என் மலர்
நீங்கள் தேடியது "pongal festival"
- இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன.
- நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தன.
சென்னை:
அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப் பொங்கல், 17-ந்தேதி காணும் பெங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இன்று முன்பதிவு செய்வோர் ஜனவரி 11-ந்தேதி பயணம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 120 நாட்களுக்கு முன்பாக பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு டிக்கெட் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாகவே ஏராளமானோர் மையங்களில் திரண்டிருந்தனர்.
மையங்கள் திறக்கப்பட்டவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதேபோல் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலானோர் இணையதளங்களில் முன்பதிவு செய்தனர். டிக்கெட் கவுண்டர்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் கூட்டம் இருந்தது.
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன. குறிப்பாக தென்மாவட்ட ரெயில்கள், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தன. ஏ.சி. வகுப்பு டிக்கெட் மட்டும் சில இருந்தன. ஜனவரி 12-ந்தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும்.
- தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கிவிடும்.
- ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், பஸ் மற்றும் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். எனவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களும், ரெயில்களும் இயக்கப்படும்.
இதேபோல, தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கிவிடும். அந்தவகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அதாவது ஜனவரி 11-ந்தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும், ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்ய நாளையும் (14-ந்தேதி), ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய 15-ந்தேதியும், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்பவர்கள் 16-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.
- ரெயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.
- பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி12-ந்தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை (செப்.13) முதல் விரைவு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அடுத்த ஆண்டு ஜன. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ந் தேதி பொங்கல், 16-ந் தேதி மாட்டுப் பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது.
ரெயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. அந்த வகையில், ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்ய நாளையும், ஜனவரி 12-ந்தேதிக்கு செப்.14-ந்தேதியிலும், ஜனவரி 13-ந்தேதிக்கு செப்.15-ந்தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். எனவே, பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி 12-ந்தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், முன்கூட்டியே சிலர் பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வாய்ப்புள்ள விரைவு ரெயில்களில் ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளோம்'' என்றனர்.
- பொங்கல் திருவிழாயொட்டி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
- தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி ஈரோடு ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் ஆடி மாதம் பொங்கல் திருவிழாயொட்டி கடந்த 3-ந் தேதி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணி அளவில் சங்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் பொங்கல் வைத்தலும், 8 மணிக்கு மகா அபிஷேகம் அதைத்தொடர்ந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வருகிற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
12 மணி அளவில் காமாட்சி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மகா தீபாரதனையும் தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் தாலிச் சரடு வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடைபெற்றது.
விழாவில் ஈரோடு, பவானி, அந்தியூர், கணக்கம்பாளையம், கோபி, பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு காமாட்சி அம்மனின் அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தார்கள்.
- கோவிலில் 14ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நடைபெற்றது.
- பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காவடி ஆட்டம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் ஏரி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர்.
பின்னர் மாவிளக்கு எடுத்து வந்து அலங்கார சிறப்பு பூஜைகள் செய்தனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காவடி ஆட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- நியாய விலைக்கடைகளின் விற்பனை முனையத்தில் வேட்டி சேலைகளை வழங்கும்போது விரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.
- வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் அடங்கிய குழுவினை அமைக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:
பொங்கல் வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.200 கோடியை அரசு ஒதுக்கி வேட்டி-சேலை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.
இதன்படி 1 கோடியே 68 லட்சம் எண்ணிக்கையிலான சேலைகளையும் மற்றும் 1 கோடியே 63 லட்சம் வேட்டிகளையும் எதிர்வரும் பொங்கல் 2024-ம் ஆண்டு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு வேட்டி, சேலையினை விநியோகிக்கும் நடைமுறையினை முடிவு செய்ய ஏதுவாக, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேட்டி-சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, நியாய விலைக்கடைகளின் விற்பனை முனையத்தில் வேட்டி சேலைகளை வழங்கும்போது இந்த முறை விரல் ரேகை பதிவினை கட்டாயமாக்கப்படுகிறது.
இதனைத் தவறாது செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
- அம்மனுக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகங்கள் நடைபெற்றன.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜை, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காமாட்சி அம்மனுக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று மாலை அலகு குத்துதல் நிகழ்ச்சி, பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று வியாழக்கிழமை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தீத்தாம்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.
- 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
- நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ்பெற்ற திரவுபதி அம்மன் - தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க பெண்கள், சிறு வர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜை நடை பெற்றது. மாலையில் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டம் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
- சுவாமி, அம்பாள் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
- பின்னர் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியபட்ட மகேஸ்வரர் சமேத மாலை யம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 11-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
16-ந்தேதி கொடை சாட்டுதல் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
பல்வேறு நிகழ்ச்சிகள்
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் வணிக வைசிய நடுநிலைபள்ளி கண்ணகி கலையரங்கத்தில் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் ஊர்வலமும், மதியம் அக்கினி சட்டி எடுத்து நகர்வலம் வருதலும். அதைத் தொடர்ந்து கோவில் முன்பு பொங்கல் வைபவமும் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு கட்சி கொடுத்த னர். பின்னர் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது. சாம கொடை யின் போது ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
விழாவில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், சங்க துணை தலைவர் பரம சிவன், தூத்துக்குடி வாணியர் பேரவை மாவட்ட தலைவர் பழினிகுமார், சங்க துணை செயாலாளர் மணிமாறன், இணை செயலாளர் காளிதாஸ், கவுரவ ஆலோசகர் மாதவராஜ், நிர்வாக குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம், கண்ணன், கார்த்திக், தங்கராஜ், சங்கர்கு மார், ஆறுமுகம், மாரிக்கண்ணன், கல்யாண சுந்தரம், மாரிக்கண்ணன், சுரேஷ், சின்னத்துரை, செண்பகராஜ், சின்னத்தம்பி, செங்கடேஷ் மேலும் அனைத்து மண்ட கபடிதாரர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவில் திருவிழா நிகழ்ச்சிகளை சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
அன்னதான நிகழ்ச்சி
இன்று இரவு 7 மணிக்கு முன்னாள் நகர்மன்ற துணை தலைவரும் தொழிலதிபருமான ஏ.எஸ். ரத்தினவேல், கிருஷ்ணவேணி குடும்பத்தினர் சார்பில் திருக்கல்யாண நிகழச்சியும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தனுஷ் கோடியாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் வைத்து அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்.
- சோழவந்தான் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி பத்திர காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி காப்பு கட்டு வைபவமும், 21-ந் தேதி இரவு சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி வைகையாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 250-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு ஊராட்சி கவுன்சிலர் செல்வராணி கந்தசாமி சில்வர் வாளி, சட்டிகளை பரிசாக வழங்கினார். மாலையில் முளைப்பாரியை வைகையாற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.