என் மலர்
நீங்கள் தேடியது "பொங்கல்"
- பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு உடன் மூவாயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
சென்னையில் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டோக்கனில் பொங்கல் பரிசு தொகை பெறும் நேரம், தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
- பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் தயாராக இருந்தனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணத்ததால் விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் ஆண்டு தோறும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி 4 கிலோ பச்சரிசி, 1கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300கிராம் நெய், சமையல் எண்ணெய் 1 லிட்டர் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசின் கான்பெட் நிறுவனம் டெண்டர் விட்டது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று மாலை 4 மணிக்கு சண்முகாபுரத்தில் உள்ள ரேசன் கடையில் நடைபெறும் என்றும், இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்த கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் அனைத்தும் எடுத்து தயாராக வைக்கப்பட்டு இருந்தது. பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் தயாராக இருந்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணத்ததால் விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
பொங்கல் தொகுப்பு பொருட்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. இதனை அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை என துறை அதிகாரிகளை கண்டித்துள்ளார்.
மேலும் அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை இடம்பெற செய்து அவர்களுக்கு அழைப்பு விடுத்து விட்டு விழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
- ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவும் இன்று காலை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06054), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06053), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 9, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06156), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 9,16 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06155), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06158), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* கோவையில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06034), மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் சிறப்பு ரெயில் (06033), மறுநாள் காலை 9 மணிக்கு கோவை சென்றடையும்.
* போத்தனூரில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06024), அதேநாள் காலை 10.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06023), அதேநாள் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), அதேநாள் இரவு 11.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06106), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரெயில் (06105), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
இவை உள்பட மொத்தம் 10 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.
- ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது
- சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும்
செங்கல்பட்டில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தென்காசி சென்றடையும். தென்காசியில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கல்பட்டு வந்தடையும்
சென்னையில் இருந்து ஜனவரி 9 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தென்காசி சென்றடையும்.
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 21 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும்
பொத்தனூரில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கொட்டை சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கொட்டை சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மங்களூரு சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் கோவை சென்றடையும். கோவையில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் சென்னை வந்தடையும்
சென்னையில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் போத்தனூர் சென்றடையும். போத்தனூரில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 21 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் சென்னை வந்தடையும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்;
- தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்.
சென்னை:
தமிழக அரசின் 'சி' 'டி' பிரிவு பணியாளர்களுக்கும், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஓய்வூதியர்களில் யார் யாருக்கு போனஸ் தொகை வழங்கப்படும்? என்பதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலாமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித்தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள்; தற்காலிக மிகை ஊதியம், சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்;
'ஏ', 'பி' பிரிவு பதவிகளிலிருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்திந்தியப் பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த போனஸ் உத்தரவு பொருந்தாது.
இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, கடந்த 1-ந்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு. அனுமதிக்கத்தக்கதல்ல.
'சி', 'டி' பிரிவு பணியாளர்களாக பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுவோர், மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் அதாவது 1-10-2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம்பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள்,
சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உள்பட அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் (அதாவது ஓய்வூதியதாரர்கள், எந்த பணியாளர் பிரிவில் ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது பணியிடையே மரணம் அடைந்திருந்தாலும்) அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியம் வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2024-25-ம் ஆண்டிற்கான C,D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, C,D பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 மிகை ஊதியமாகவும் C,D பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.
இதற்காக C,D பிரிவு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர், முன்னாள் கிராம அலுவலருக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓர் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்த உழவர்களுக்கு ரூ.3.25 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
- பன்னீர் கரும்பு உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அரசு தான் போக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தோ, அதில் பொங்கல் கரும்பு இடம் பெறுமா? என்பது குறித்தோ தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் என்பதை நம்பி பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பொங்கல் திருநாள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பொன்மொழி ஆகும். ஆனால், அரசை நம்பி பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு, ஆட்சியாளர்களால் இழைக்கப்படும் துரோகத்தால், தை பிறந்தால் வலி தான் பிறக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யப்படும் குளறுபடிகளால் ஆண்டுக்கு ஆண்டு வலி அதிகரிக்கிறது.
