என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mohanlal"
- நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
- பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
- முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்தி திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் அக்ஷய் குமார். அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் ஆரம்பிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அக்ஷய் குமார் கண்ணப்பாவின் இயக்குனர் மற்றும் விஷ்ணு மஞ்சு சந்தித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலகம் முழுவதும் 400 திரையரங்குகளில் "நெரு" வெளியானது
- திரைப்படம் வெளியாகி 25 நாட்களிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளது
கடந்த 2023 டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலக முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.
இந்தியாவில் 500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 400 அரங்குகளிலும் வெளியானது.
2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெற்றிகரமாக ஓடிய "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
2021ல் இதே கூட்டணியின் "திரிஷ்யம்-2" வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது.
வெளியாகி 25 நாட்களை நெருங்கும் நிலையில், திரைப்பட வெற்றிக்கு முக்கிய மைல்கல்லாக கருதப்படும் ரூ.100 கோடியை உலக வசூலில் தொட்டு விட்டதாக திரைப்பட குழு அறிவித்துள்ளது.
Grateful for all the love! #Neru joins the 100 crore club– thank you to the amazing audience, cinephiles and supporters across the globe.
— Aashirvad Cinemas (@aashirvadcine) January 15, 2024
The dynamic trio has done it once again.#Mohanlal #JeethuJoseph #AntonyPerumbavoor #AashirvadCinemas #NeruMovie pic.twitter.com/hSGRtlJPFJ
வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள மோகன்லால் திரைப்பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐஎம்டிபி (IMDb) திரைப்பட மதிப்பீட்டு புள்ளிகளில் இத்திரைப்படம் 10க்கு 7.8 என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்வை இழந்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்தி, சட்டத்தை வளைத்து, தண்டனையில் இருந்து தப்பித்த ஒரு பணக்கார இளைஞனுக்கு, மீண்டும் சட்டத்தின் மூலமே தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் சிறப்பாக நடித்திருப்பது உலகெங்கும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
- மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் "திரிஷ்யம்" பெரும் வெற்றி பெற்றது
- விஜயமோகன் எனும் வக்கீல் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்
கடந்த டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.
2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் பெரும் வெற்றி பெற்றதும், 2021ல் இதே கூட்டணியில் "திரிஷ்யம் 2" வெளியாகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 வருடங்கள் கடந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் இணைந்துள்ளதால், நெரு திரைப்படத்திற்கு மோகன்லால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கும் ஆவலில் உலகெங்கும் திரைப்பட ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் நெரு திரைப்படமும் நேர்மறை விமர்சனங்களுடன் வசூலை குவித்து வருகிறது.
இதுவரை உலகெங்கும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கதை சுருக்கம்:
சாரா (அனஸ்வரா ராஜன்) எனும் இளம் பெண், பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளி. அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறார். சிற்பக்கலை நிபுணரான சாரா, குற்றவாளியின் வடிவத்தை களி மண்ணில் செய்து தர, அதை வைத்து காவல்துறை, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. ஆனால், குற்றவாளி ஜாமீனில் வெளி வந்து விடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக விஜயமோகன் (மோகன்லால்) எனும் வக்கீல் ஆஜராகி வழக்கை சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டுகிறார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- 1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால்
- எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்
மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.
ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.
1980ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.
ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.
2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.
"எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
- லைக்கா நிறுவனம் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
- அக்ஷய்குமார் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் லைக்கா தயாரிக்கிறது.
இந்தியாவின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் வெற்றிகரமான பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது மலையாள திரையுலகில் இதுவரை மேற்கொள்ளப்படாத பிரம்மாண்டமான பொருட்செலவில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இதன் மூலம் மலையாள திரையுலகில் பிரம்மாண்டமான தயாரிப்புடன் லைக்கா நிறுவனம் களமிறங்குகிறது. இந்நிறுவனம் தற்போது இயக்குநர் ஷங்கர் - 'உலகநாயகன்' கமல்ஹாசன் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், 'லால் சலாம்' எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து 'ஜெய்பீம்' புகழ் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தையும், மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இதுதவிர அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தையும் தயாரிக்கிறது.
தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் முன்னணி நட்சத்திர நடிகரான அக்ஷய்குமார் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறது.
மேலும் லைக்கா புரொடக்ஷன்ஸின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஜி. கே. எம். தமிழ் குமரன் இந்த படைப்புகளை தொடர்ந்து வேறு சில முன்னணி நட்சத்திர நடிகர்களிடம் அடுத்தடுத்த பிரம்மாண்டமான படைப்புகள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.
- கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
- மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, வழக்கு விசாரணைக்காக நவம்பர் 3-ந்தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் ஆஜராக உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
பிரபல நடிகர் மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தந்தங்கள் கேரள வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக மோகன்லால், அவருக்கு தந்தங்களை விற்பனை செய்தவர்கள் உள்பட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கேரள அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, வழக்கு விசாரணைக்காக நவம்பர் 3-ந்தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் ஆஜராக உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மோகன்லால், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி குஞ்சு கிருஷ்ணன் விசாரித்து, மோகன்லால் மீதான வழக்கை விசாரிக்க 6 மாதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
- மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘லூசிபர்’.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகவுள்ளது.
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், லடாக், நொய்டா, துருக்கி, ஈராக், ஆஃப்கானிஸ்தான், துபாய் மற்றும் ரஸ்யாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- மோகன்லால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
- தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தமிழில் கோபுர வாசலிலே, இருவர், பாப் கான், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மோகன்லால் பிறந்தநாளான இன்று அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், அவர் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
A humble birthday celebration with the blessings of the little angels of Angelz Hut, a shelter home of the HUM Foundation! The project nurtures girls from underprivileged communities, empowering them for a great future.
— Mohanlal (@Mohanlal) May 21, 2023
Thank you for this day, @zonedamuttath
?@ Niranta Airport… pic.twitter.com/IDE7jgISUz
- மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
- நடிகர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது யானை தந்தம் வைத்திருக்க தன்னிடம் முறையான சான்றிதழ் இருப்பதாகவும், தந்தத்திற்காக எந்த யானையையும் கொல்லவில்லை எனவும் நடிகர் மோகன்லால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மோகன்லால் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் யானை தந்தம் வைத்திருந்தது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
- நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- விசாரணை விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்வி ராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதா? என்ற தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது வெளியிட வில்லை.
இந்த நிலையில் நேற்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், மோகன்லாலிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
வருமான வரித்துறை அதிகாரிகள் கேரளாவில் ஏற்கனவே சோதனை நடத்திய மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். மோகன்லால் நடித்த லூசிபர், திரிஷ்யம், புலி முருகன் போன்ற படங்களை இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி இருப்பது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது யானை தந்தம் வைத்திருக்க தன்னிடம் முறையான சான்றிதழ் இருப்பதாகவும், தந்தத்திற்காக எந்த யானையையும் கொல்லவில்லை எனவும் நடிகர் மோகன்லால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மோகன்லால் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்