என் மலர்
நீங்கள் தேடியது "Pongal festival"
- ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பண்டிகை சீசனில் ரெயில் டிக்கெட் தேவை அதிகரிப்பதால், இந்திய ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் 60 நாட்கள் முன்பு முன்பதிவு வசதி வழங்குகிறது.
அந்த வகையில், ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலம் பயணிகள் முன்பதிவு செய்ததால் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.
- விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுபற்றி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இப்போது முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம்.
சட்டசபையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.15 கோடி மதிப்பில் வாங்கப்படுகிறது. இந்த பஸ் 15 மீட்டர் நீளம் உடையது. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில் 51 பேர் பயணம் செய்ய முடியும். அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம். சொகுசு படுக்கை வசதி, ஏ.சி. வசதி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வைபை, பயணிகளுக்கு தனிப்பட்ட ரீடிங் விளக்குகள் ஆகிய வசதிகள் இதில் இடம் பெறுகிறது.
ஆம்னி பஸ்களுக்கு இணையாக வாங்கப்பட்டு உள்ள வால்வோ பஸ் பொங்கலுக்கு பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது.
- விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுகு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்
அந்த வகையில், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை டெண்டர் கோரியுள்ளது.
டெண்டர் இறுதியானதும் ஜூலை மாத இறுதியில் வேட்டி,சேலை உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- கோவில் வளாகத்தில் கருப்பணசாமிக்கு ஆடு, கோழிகளும் பலியிட்டனர்.
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 19-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் 26-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டூர், அம்மாபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மேலும் திரளான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற கோவில் வளாகத்தில் உள்ள கருப்பணசாமிக்கு ஆடு, கோழிகளும் பலியிட்டனர்.
இதையொட்டி சென்னிமலை அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கம்பம் பிடுங்கப்பட்டு கோவில் கிணற்றில் விடப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் பொங்கல் வைத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- டிசம்பர் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறும்.
- 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் பொங்கல் வழிபாடு சிறப்பானதாகும். இந்த ஆண்டின் பொங்கல் வழிபாடு குறித்து கோவிலில் முக்கிய பூசாரி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி கூறியதாவது:-
நடப்பாண்டின் பொங்கல் வழிபாட்டு திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலை 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு ஆரம்பமாகும். அதை தொடர்ந்து நிவேத்தியம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச தீபாராதனை, மற்றும் அபிஷேகம், 6.30 மணிக்கு திருக்கார்த்திகை விளக்கு மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும்.
டிசம்பர் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறும். அன்று முதல் 27-ந் தேதி வரை 12 நோன்பு திருவிழா நடைபெறும் இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இரு முடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். டிசம்பர் 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறும். 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படு கிறது.
- மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் சின்னசேலம் சங்கரா புரம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்க ப்படு கிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்க லுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதி களில் மஞ்சள் கொத்து கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கல்யாணமான பெண்க ளுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீர் வரிசையில் முக்கியமாக பொருள்களாக விளங்கு வது மஞ்சள், கரும்பு பானை, அரிசி, வெள்ளம் இப்பொருள்களை வைத்து பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொடுப்பார்கள். இதில் முக்கிய பங்காற்றுவது மஞ்சள்.
இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, வெல்லம், மஞ்சள், இஞ்சி ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. சின்னசேலம் நயினார்பாளையம் கூகையூர் மூங்கில்பாடி, கல்லாநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பொங்கல் பண்டிகையை யொட்டி விற்பனை செய்யும் வகையில் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். தற்போது மஞ்சள் அறு வடைக்கு தயார் நிலை யில் உள்ளது. சென்ற ஆண்டை ப்போல இந்த ஆண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டும் நல்ல விலை கிடை க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
- 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது.
- 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம் தொடர்ந்து கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. 10.30 மணிக்கு கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிரதான அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி 20 கிமீ சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்பட்டது.
பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோவிலில் இம்மாதம் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறுகிறது. அன்று முதல் 27-ந் தேதி வரை நோன்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது. 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருப்பூர் :
நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில் நொய்யல் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக தடைபட்டிருந்த விழா இந்தாண்டு கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நிட்மா அலுவலகத்தில் நடந்தது.
மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிட்மா தலைவர் ரத்தினசாமி, ஜீவநதி நொய்யல் அமைப்பு செயலாளர் பொறியாளர் சண்முகராஜ், சலங்கையாட்ட குழுவை சேர்ந்த குமார், அருணாசலம், விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து நிட்மா தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:- நொய்யல் கரையில் பாரம்பரிய வழக்கப்படி தை பொங்கல் விழா ஜனவரி 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. காலை 6 மணி முதல்7மணிவரை 3000 பொங்கல் வைக்கப்படும்.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாலையில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உட்பட மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்கின்றனர். மாநகராட்சியுடன் இணைந்து நடக்கும் விழாவில் சலங்கையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஜனவரி 17-ந் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது
- திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். பின்னர் இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது
சென்னிமலை,
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது.
