search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத்தோடு பொங்கலிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
    X

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய காட்சி.

    குடும்பத்தோடு பொங்கலிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

    • நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாட்டம்
    • குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குடும்பத்தோடு இன்று பொங்கலிட்டு மகிழ்ந்தார். அவர் தமி ழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். அவருடன் போலீஸ் அதிகாரிகள் குடும்பத்தினரும் பொங்க லிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு உற்சாகமடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் துறையில் பணிபுரியும் காவலர்கள் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகள் ஏராளமானோர் ஆர்வமாக வந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    Next Story
    ×