என் மலர்
நீங்கள் தேடியது "டிரம்ப்"
- இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும்.
- பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள்
இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் பிரதமரின் உயிரை காப்பாற்றினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் மாநில ஒன்றிய உரையின் போது பேசிய அமெரிக்க டிரம்ப், "அதிபராக எனது முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும்.
போரை நிறுத்த நான் ஈடுபடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்.
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார்.
எனது நிர்வாகம் 9-வது போரை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், அன்றைய தினத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், உயிருடன் உள்ள அல்லது இறந்த ஒவ்வொரு பணயக்கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்து வருகிறோம்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களுக்கு நாங்கள் பெருமையுடன் பாதுகாப்பை மீட்டெடுத்து வருகிறோம். எனது வரிவிதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தீர்த்து வைக்கப்பட்டு அமைதி நிலவுகிறது" என்று தெரிவித்தார்.
- நான் விதித்த வரி மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
- சாதனை அளவில் நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டோம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 2-வது ஆட்சி காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். தனது ஆட்சியின் முக்கிய சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலேயே யாரும் பார்த்திடாத மாற்றத்தை அடைந்து உள்ளோம். எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது. இது ஒரு யுகத்திற்கான திருப்பம் ஆகும்.
அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்த பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு உள்ளோம். உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மீண்டும் மரியாதை கிடைத்துள்ளது. நாட்டின் எதிரிகள் பீதியில் உள்ளனர்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதித்தன. இதனால் அந்த நாடுகள் மீது வரி நடவடிக்கைகளை எடுத்தேன். அமெரிக்காவின் பொருளாதார மாற்றத்திற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று இந்த வரி விதிப்பு ஆகும். பல தசாப்தங்களாக நம்மை ஏமாற்றி வந்த நாடுகள் இப்போது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வரிகள் மூலம் நமக்குக் கொடுத்து வருகின்றன.
அவர்கள் நம்மை மிகவும் மோசமாக ஏமாற்றி வந்தனர். வெளிநாடுகளால் செலுத்தப்படும் வரிகள் நவீன கால வருமான வரி முறையை கணிசமாக மாற்றும். அமெரிக்க மக்களிடமிருந்து ஒரு பெரிய நிதிச் சுமையை நீக்கும். வரி விதிப்பு மூலம் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. அவர்கள் முன்பு போல் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நாம் நிறைய பணம் சம்பாதிக்கிறோம்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை ரத்து செய்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு துரதிருஷ்டவசமான தீர்ப்பை வழங்கியது. ஆனால் அனைத்து நாடுகளும், நிறுவனங்களும் தாங்கள் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை வைத்திருக்க விரும்புகின்றன. நான் விதித்த வரி மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
இந்த வரிகள் சட்டபூர்வமானது. அது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து வருகிறோம். சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துகிறோம். அவர்கள் நமக்கு தேவையில்லை. சாதனை அளவில் நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டோம்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு வணிக ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதை தடுக்கும் டலிலா சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடவடிக்கை மூலம் அணுசக்தி திட்டத்தை நாங்கள் அழித்தோம். இல்லையென்றால் ஈரானின் ஆட்சி பயங்கரவாதத்தை பரப்பியிருக்கும். ஈரானிடம் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது.
ஈரான் ஏற்கனவே ஐரோப்பாவையும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களையும் அச்சுறுத்தக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கியுள்ளன. விரைவில் அமெரிக்காவை அடையும் ஏவுகணைகளை உருவாக்க பணியாற்றி வருகின்றனர்.
எதிர்காலத்தில் ஈரானின் எந்தவொரு அணுசக்தி லட்சியங்களையும் அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்றார்.
- டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
- உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.
தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்தப் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டனில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கவிருந்த முக்கியக் கூட்டம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகளால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.
- அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது. பரஸ்பர வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையே பரஸ்பர வரியை கோர்ட்டு ரத்து செய்ததால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்தார்.
பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.
தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
- வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் அதீத வரிவிதிப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட பல பில்லியன் கோடி டாலர் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதிக வரி விதிப்பால், மக்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வு சட்டவிரோதமானது என இலினாய்ஸ் ஆளுநர் JB Britzker, கலிபோர்னியா ஆளுநர் Gavin Newsom நியூயார்க் ஆளுநர் Kathey Hochul ஆகியோர் காட்டமாக உள்ளனர்.
- அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என கண்டித்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.
- இந்த புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- வேறு ஒரு அதிகாரம் செயல்படுத்தப்படும் வரை இந்த புதிய வரி அமலில் இருக்கும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார். சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இதில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் டிரம்ப் அமல்படுத்திய வரி விதிப்பு செல்லாது என்று தெரிவித்தனர். 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க பாராளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை.
எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என்று அறிவித்தனர். 3 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான் என்று தெரிவித்தனா்.
பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பின்னடைவை சமாளிக்க உலகளாவிய 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். அரசியலமைப்பு சட்டம் 122-ன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியலமைப்பு சட்டம் 232 மற்றும் 301 ஆகிய பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட வரிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தற்போது கூடுதலாக பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத உலகளாவிய கட்டணத்தை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன். இந்த சட்ட பிரிவு அனைத்து நாடுகளுக்கும் 150 நாட்கள் வரை 15 சதவீதம் வரி விதிக்க அனுமதிக்கிறது. அமெரிக்க அரசு விதித்து உள்ள வரிகள் தொடரும். எதுவும் ரத்தாகாது.
அமெரிக்காவுக்கு எதிராக நியாயமற்ற முறையில் வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். வரி விதிப்புகளை செயல்படுத்த மாற்று வழிகள் உள்ளன என்றார்.