பின்னர் 30-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் நொய்யல், அண்ணாமலைபாளையம், புதுவலசு, சாணார் பாளையம், தாமரைக்காட்டுவலசு மற்றும் கோவிலை சேர்ந்த ஏழு கிராமத்து பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். பின்னர் இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.
இதேபோல் சென்னிமலை அருகே கே.ஜிவலசு அடுத்துள்ள புதுவலசு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.
- பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம்.
- ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
குடிமங்கலம்:
அறுவடைதிருநாளான பொங்கல் பண்டிகையின் போது விளைந்தும் விளையாத நிலையிலுள்ள பச்சை மஞ்சளை செடியுடன் கொத்தாக பொங்கல் பானையில் கட்டும் பழக்கம் உள்ளது. இதனாலேயே பொங்கல் பண்டிகையின் போது செங்கரும்புக்கு இணையான இடத்தை மஞ்சள் கொத்து பிடிக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து விற்பனை செய்யும் வகையில் மஞ்சள் சாகுபடியில் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொங்கலன்று முக்கிய இடம் பிடிக்கும் மங்கலப் பொருளான மஞ்சள் கொத்து சாகுபடி விவசாயிகளுக்கு மன நிறைவைத் தருகிறது. பெரும்பாலும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். உணவுக்காகவோ மற்ற பயன்பாட்டுக்காகவோ மஞ்சள் உற்பத்தி செய்யும்போது சுமார் 9 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். அதேநேரத்தில் பொங்கலுக்கு மஞ்சள் கொத்து உற்பத்தி செய்வதற்காக ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொண்டால் மார்கழி கடைசியில் அறுவடை செய்து விடலாம். வியாபாரிகள் நேரடியாக விளைநிலத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். மனதுக்கு மகிழ்ச்சி தரும் அதேநேரத்தில் நல்ல வருவாயும் தரக்கூடியதாக மஞ்சள் சாகுபடி உள்ளது.இவ்வாறு விவசாயிகள் கூறினார்.
- திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை.
அனுப்பர்பாளையம்:
ஜனவரி மாதம் 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், வேலம்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாத்திர பட்டறைகளில் பொங்கல் பானை உற்பத்தி சூடு பிடித்துள்ளது. அரை கிலோ முதல் 10 கிலோ வரை அரிசி பொங்கலிடும் வகையில் பானை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரமான தகடு, துல்லிய வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் ஆர்டரை செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளால் பலர் இங்கு ஆர்டர் கொடுக்க விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஆர்டர் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பு ஒரு கிலோ பித்தளை தகடு ரூ.270க்கும், கடந்த ஆண்டு ரூ.500 க்கும் விற்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.600 முதல் 650 வரை விற்கிறது. தகடை வெட்டி பானையாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வரும்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது. விலை அதிகம் என்பதால் மக்கள் பானை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். முன்பு மக்கள் பழைய பானை இருந்தாலும் பொங்கலிட புது பானை வாங்குவர்.
தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை. பழைய பானையை பாலிஷ் செய்து பயன்படுத்துகின்றனர் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். பொங்கல் பண்டிகைக்கு குறைந்த நாட்களே இருப்பதால் பெற்ற ஆர்டர்களுக்கு உரிய பானைகளை உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முன்பதிவு செய்ய வேண்டும்.
- tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
ஜனவரி 15 பொங்கல் பண்டிகையும், 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. தை பொங்கலுக்கு முந்தைய நாள் 14-ந்தேதி போகி கொண்டாடப்படுகிறது. ஆதலால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பே இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதால் அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எல்லா வகுப்புகளிலும் நிரம்பி விட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துவிடும் நிலையில் அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பஸ்களுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் இன்று முதல் அரசு விரைவு பஸ் களுக்கு முன்பதிவுக்கு திட்டமிடலாம்.
ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முன்பதிவு செய்ய வேண்டும். tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை போல பொங்கலுக்கும் பெருமளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முந்தைய முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. குறைந்த அளவில் தான் முன்பதிவு செய்துள்ளனர்.
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து புக்கிங் விறுவிறுப்பாக இருக்கும். முன்பதிவுக்கு தேவையான பஸ்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும். முதலில் அரசு விரைவு பஸ்களுக்கும் பின்னர் போக்குவரத்து கழக பஸ்களுக்கும் முன்பதிவு செய்யப்படும் பொங்கல் சிறப்பு பஸ்கள் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். சென்னை உள்ளிட்ட முக்கிய 3 நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளியை போல பொங்களுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






