search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divorce"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நவாஸ் என்பவரை கவுதம் சிங்கானியா திருமணம் செய்து கொண்டார்
    • அவர்கள் வீட்டிற்கு உள்ளே செல்ல நவாஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டது

    இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர், கவுதம் சிங்கானியா (58).

    பல கோடிகள் வருவாய் ஈட்டும் உயர்ரக ஆடைகளை விற்பனை செய்யும் ரேமண்ட்ஸ் குழுமத்தின் தலைவரான இவர், அதன் நிர்வாக இயக்குனராகவும் செயல்படுகிறார். அதி வேக கார்களை விரும்பி வாங்கும் பழக்கமுடைய இவர், கார் போட்டிகளிலும் கலந்து கொள்ள விருப்பமுடையவர்.

    கவுதம் சிங்கானியா, நவாஸ் மோடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாகவே சிங்கானியா தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன.

    சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில, தானே (Thane) நகரில் உள்ள சிங்கானியா குழுமத்திற்கு சொந்தமான மிக பெரிய பண்ணை வீட்டில் தீபாவளி விருந்து நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள கவுதமின் மனைவி நவாஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டு கேட் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை நவாஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்நிலையில், கவுதம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் செய்தி பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எங்கள் 32 வருட மண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்புடன் வாழ்ந்து வந்த எங்கள் வாழ்வு குறித்து பலர் விரும்பத்தகாத வதந்திகளை பரப்பி வந்தனர். இனி நானும், நவாஸும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் இரு குழந்தைகளுக்கும் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வோம். எங்கள் தனிப்பட்ட இந்த முடிவை மதித்து நிலைமை சீரடைய ஒத்துழையுங்கள். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளை கோருகிறேன்.

    இவ்வாறு கவுதம் பதிவிட்டுள்ளார்.

    32 வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்த கோடீசுவர தம்பதியினரின் விவாகரத்து செய்தி ,சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன் ஏற்கனவே செய்த திருமணங்களை மறைத்ததால் மனைவி விவாகரத்து பெற முடிவெடுத்தார்.
    • விவாகரத்து பெற்ற மகளுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்த தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வசிப்பவர் சாக்ஷி. இவரது கணவர் சச்சின் குமார். கணவர் மற்றும் அவரது பெற்றோரால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கணவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து, சாக்ஷி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். வீடு திரும்பும் சாக்ஷியை அவரது தந்தை மிகுந்த கண்ணியத்துடன் வரவேற்க முடிவு செய்தார்.

    திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யும் பாரத் நிகழ்ச்சி போன்று, மகள் வீடு திரும்பும் நிகழ்ச்சியையும் உறவினர்கள் சூழ, ஆட்டம் பாட்டம், மேள தாளத்துடன் ஏற்பாடு செய்து கொண்டாடினார்.

    இந்நிலையில், ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சாக்ஷி திரும்பினார். சாக்ஷி பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய வீடியோவை அவரது தந்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

    மேலும், அந்த வீடியோவில், மகள்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

    விவாகரத்து பெற்ற மகளுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்த சாக்ஷியின் தந்தைக்குப் பலரும் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிகோல் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.
    • 2021ல் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.

    1998ல் அமெரிக்காவில், கணினி மென்பொருள் பொறியியல் வல்லுனர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகிய இருவர் கூட்டாக உருவாக்கிய சமூக வலைதள நிறுவனம், கூகுள்.

    2015ல் செர்ஜி ப்ரின், நிகோல் ஷானஹான் எனும் கலிபோர்னியா மாநில பெண் வழக்கறிஞரை காதலித்து வந்தார். அந்த வருடமே தனது அப்போதைய மனைவியான ஆன் வோஜ்சிக்கியை விவாகரத்து செய்தார் செர்ஜி ப்ரின்.

    2018ல் நிகோலை செர்ஜி ப்ரின் திருமணம் செய்து கொண்டார்.

    ஆனால், 2021ல் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர்.

    உலகின் நம்பர் ஒன் கோட்டீஸ்வரரும், அமெரிக்காவின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் (முந்தைய டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், செர்ஜி ப்ரின் ஆகிய இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நண்பரான எலான் மஸ்க், மனைவி நிகோல் ஷானஹான் ஆகிய இருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும் அதனால் செர்ஜி ப்ரின் விவாகரத்து கோரியிருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதனை நிகோல் மற்றும் எலான் மஸ்க் இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.

    இந்நிலையில், 2022 ஜனவரியில் "தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள்" ஏற்பட்டதன் காரணமாக மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி செர்ஜி ப்ரின் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். கடந்த மே மாதம் இருவருக்குமான விவாகம் நீதிமன்றம் மூலமாக ரத்தானது.

    விவாகரத்திற்கு எதிராக நிகோல் முறையிடவில்லை. மணத்துணை பாதுகாப்பு தொகையை மட்டுமே நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். பிற சொத்துக்களின் பிரிவினையையும், தங்களது 4-வயது ஒரே மகளின் நிலை குறித்தும் இரு தரப்பு வழக்கறிஞர்களின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்து கொண்டனர்.

    உலகின் நம்பர் 9. பணக்காரர் எனும் இடத்தை சுமார் ரூ.1000 கோடி ($118 பில்லியன்) சொத்து மதிப்புடன் செர்ஜி ப்ரின் தக்க வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது
    • மேலை நாடுகளில் ப்ரி நப்ஷல் ஒப்பந்தம் என்பது பரவலான ஒன்று

    அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே 'பாப் இசையின் ராணி' என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    இவரும் ஸாம் அஸ்கரி (Sam Asghari) எனும் நடிகரும் 5 வருட காலம் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். பிறகு 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது.