பொங்கல் கரும்புக்காக அரசால் நிர்ணயிக்கப்படும் விலை முழுமையாக உழவர்களுக்கு கிடைக்காததும், உழவர்களால் விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பு நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படுவதும் தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் ஆகும். ஒரு ஏக்கரில் சராசரியாக 20 ஆயிரம் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்ய முடியும். 20 ஆயிரம் கரும்புகளை நடவு செய்வதற்கு ரூ.80 ஆயிரம், அடுத்த 10 மாதங்களுக்கான வளர்ப்புச் செலவுக்கு ரூ.80 ஆயிரம் என ஏக்கருக்கு ரூ.1.60 லட்சம் செலவாகும். இது தவிர வெட்டுக் கூலி, கட்டுக் கூலி, ஏற்றுக்கூலி ஆகியவையும் உழவர்கள் தலையில் சுமத்தப்படுவதால், அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2.25 லட்சம் வரை செலவாகும்.
ஆனால், இவ்வளவு செலவு செய்து பன்னீர் கரும்பு சாகுபடி செய்தும் கூட உழவர்களுக்கு அவர்களின் உழைப்புக்கான கூலி கூட கிடைப்பதில்லை. காரணம், கொள்முதல் முறையில் உள்ள குளறுபடிகளும், ஊழல்களும் தான். ஒரு முழு கரும்புக்கான கொள்முதல் விலையாக போக்குவரத்து செலவினம், வெட்டு கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு ஆகியவற்றையும் சேர்த்து ரூ.35 வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்தக் கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்வதில்லை.
மாறாக, இடைத்தரகர்கள் மூலமாகத் தான் அரசு வாங்குகிறது. வெட்டுக்கூலி, கட்டுக் கட்டும் செலவு, ஏற்றுக்கூலி ஆகியவற்றையும் சேர்த்து ஒரு கரும்புக்கு ரூ.18 அல்லது ரூ.19 மட்டுமே உழவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்துச் செலவு, இறக்குக் கூலி ஆகியவற்றுக்காக மட்டும் ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.16 முதல் 17 வரை இடைத்தரகர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
உழவர்களிடம் இடைத்தரகர்கள் 20 ஆயிரம் கரும்புகளை கொள்முதல் செய்தால், அதில் 2 ஆயிரம் கரும்புகள் இலவசமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள 18 ஆயிரம் கரும்புகளுக்கு மட்டும் தான் விலை வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், ஓர் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்த உழவர்களுக்கு ரூ.3.25 லட்சம் மட்டுமே கிடைக்கும். அதில் ரூ.2.25 லட்சம் செலவு போனால், ரூ. 1 லட்சம் மட்டுமே மீதம் கிடைக்கும். அதில் நிலத்திற்கான குத்தகை, தண்ணீர் பாய்ச்சும் செலவு, முதலீட்டுக்கான வட்டி ஆகியவற்றையும் கழித்தால் உழவர்களுக்கு ஒரு பைசா கூட லாபம் கிடைக்காது. இத்தகைய சூழலில் பன்னீர் கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் திருநாள் எவ்வாறு இனிப்பாகவும், வலியின்றியும் இருக்கும்?
அதேநேரத்தில், உழவர்களிடமிருந்து பன்னீர் கரும்பை வாங்கி அரசுக்கு கொடுக்கும் இடைத்தரகர்களுக்கு ஒரு கரும்புக்கு ரூ.17 லாபம் கிடைக்கும். அத்துடன் இலவசமாக கிடைக்கும் 10% கரும்பையும் சேர்த்தால், ஒரு கரும்புக்கு சராசரியாக ரூ.20 கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 2.26 கோடி கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் நிலையில், ரூ.45 கோடி அவர்களுக்கு கிடைக்கும். அதை அவர்களும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பங்கிட்டுக் கொள்வதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆக, பொங்கல் கரும்பு வினியோகம் என்பது அதிகார வர்க்கத்திற்கும், இடைத்தரகர்களுக்கும் இனிப்பானதாகவும், உழவர்களுக்கு கசப்பானதாகவும் மாறிவிட்டது. திமுக ஆட்சியில் எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் தான் இதற்கு காரணம்.
