என் மலர்
நீங்கள் தேடியது "பிராட் பிட்"
- டாரண்டினோ இயக்கத்தில் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' வெளியானது.
- முதல் பாகத்தில் நடித்த பிராட் பிட் இப்படத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் டேவிட் ஃபிஞ்சர் தன் புதிய படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் குயிண்டன் டரண்டினோ மற்றும் டேவிட் ஃபிஞ்சர் ஆகியோர் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளனர்.
கடந்த 2019 இல் டாரண்டினோ இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் வென்ற 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' படத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய படம் உருவாக உள்ளது.
இப்படத்திற்கு ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்: அட்வென்சர் ஆஃப் கிளிப் பூத் (once upon a time in hollywood: adventures of cliff booth) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குயிண்டன் டாரண்டினோ எழுதிய இந்த கதையை , டேவிட் ஃபிஞ்சர் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த பிராட் பிட் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார்.
- திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
உலகம் முழுவது உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 76.5 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் F1 முக்கிய இடத்தில் உள்ளது.
காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் ப்ராட் பிட் தன் நண்பனின் டிம்ம் F1 ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.
- ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
- உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.
ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்டின் 18 வயது மகள் ஷிலோ நோவல் ஜோலி பிட் தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது பெயருடன் இணைந்து இருக்கும் தந்தையின் பிட் பெயரை நீக்கி விட்டு ஷிலோ நோவல் ஜோலி என்று சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இதுபோல் ஷிலோ நோவலோடு உடன் பிறந்தவர்களும் பிட் பெயரை தங்கள் பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள்.
பிராட் பிட் தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினார் என்று ஏஞ்சலினா ஜோலி ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இதனை பிராட் பிட் மறுத்தார். தற்போது அவரது குழந்தைகள் பிட் பெயரை நீக்கியதன் மூலம் அவர் துன்புறுத்தியது உண்மையாக இருக்குமோ என்று பலரும் பேசி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர்
- இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மேலும் போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர். எனவே மொத்தம் ஆறு குழந்தைகளை அவர்கள் வளர்த்து வந்தனர்.
ஆனலும் ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-ல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த விவாகரத்து வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே இதுநாள்வரை 6 குழந்தைகளின் பொருளாதார செலவை இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.
இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது. 6 குழந்தைகளை யார் கவனிப்பது, தொழிற்சாலையைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படாததால் விவகாரத்து வழக்கில் தீர்ப்பு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஏஞ்சலினா மற்றும் பிராட் பிட் இருவரும் இந்த பங்கீடு தொடர்பாக ஒரு முடிவை எட்டியுள்ளனர்.
ஏஞ்சலினாவின் வழக்கறிஞர், ஜேம்ஸ் சைமன், இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார். எனவே விவாகரத்து வழங்கி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2003 ஆம் வெளியான மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 10 வருடங்களாக காதலித்து 2014 இல் திருமணம் செய்த இவர்களுக்கு போரில் அகதிகளான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