    இந்நிலையில் தங்களுக்கிடையே 'தீர்க்க முடியாத' கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாகவும், அதனால் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அஸ்கரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த ஜூலை 28 முதல் பிரிந்து விட்டதாக அறிவித்து, அஸ்கரி நேற்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

    மேலும் ஈட்டு தொகையையும், வழக்கறிஞர் கட்டணத்தையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தான் தர வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

    விவாகரத்து கோரும் தம்பதியினருக்கு சொத்து பிரிவினை செய்யும் போது சிக்கல்கள் ஏற்படுவதனால், விவாகரத்து கிடைக்கும் காலம் நீள்வதும், இதனால் அவர்களின் எதிர்கால திட்டங்கள் தாமதமடைவதும் நடந்து வந்தது. இதனை தவிர்க்க திருமணத்திற்கு பிறகு ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டால், அதற்கு பிறகு பிரித்து கொள்ள வேண்டிய சொத்துக்கள் மற்றும் தங்கள் முன்னாள் மணத்துணை குறித்து எப்போதும் வெளியில் கருத்து கூறாமல் இருப்பது உள்ளிட்ட பல அம்சங்களை இணைத்து மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

    'ப்ரி நப்ஷல் ஒப்பந்தம்' (pre-nuptial agreement) எனும் இதனை ப்ரிட்னி வலுவாக செய்திருப்பதாகவும் அதனால் விவாகரத்திற்கு பிறகும் தனது சொத்துக்களை காப்பாற்றி கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ப்ரிட்னி ஸ்பியர்ஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ.498 கோடி ($60 million) ஆகும்.

    பிரபலமானவர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தும் லாரா வாஸ்ஸரை தனது தரப்பு வழக்கறிஞராக ப்ரிட்னி நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரிட்னியின் புகைப்படங்களில் அவர் திருமண மோதிரத்தை அணியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எவ்வாறு அவர் அமைத்து கொள்ள போகிறார் என்பதை அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சானியா மிர்சா சோயிப் மாலிக் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இருவரும் விவாகரத்து கோர இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்திருந்தார். பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர்.


    இந்த நிலையில் மீண்டும் இருவர் குறித்த விவாகரத்து வதந்தி மீண்டும் எழுந்துள்ளது. இந்த வதந்திக்கு மாலிக்கின் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா குறித்த தகவல்களை மாலிக் நீக்கியுள்ளார். அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கியுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன் சிவராமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்குநிலையில் உள்ளது.
    • சிவராமன் உட்பட 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அடுத்த ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்த வர் சிவராமன். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழி யராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (31). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். இவர் களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவன் சிவராமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்குநிலையில் உள்ளது.

    இந்நிலையில் சிவராமன் தனது உறவினர் பெண்ணான சிறு தொண்ட மா தேவியைசேர்ந்த சூர்யா வை (30 )கடந்த சில நாட்க ளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்து கொண்ட கணவர் சிவராமன் (35), அவரது தந்தை மூர்த்தி ராமன், தாயார் மகாலட்சுமி (55), அண்ணன் தணிகைவேல் (40),உள்ளிட்ட 8 பேர் மீது பண்ருட்டி மகளிர்போலீஸ் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, பிரியதர்ஷினியின் கணவன் சிவராமன் உட்பட 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர்.
    • 19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

    பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது மூன்று வருட கணவரான மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார்.இந்நிலையில், மூன்று வருட திருமண வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தின் தனித்தனி பக்கத்தில், "19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் இளமையில் ஒன்றாக வாழ்ந்தோம், ஒன்றாக இளமைப் பருவத்தில் நுழைந்தோம், எங்கள் அன்பான மகளுக்கு ஒன்றாக பெற்றோராக வளர்ந்தோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.
    • திருமணங்களை உடனே ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு உரிமை உள்ளது.

    புதுடெல்லி :

    பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கோரும் கணவன்-மனைவி, 6 மாத காலம் கட்டாயம் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.

    ஆனால், அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவின்கீழ், தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உடனடியாக விவாகரத்து அளிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்வர வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை விசாரிக்க நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.

    தம்பதிகளை குடும்பநல கோர்ட்டுகளுக்கு அனுப்பி, 6 மாத காலம் காத்திருக்க வைக்காமல், உடனடியாக விவாகரத்து வழங்க எந்த அடிப்படையில் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று அரசியல் சட்ட அமர்வு ஆய்வு செய்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு நேற்று இவ்வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

    தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருமண பந்தம், சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது என்ற அடிப்படையில், அத்தகைய திருமணங்களை உடனே ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு உரிமை உள்ளது. அதற்காக 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை கைவிட்டுவிட முடியும்.

    எந்த வழக்கிலும் முழுமையான நீதி வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்களை இதற்கு நாங்கள் பயன்படுத்த முடியும்.

    அந்த அதிகாரம் எங்களுக்கு இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் மீது விவாதம் நடத்த தேவையில்லை. அந்த அதிகாரம், பொது கொள்கையின் அடிப்படை தத்துவங்களை மீறுவதாக ஆகாது.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
    • 25 வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்த மனைவிக்கு நஷ்ட ஈடு.

    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் இவானா என்பவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தரும்படி நீதிமன்றத்தை நாடினார்.

    அவர் அங்கு தாக்கல் செய்த மனுவில், "வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால் தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் 25 வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்ததற்கு ரூ.1.75 கோடி அளிக்குமாறு கணவனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல.

    ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.

    2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவு முறை.

    3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.

    4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.

    5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.

    6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)

    7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.

    8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.

    9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.

    10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.

    11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.

    12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.

    13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.