என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பினராயி விஜயன்"

    • கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
    • முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

    இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

    • மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
    • கேரளாவில் தேர்தல் நெருங்கி வருகிறது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.

    பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து மோகன்லால் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

    இந்த நேர்காணலின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

    கேரளாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த நேர்காணல் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இது அரசின் ஒரு விளம்பர முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.

    இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களையும் அவர் இதேபோல் நேர்காணல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாட்டிறைச்சியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
    • பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது

    சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.  

    கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.

    வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.

    தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.

    முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும்,  இந்துப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

    கேரளாவின் உணவு கலாச்சாரத்தில் 'பீப்-பரோட்டா' என்பது அனைத்து மதத்தினரிடையேயும் பிரபலமானது. அங்கு யாரும் யாருக்கும் கட்டாயப்படுத்தி உணவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி சமூக ஊடகங்களில் கேரள மக்கள் இந்தப் படத்தின் காட்சியை விமர்சித்து வருகின்றனர்.

    கேரள சுற்றுலாத் துறை "No Beef With Anyone" (யாருடனும் எங்களுக்குப் பகை இல்லை) என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளது.

    சிபிஐ(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI மற்றும் மாணவர் அமைப்பான SFI ஆகியவை மாநிலம் முழுவதும் 'பீப் திருவிழா' நடத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

    திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பீப் கறியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.

    கேரளாவின் மதச்சார்பற்ற பிம்பத்தைச் சிதைக்கவும், மத வெறுப்பைத் தூண்டவும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கேரளா மத நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கிற்கு முன்மாதிரியான மாநிலம். இத்தகைய பொய்யான பரப்புரைகளை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், "பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது" என்று கூறியுள்ளார்.

    மேலும், படத்தின் முதல் பாகத்திற்கு தேசிய விருது வழங்கி பாஜக இத்தகைய படங்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

    கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், இது கருத்து சுதந்திரம் என்றும், முதல்வர் பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.

    கேரளாவின் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தின் மீது இந்தப் படம் தாக்குதல் நடத்துவதாக பெரும்பான்மையானோர் கருதுகின்றனர். 

    இதற்கிடையே இந்த படத்துக்கு வாங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

    பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.

    கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.

    வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.

    தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. இதன் டிரெய்லர் நேற்று வெளியானது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்க, கமக்யா நாராயண் சிங் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

    முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    பலரும் இதற்கு கண்டன்ம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் மத வெறுப்பை தூண்டும் வகையிலான இந்த கண்டித்து வருகின்றனர்.

    ஜன நாயகன் போன்ற மற்ற படங்களை நிராகிரிக்கும் தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு மட்டும் முந்திக்கொண்டு சான்றிதழ் கொடுக்கும் என்றும் தேசிய விருதுகள் கிடைக்கும் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தொடர்ச்சியான பாகம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    முதல் பாகத்தின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும்.

    வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கலை விமர்சன வெளிப்பாடுகள் எவ்வாறு வாயடைக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

    நமது அமைதியாக நல்லிணக்கமான நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயலும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வாய்மையே வெல்லும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் தோற்றது.
    • அதன்பின் தொடர்ந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது- எம்.ஏ. பேபி

    கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான LDF-க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. இது வரவிருக்கின்ற சட்டசபை தேர்தலிலும் தொடரும் என பாஜக சொல்கிறது.

    இந்த நிலையில் இந்த தோல்வி தற்காலிகமானது. பினராயி விஜயன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்.ஏ. பேபி கூறியதாவது:-

    கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன்பின் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆகவே, எங்களுடைய உள்ளாட்சி தேர்தல் பின்னடைவு இதேபோல் சென்று கொண்டிருக்கிறது.

    டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் (மணிசங்கர் அய்யர்) பினராயி விஜயன் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கூறியுள்ளார். பொதுவாக மக்களின் நினைப்பதை அவர் கூறியுள்ளார்.

    இவ்வாறு எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

    • கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
    • மணிசங்கர் அய்யர் பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தது.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தைப் போல் கேரளாவிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியால் மக்களிடம் உள்ள அதிருப்தியை பயன்படுத்தி காங்கிரஸ் வெல்ல நினைக்கிறது.