உழவர்களின் துயரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. 6 அடிக்கும் குறைவான உயரம் கொண்ட கரும்புகளை கொள்முதல் செய்யக்கூடாது என்று அரசு அறிவித்திருப்பதால், 7 அடி உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், 7 அடி உயரத்திற்கு கரும்பை விளைவிப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. உயரம் குறைந்த கரும்புகளை அதிகாரிகள் நிராகரிப்பதால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொருபுறம் பொங்கலுக்கு குடும்ப அட்டைக்கு ஒரு கரும்பு மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது பொங்கல் திருநாளில் இரு கரும்புகளை வைத்து படையலிடும் வழக்கத்திற்கு எதிரானது என்பது மட்டுமின்றி, உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் 40 கோடி முதல் 50 கோடி கரும்புகள் விளைவிக்கப்படுகின்றன. இலவச கரும்பு வழங்கப்படுவதற்கு முன்பு வரை ஒவ்வொரு குடும்பத்தினரும் சராசரியாக 10 அல்லது 20 கரும்புகளைக் கொண்ட கட்டுகளை வாங்குவார்கள் என்பதாலும், பொங்கலுக்கு இரு வாரத்திற்கு முன்பும், இரு வாரத்திற்கு பின்பும் பொங்கல் கரும்புகளை மக்கள் வாங்கி சாப்பிடுவார்கள் என்பதால் விளைவிக்கும் கரும்பு முழுவதும் விற்பனையாகி விடும். உழவர்களுக்கும் லாபம் கிடைக்கும்.
ஆனால், இப்போது பன்னீர் கரும்பு பொங்கலுக்கு படைக்கும் பொருளாக மட்டும் மாறி விட்டதால், அரசால் கொள்முதல் செய்யப்படும் கரும்புகளைத் தவிர மீதமுள்ள கரும்புகளை வாங்குவதற்கு வணிகர்கள் முன்வருவதில்லை என்பதால் அவை வீணாகி உழவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன. பன்னீர் கரும்பு சாகுபடி தொடர்ந்து இழப்பை ஏற்படுத்துவதால், அது சாகுபடி செய்யப்படும் பரப்பு கடந்த ஐந்தாண்டுகளில் பல மடங்கு குறைந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பன்னீர் கரும்பு உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அரசு தான் போக்க வேண்டும். அதற்காக, நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் கரும்புகளின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும்; இடைத் தரகர்கள் இல்லாமல் அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்து, போக்குவரத்துச் செலவு, இறக்குக் கூலி தவிர மீதமுள்ள தொகை முழுவதும் உழவர்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
- இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
புதுடெல்லி:
பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தேர்வை வேறு ஒரு நாளில் மாற்றி நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன.
இந்நிலையில், ஜனவரி 15-ம் தேதி நடப்பதாக இருந்த தேர்வு மாற்றப்பட்டு உள்ளது என பட்டயக் கணக்காளர்கள் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி, ஜனவரி 15-ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 19ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தேதி மாற்றப்பட்டாலும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் செல்லுபடியாகும். மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தமது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பட்டயக் கணக்காளர்கள் கழகம் குறிப்பிட்டு உள்ளது.
- திமுக ஆட்சிக்கு வந்த பின் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஒருவர் கூட இந்த துறையில் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என மக்கள் நல சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:-
ஒப்பந்த செவிலியர்களுக்கு தொடர்ச்சியாக பணிநிரந்தரம் முதலை்மச்சரின் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்த பின் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மீதமுள்ள 8000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
ஒருவர் கூட இந்த துறையில் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவகார்த்திகேயனின் 25வது படம்.
- முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஃபசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் வெளியாகும் நிலையில், அதற்கு போட்டியாக ஜன.10 வெளியாகிறது பராசக்தி.
- பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
- இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதுரை:
பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.
இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.
பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும்.
- சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 25, 27, 29, 31 மற்றும் ஜனவரி 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டி செல்லும்.
மறுமார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.
இதேபோல மேற்கண்ட நாட்களில் ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஊட்டியில் இருந்து மதியம் 2.50, மாலை 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் குன்னூர் செல்லும். மறுமார்க்கத்தில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 10.45 மணிக்கு ஊட்டி செல்லும்.
மேலும் வருகிற 25, 26, 27, 28, 29, 30, 31 மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 16, 17, 18, 24, 25, 26-ந்தேதி வரை குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். அதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.
ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அவற்றில் முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். பின்னர் அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
இரண்டாவது சுற்று 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






