என் மலர்
நீங்கள் தேடியது "பொங்கல்"
- சிவகார்த்திகேயனின் 25வது படம்.
- முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஃபசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் வெளியாகும் நிலையில், அதற்கு போட்டியாக ஜன.10 வெளியாகிறது பராசக்தி.
- பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
- இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதுரை:
பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.
இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.
பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும்.
- சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 25, 27, 29, 31 மற்றும் ஜனவரி 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டி செல்லும்.
மறுமார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.
இதேபோல மேற்கண்ட நாட்களில் ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஊட்டியில் இருந்து மதியம் 2.50, மாலை 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் குன்னூர் செல்லும். மறுமார்க்கத்தில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 10.45 மணிக்கு ஊட்டி செல்லும்.
மேலும் வருகிற 25, 26, 27, 28, 29, 30, 31 மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 16, 17, 18, 24, 25, 26-ந்தேதி வரை குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். அதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.
ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அவற்றில் முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். பின்னர் அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
இரண்டாவது சுற்று 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
- ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், 17-ம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில், ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
IRCTC, இணையதளம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாக பயணியர் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டார். அதில் சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்கள் வருமாறு:-
| எண் | விடுமுறை நாட்கள் | தேதி | கிழமை |
| 1 | ஆங்கில புத்தாண்டு | 1.1.2026 | வியாழன் |
| 2 | பொங்கல் | 15.1.2026 | வியாழன் |
| 3 | திருவள்ளுவர் தினம் | 16.1.2026 | வெள்ளி |
| 4 | உழவர் திருநாள் | 17.1.2026 | சனி |
| 5 | குடியரசு தினம் | 26.1.2026 | திங்கள் |
| 6 | தைப்பூசம் | 1.2.2026 | ஞாயிறு |
| 7 | தெலுங்கு வருட பிறப்பு | 19.3.2026 | வியாழன் |
| 8 | ரம்ஜான் | 21.3.2026 | சனி |
| 9 | மகாவீர் ஜெயந்தி | 31.3.2026 | செவ்வாய் |
| 10 | ஆண்டு வருட கணக்கு | 1.4.2026 | புதன் |
| 11 | புனித வெள்ளி | 3.4.2026 | வெள்ளி |
| 12 | தமிழ் புத்தாண்டு /அம்பேத்கர் பிறந்தநாள் | 14.4.2026 | செவ்வாய் |
| 13 | மே தினம் | 1.5.2026 | வெள்ளி |
| 14 | பக்ரீத் | 28.5.2026 | வியாழன் |
| 15 | முகரம் பண்டிகை | 26.6.2026 | வெள்ளி |
| 16 | சுதந்திர தினம் | 15.8.2026 | சனி |
| 17 | மிலாது நபி | 26.8.2026 | புதன் |
| 18 | கிருஷ்ண ஜெயந்தி | 4.9.2026 | வெள்ளி |
| 19 | விநாயகர் சதுர்த்தி | 14.9.2026 | திங்கள் |
| 20 | காந்தி ஜெயந்தி | 2.10.2026 | வெள்ளி |
| 21 | ஆயுத பூஜை | 19.10.2026 | திங்கள் |
| 22 | விஜய தசமி | 20.10.2026 | செவ்வாய் |
| 23 | தீபாவளி | 8.11.2026 | ஞாயிறு |
| 24 | கிறிஸ்துமஸ் | 25.12.2026 | வெள்ளி |
- தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
காஞ்சிபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட பட்டுப்புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் முக்கியமான ஒன்றான முருகன் கூட்டுறவு சங்கம் அதன் விற்பனை நிலையத்தை எண்ணைக்கார தெருவில் உள்ள சொந்த இடத்தில் புதுப்பொலிவுடன் புனரமைத்துள்ளது. இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் மற்றும் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ., முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் அணிந்து மகிழ்கிறார்கள்.
மேலும், இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலைகள் நவம்பர் 15-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நெசவாளர்களுக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை கூலி கிடைக்கிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுமுதல் ஆண்டிலேயே ரூ.9 கோடி லாபம் ஈட்டியது, 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டு வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.
இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.
- கரகாட்டம், காவடி, வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது.
- பொங்கல் விழாவை, நொய்யல் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது
திருப்பூர்:
திருப்பூர் மாநகரின் மையப் பகுதியாக நொய்யல் நதி அமைந்துள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் விழாவை ஊர் மக்கள் கூடி நடத்தும் திருவிழாவாக நொய்யல் ஆற்றின் கரையில் நடத்த, திருப்பூர் நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆலோசனை மற்றும் விழாக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. வருகிற ஜனவரி 14, 15-ந் தேதிகளில், இந்த அமைப்பு சார்பில், பொங்கல் விழாவை, நொய்யல் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதில், தமிழர்களின் கலைகளாக உள்ள பறையாட்டம், வள்ளி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், களரி, சிலம்பாட்டம், திருவண்ணாமலை பெரிய மேளர், தேவராட்டம், கரகாட்டம், காவடி, வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது.
- வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.
- வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அல்லது ரேசன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறது.
சென்னை:
பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 1000 ரூபாய் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்தது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது.
இதில் உருண்டை வெல்லம் வழங்கியதில் பல இடங்களில் தரமான வெல்லம் வழங்கப்படாததால் புகார்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன.
இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.
வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அல்லது ரேசன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறது.
ஏனென்றால் இந்த பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்க பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இதுவரை கொள்முதல் செய்ய தற்போது வரை டெண்டர் விடப்படவில்லை.
இதன் காரணமாக இந்த ஆண்டு பண்டிகைக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் வழக்கமாக வழங்கப்படக்கூடிய பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பரிசுத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
- தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.
- கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
சென்னை:
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம. நாராயணன் தலைமையில் இன்று அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் புது அரிசியை புது பானையில் பொங்கலிட புதுப்பானையும், அடுப்பும் ரேசன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசித்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.
மண்பாண்ட தொழிற்பயிற்சி கல்லூரி ஒன்றை உருவாக்க வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதில் சங்க நிர்வாகிகள் பாவலர் கணபதி, மகேஷ் கண்ணன், எஸ்.என்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பது பற்றி முடிவு செய்தனர்.
- வருகிற 18-ந்தேதி (ஞாயிறு) பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ஜனதா உயர்மட்ட குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன், கரு.நாகராஜன் உள்பட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லி தலைமை வகுத்து கொடுத்த செயல்திட்டங்களை செயல்படுத்திய விபரம் பற்றி விவாதித்தனர்.
மேலும் தொகுதி வாரியாக நிலவும் பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான அணுகுமுறைகள் பற்றியும் விவாதித்தனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பது பற்றி முடிவு செய்தனர். வருகிற 18-ந்தேதி (ஞாயிறு) பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தைப்பொங்கல் பாரம்பரிய விழாவை விவசாய அணி, மகளிர் அணியினர் மண்டல் வாரியாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 1,300 மண்டலங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இதில் அந்த பகுதியில் உள்ள சமுதாய பெரியோர்களை அழைத்து கவுரவப்படுத்துதல், இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துதல், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவற்றுக்கு திட்டமிட்டுள்ளனர்.
- 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை.
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்கு பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது.
சென்னை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்தப் பொருட்கள் தரமற்றவை என்றும், 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
மொத்தத்தில், 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை என்றும், பயனடைந்தவை தனியார் நிறுவனங்கள்தான் என்றும், 1,200 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வண்ணமும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணாநகர், கபிலக்குறிச்சி, பிலிக்கல் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பொன்மலர் பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், அய்யம்பாளை யம், வடகரையாத்தூர், தண்ணீர் பந்தல், சோழசிராமணி, மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆலைகளில் கரும்புகளை இயந்திரம் மூலம் சாரு பிழிந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை என தயாரிக்கின்றனர்.
தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்கள் உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் இதை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட் டங்கள், பல்வேறு மாநிலங்களுக்கும் அனு ப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,150-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,270-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதி களில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






