search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் 34 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
    X

    சந்திப்பின்போது குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முன்னாள் பள்ளி மாணவர்கள்.

    ஆலங்குளத்தில் 34 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

    • முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் கலந்து கொண்டு பள்ளி நண்பர்களுடன் கலந்துரையாடினர்.
    • தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் பெருமைகள் குறித்து பேசினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1989-ம்ஆண்டு படித்த முன்னாள் மாணவ ர்களின் மறு சந்திப்பு நிகழ்ச்சி ஆலங்குளம்-துத்திகுளம் சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    50 முன்னாள் மாணவர்கள்

    நிகழ்ச்சிக்கு டெல்லி ஐ.ஐ.டி. கணிதவியல் துறை பேராசிரியர் டாக்டர் தர்மராஜ் தலைமை தாங்கி னார். பேராசிரியர் லட்சுமண பாண்டியன், கோவை சித்த மருத்துவர் சண்முக பாண்டி யன், ஆசிரியர் சாமுவேல், விவசாயி மகிழம்பூ, சென்னை மாநகரா ட்சி நடுநிலைப்பள்ளி தலை மை ஆசிரியை கலா சாந்தகு மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாண வர் ஜேம்ஸ் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் பள்ளி நண்பர்களுடன் பழைய நினைவுகளையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் பகிர்ந்து கலந்துரை யாடினர். மேலும் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரிய ர்களின் பெருமைகள் குறித்து பேசினர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர்களாக தர்மராஜ், கலா சாந்தகுமாரி, மகேஷ், நாதன், ஜேம்ஸ், நமச்சிவாயம், லட்சுமண பாண்டியன் ஆகியோர் செயல்பட்டனர்.

    Next Story
    ×