என் மலர்
நீங்கள் தேடியது "சீனா பயணம்"
- சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது.
- சீன அதிபர், ரஷிய அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
வாஷிங்டன்:
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களைச் சந்தித்தார்.
ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. மூன்று தலைவர்களும் சந்தித்துப் பேசியதை உலகின் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஜான் பால்டன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்தியாவையும், ரஷியாவையும் மீண்டும் ஒன்றிணைத்து விட்டது. இந்தியா-ரஷியாவை பிரிக்க பல தசாப்தங்களாக அமெரிக்கா செய்த முயற்சிகளை டிரம்ப் சீரழித்து விட்டார். டிரம்ப்பின் தவறான கொள்கையால் இந்தியா, சீனா, ரஷியா நாடுகள் வலுவான கூட்டாளியாகி விட்டன. அவரது தவறான பேரழிவு வரி கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. அவரது இந்த முடிவால் கிழக்கு ஆசியாவில் சீனா நிலைமையை மறு வடிவமைக்க அனுமதித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி ஆகஸ்ட் 31-ம் தேதி சீனா செல்கிறார்.
- 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் செல்கிறார்.
இந்நிலையில், ஜப்பான் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 31-ம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்கிறார் என தகவல் வெளியானது.
2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும்.
ஷாங்காய் உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதினுடன் சந்திப்புகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சீனா கல்வான் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியதற்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் இருந்து வருகிறது.
- வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்கிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்கா, சீனா என்னும் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவருகிறது.
தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், தென் சீனக்கடல் பகுதியில் சீன ராணுவ ஆதிக்கம், உக்ரைன் போரில் சீனாவின் ரஷிய ஆதரவு நிலை என பல்வேறு பிரச்சனைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இன்னொரு புறம் இரு தரப்பு வர்த்தக மோதலும் இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்லும் வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், அங்கு வெளியுறவு மந்திரி வாங் யீ உள்ளிட்ட சீன அதிகாரிகளைச் சந்திக்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் எனவும் தகவல் வெளியானது.






