகிறார்கள்.

    நம்பிக்கையுள்ள பெண்கள் ஆண்களை அதிகம் ஈர்க்கிறார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் சீக்கிரம் பதறாத பெண்ணை ஆண்கள் விரும்புகிறார்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நேரம் செலவழிக்கும் பெண்கள் குறித்து ஆண்கள் பெருமைப்படுகிறார்கள். அத்தகைய பெண்கள் தங்கள் திறமையால் விரைவில் அனைவருக்கும் பிடித்தவர்களாக மாறுவார்கள்.

    சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். அத்தகைய பெண்களுடன் நட்பு கொள்ள ஆண்கள் தயங்குவதில்லை. அத்தகைய பெண்கள் தானாகவே ஆண்களின் கவர்ச்சிகரமான பட்டியலில் சேர்ந்துவிடுவர்கள். பெண்மை என்பதை விட விரைவான புத்திசாலித்தனமான பெண்களையும் ஆண்கள் விரும்புகிறார்கள்.

    • காலை 6 மணி முதல் 9 மணி வரை குமரன் கல்லூரி அருகில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.
    • திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாநகர் தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சியின் 2023-2024 வரவு செலவு கூட்டத்தில் அறிவித்தபடி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை மங்களம் சாலை,எஸ்.ஆர்.நகர், குமரன் கல்லூரி அருகில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை பாதுகாக்கவும், பொது மக்கள் இளைப்பாறும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய சிறப்பான பொழுது போக்கு திருநாளாக மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.

    இதில் தி.மு.க. மாநில,மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள்,தொ.மு.ச.நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.
    • எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது.

    மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசாத காரணத்தால் பல உறவுகள் பிரிவுகளை சந்திக்கின்றன. மற்றவர்கள் தங்களை நிராகரித்து விடுவார்களோ என்ற பயத்தாலும், தயக்கத் தாலுமே பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.

    எந்த உறவிலும் கருத்து பரிமாற்றம் அவசியமான ஒன்று. இதன் மூலம் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். சரியான நேரத்தில் வார்த்தைகள் மூலம் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உறவுகளுக்கு வழிவகுக்கும். உறவுகளுக்குள் கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில காரணங்கள் இங்கே:

    ஒருவருடன் மனம் திறந்து பேசுவது மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது மூலமாக அவருடைய ஒழுக்கம், மதிப்பு, விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் அந்த நபருடனான உறவை மேலும் இணக்கமாக்கலாம். கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்வதால், தவறான புரிதல்களைத் தவிர்க்க முடியும். எனவே உங்கள் மனதில் தோன்றும் நியாயமான எண்ணங்களை வெளிப்படையாக சொல்லுங்கள்.

    ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை மற்றவர் உணராமல், வருத்தப்படும் படி நடந்து கொள்ளலாம். வெளிப்படையான கருத்து பரிமாற்றத்தால், இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான, நேர்மறையான மற்றும் திருப்திகரமான உறவை உருவாக்க முடியும். எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது. குறுஞ்செய்தி மூலம் விவாதிப்பதையும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போது பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

    சரியான நேரத்தைக் கண்டறிந்து பேசுவது முக்கியமானது. அன்பு, பாராட்டு மற்றும் மகிழ்ச்சி போன்ற நேர்மறை உணர்வுகளை அனைவரும் விரும்புவார்கள். எந்த உறவிலும் இத்தகைய உணர்வுகளை வெளிப்படையாக பகிர்தல் முக்கியமானது. அவ்வாறு இல்லாமல் உங்கள் மனதில் இருப்பதை மற்றவர்கள் அவர்களாகவே புரிந்துகொள்வார்கள் என்று சொல்லாமல் இருப்பது கூடாது. குறிப்பாக கணவன்-மனைவி உறவில் இது போன்ற உணர்வுகளை துணையுடன் பகிர்ந்துகொள்வது உறவை மேலும் வலுப்படுத்தும்.

    அன்பையும், விசுவாசத்தையும் அதிகரிக்கும். இந்த வகையான உணர்வுகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்மறை உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறையான உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது, உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கும். பிரச்சினைகளை சேர்ந்து எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.

    ×