    கேரளாவில் சமீபத்திய நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.க.வை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று அசத்தியது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சிபிஐ(எம்) தலைமையிலான அரசு நடத்தும் பஞ்சாயத்து ராஜ் முறையை இந்தியாவிலேயே மிகவும் வலுவானது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில் 1931-ல் காந்திஜி விரும்பிய கிராம அளவிலான ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசுகளை விட சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார். கேரளாவின் உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயனும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ள நிலையில், மணிசங்கர் அய்யர் பினராயி விஜயன் மீண்டும் முதல் மந்திரி ஆவார் எனக்கூறியது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    • மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் கேரள மீதான புறக்கணிப்பை அம்பலப்படுத்துகிறது
    • கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும்

    2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் கேரள மீதான புறக்கணிப்பை அம்பலப்படுத்துகிறது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவும் இந்தியாவின் வரைபடத்தில் இருப்பதை நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டதாகவும், வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் "கேரளாவின் நீண்ட கால கோரிக்கைகளான எய்ம்ஸ் மருத்துவமனை, 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் விழிஞ்சம் துறைமுகத்திற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஆகியவை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களை வறுமையில் தள்ளும் வகையிலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    • பெமினிசி பாத்திமா படத்தில் நடித்த ஷாம்லா ஹம்சாவுக்கு சிறந்த நடிகை, மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.

    2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருதுகள் கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று குடியரசு தினத்தன்று முதல்வர் பினராயி விஜயன் விருதுகளை வழங்கினார்.

    பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டிக்கு முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.


    அதே சமயம், பெமினிசி பாத்திமா படத்தில் நடித்த ஷாம்லா ஹம்சாவுக்கு சிறந்த நடிகை, மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் மமூட்டி சிறந்த நடிகருக்கான மாநில விருதை பெறுகிறார்.

    இது மம்மூட்டி பெற்றுள்ள 7-வது மாநில விருதாகும். 1984, 1989, 1993, 2004 மற்றும் 2009,2023 ம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை மம்மூட்டி வென்றுள்ளார்.  

    • பினராய் விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அது புரட்சிக்கரமான நடவடிக்கையாக இருக்கும்.
    • அதன்மூலம் நிச்சயமாக கேரளா மாநிலத்திற்கு அதிக நிதி வரும்.

    கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநிலம் கூடுதல் நிதி பெறும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-

    பினராய் விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அது புரட்சிக்கரமான நடவடிக்கையாக இருக்கும். அதன்மூலம் நிச்சயமாக கேரளா மாநிலத்திற்கு அதிக நிதி வரும். இந்த நிதியை கொண்டு கேரளா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும்.

    பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு மேலும் பெரிய பேக்கேஜ் கொடுப்பார். பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும். அதன்மூலம் மீண்டும் அவர் முதலமைச்சராக முடியும். சோசலிச தலைவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடியும் என்றால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏன் இணைய முடியாது?.

    இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

    • கேரள மாநில ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்து விட்டார்.
    • சில பகுதிகளை சேர்த்து வாசித்துள்ளார் என பினராயி விஜயன் குற்றச்சாட்டு.

    கேரள மாநிலத்தின் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் சட்டசபை கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் அப்படியே வாசிக்க வேண்டும்.

    ஆனால், கேரள மற்றும் தமிழ்நாடு சட்டசபைகளில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அல்லேகர் இன்று சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்தார். அப்போது சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார். இதை கவனித்த முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சில பகுதிகளை தவிர்த்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:-

    ஆளுநர் 12-வது பத்தியின் முதல் பகுதியை வாசிக்கவில்லை அல்லது 15-வது பத்தியின் கடைசி பகுதியை முடிக்கவில்லை. 72 மக்கள் கொண்ட கொள்கை உரையில் 157 பத்திகளில் 16-வது பத்தியை இணைத்து வாசித்துள்ளார்.

    மத்திய அரசு நிதி வழங்காதது மற்றும் மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதது போன்றவற்றை தவிர்த்துள்ளார்.

    இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.
    • நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்

    இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "உழைப்பின் உன்னதத்தையும், இயற்கையின் கொடையையும் போற்றும் உன்னதத் திருவிழாவான இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.

    இந்த அறுவடைப் பண்டிகை, மக்களிடையே நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகிய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விழைகிறேன்.

    ஒரு சமூகம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டுமானால், அங்கு சமத்துவமும் நீதியும் நிலைபெற வேண்டும். அந்த வகையில், இந்தப் பொங்கல் திருநாள்:

    அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கவும், ஒவ்வொரு மனிதரும் தகுந்த கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும், அனைவரது நல்வாழ்விற்காகவும் நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கி வருவதாக குறிப்பிட்டார்.
    • இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை.

    நிதி ரீதியாக முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 12-ம் தேதி திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கும் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    மத்திய அரசு கேரளா மீது பொருளாதார முற்றுகையை நடத்தி வருவதாக சாடிய அவர், நிதிப் பங்கீட்டை குறைத்தும், 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கியும் வருவதாக குற்றம் சாட்டினார்.

    மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து, ஜனவரி 12 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும்.இதில் கேரளாவின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும், இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை என்று பினராயி விஜயன் விமர்சித்தார்.  மேலும் amerik

    ×