இதற்கிடையே கூடுதல் 10 சதவீத வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
புதிய வரி உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு, டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த வரி உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த உத்தரவில், சில குறிப்பிட்ட கனிமங்கள், இயற்கை வளங்கள் மற்றும் உரங்கள், ஆரஞ்சு மற்றும் மாட்டிறைச்சி போன்ற சில வேளாண் பொருட்கள், மருந்துகள் சில மின்னணு பொருட்கள் மற்றும் சில வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பரஸ்பர வரிக்கு பதிலாக அரசியலமைப்பு சட்டம் 122 சட்டத்தை தற்காலிகமாக டிரம்ப் பயன்படுத்தி உள்ளார். இந்த சட்ட பிரிவு மூலம் விதிக்கப்படும் வரி 150 நாட்கள் வரைதான் அமலில் இருக்கும். அதன் பின்னரும் வரி தொடர வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிரம்ப் மற்ற விதிகளை பயன்படுத்தியும் சில வரிகளை விதித்தார். இதில் வர்த்தக விரிவாக்க சட்டம் 1962 பிரிவு 232-யை பயன்படுத்தி பல்வேறு வரிகளை விதித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள். இந்த தற்காலிக வரி விதிப்பு வருகிற 24-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வேறு ஒரு அதிகாரம் செயல்படுத்தப்படும் வரை இந்த புதிய வரி அமலில் இருக்கும். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் இதற்கு கட்டுப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டிரம்ப் தற்போது அறிவித்துள்ள உலகளாவிய 10 சதவீத வரி விதிப்பு அறிவிப்பால் இந்தியா மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 10 சதவீத பரஸ்பர வரி மட்டுமே விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அது தற்காலிகமானதுதான். வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவு செய்யப்பட்ட வரி விகிதங்களை செயல்படுத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் 10 சதவீத வரி தற்காலிகமானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. இதன்மூலம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே விதித்த வரிகளை அமல்படுத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க அதிபர் டிரம்ப் பீஜிங் செல்கிறார்.
- உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 4-ம் தேதி அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியை சீனா வரவேண்டும் என அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மார்ச் 31-ம் தேதி சீனா புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி வரை சீனாவில் பயணம் மேற்கொள்கிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காக அதிபர் டிரம்ப் ஏப்ரல் மாதம் பீஜிங் செல்வதாகத் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அமெரிக்க ஊடகத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என தெரிவித்தார்.
- பல்வேறு நாடுகளின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.
- இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வாஷிங்டன்:
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க கீழமை நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக்கூறி கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
- போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அந்நாட்டின் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் உங்களின் ராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்கு ஆசியா நோக்கி அனுப்பி வைத்து உள்ளது.
இதையடுத்து இந்த வார இறுதியில் ஈரானை தாக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதிபர் டிரம்ப் ஆயுத மோதலுக்கு அனுமதி அளிப்பாரா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறும்போது, இந்த வார இறுதியில் ராணுவம் தாக்குதலுக்கு தயாராக உள்ளது. ஆனால் அதுதான் சிறந்த நடவடிக்கை என்பதில் அதிபர் டிரம்ப் இன்னும் உறுதியாக இல்லை.
அமெரிக்க தலைமைத் தளபதி தனிப்பட்ட முறையில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட்டார். சிறந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்கள் மற்றும் நட்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதிக்குள் டிரம்ப் ஒரு முடிவை எடுப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் இதைப் பற்றி சிந்திக்க நிறைய நேரம் செலவிடுகிறார் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி நிலை நிறுத்தியுள்ளது. எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உட்பட பல நவீன விமானங்கள் அங்கு சென்று உள்ளன.
யு.எஸ்.எஸ். ஜெரால்ட் போர்டு போர் கப்பல் இந்த வார இறுதியில் ஈரான் அருகே செல்ல உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படை டேங்கர்கள் மற்றும் போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும். இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
- அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
- அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்த ஈரான் அங்கு ராணுவ பயிற்சி மேற்கொண்டது. பயிற்சிகளின் போது நீர்வழியில் செல்லும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தெக்ரானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அயதுல்லா அலி கமெனி பேசியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவ படை சில சமயங்களில் மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு கடுமையாகத் தாக்கப்படலாம்.
அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள். நிச்சயமாக ஒரு போர்க்கப்பல் ஒரு ஆபத்தான ராணுவ இருப்பு ஆகும். ஆனால் அந்த போர்க்கப்பலை விட ஆபத் தானது ஒன்று உள்ளது.
அது போர்க்கப்பலுக்கு கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பக் கூடிய ஆயுதம் ஆகும். ஈரான் அரசாங்கத்தை அகற்ற அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்று அதில் தோற்றது. அதை நீங்களும் (டிரம்ப்) செய்ய முடியாது என்றார்.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறும்போது, அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அதிபர் டிரம்ப் நிர்ணயித்த முக்கிய நிபந்தனைகளுக்கு ஈரான் இன்னும் உடன்படவில்லை.
டிரம்ப் கூறியது போல் இதை ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் மிகவும் விரும்புகிறோம்.
பேச்சுவார்த்தைகளை எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்பதை டிரம்ப் இறுதியில் முடிவு செய்வார் என்றார்.
- எப்ஸ்டீன் பைல்ஸ் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
- அதிபர் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
வாஷிங்டன்:
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் முன்வைத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் என சிலர் அளித்த வாக்குமூலமும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், எப்ஸ்டீன் விவகாரத்தில் நான் மறைக்க எதுவும் இல்லை. நான் விடுவிக்கப்பட்டேன். ஜெப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எப்ஸ்டீன் வழக்கில் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன். உண்மையில், சிலருடன் சேர்ந்து என்னை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கக் கூடாது என ஜெப்ரி எப்ஸ்டீன் போராடினார் என தெரிவித்தார்.






