என் மலர்
நீங்கள் தேடியது "வசூல் வேட்டை"
2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர்.
தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் 27.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திரைப்படம் வெளியாகி 3 நாளில் உலகளவில் 12.21 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
திரைப்படக் குழு:
இயக்கம்: சாய் மார்தண்ட்
தயாரிப்பு: '90s' இயக்குநர் ஆதித்ய ஹசன்
நடிப்பு: மௌலி தனுஜ் பிரஷாந்த், சிவானி நாகரம்
துணை நடிகர்கள்: ராஜீவ், எஸ். எஸ். காஞ்சி, அனிதா சௌதரி, சத்யா கிருஷ்ணன்
இசை: சிஞ்ஜித் யெர்ரமில்லி
விநியோகம்: வம்சி நந்திபட்டி, பன்னி வாஸ்
சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள ஹிருதயப்பூர்வம் படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், சங்கீதா, சித்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அகில் சத்யன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ஒரு ஃபீல் குட் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதால் படத்தை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலில் கடந்துள்ளது. இதனை படக்குழு மற்றும் மோகன்லால் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாள திரைப்படங்களில் அதிகம் வசூலித்த ஓபனிங்கில் ஹிருஹயபூர்வம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
- அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா
- இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் முதல் நாள் வசூலாக 1.75 கோடி, 2 ஆம் நாள் 4.6 கோடி, 3-வது நாள் 9.5 கோடி ரூபாய் மற்றும் 4-5 ஆம் நாளில் 13.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தம் திரைப்படம் வெளியாகி இதுவரை உலகளவில் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் நல்ல வரவேற்பை முன்னிட்டு திரைப்படம் இலங்கை, ஆஸ்திரேலயா, மலேசியா மற்றும் யூரோப் ஆகிய நாடுகளில் திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்க சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த சினிமாடிக் யூவிவெர்ஸ் விஷ்ணுவின் 10 அவதாரங்களை படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். 2025 முதல் 2037 ஆண்டுகள் மத்தியில் இப்படங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார்.
- திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
உலகம் முழுவது உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 76.5 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் F1 முக்கிய இடத்தில் உள்ளது.
காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் ப்ராட் பிட் தன் நண்பனின் டிம்ம் F1 ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.
- படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைப்பெற்றது.
- திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைப்பெற்றது.
திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, குபேரா திரைப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புதுறை சோதனையில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் சிக்கின.
- நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள சாராய வியாபாரிகளிடம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக நாகை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சித்திரவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் சிக்கின. கணக்கில் வராத ரூ.75 ஆயிரத்து 630 பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தலைமை காவலர்கள் தேவராஜ், சரோஜினி உள்ளிட்ட போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நாகை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, சப்- இன்ஸ்பெக்டர் சேகர், தலைமை காவலர் தேவராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்களையும் இட மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.






