search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Antony Blinken"

    • இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் முயற்சி மேற்கொண்டன.
    • ஹமாஸ் அமைப்பு உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்றார் அமெரிக்க மந்திரி.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல், ஹமாஸ் இடையே மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன.

    ஆனால், ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது எனக்கூறி, இஸ்ரேல் ராணுவம் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன், இடைநிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் பொதுமக்களுக்கு தெளிவான பாதுகாப்பை ஏற்படுத்துவது மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்பதை தெளிவு படுத்தினேன். போர் நிறுத்தம் ஏன் முடிவுக்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஹமாசால் அது முடிவுக்கு வந்தது. ஹமாஸ் அமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். போர் நிறுத்தம் முடியும் முன்பே அது ஜெருசலேமில் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தி 3 பேரைக் கொன்றது. அமெரிக்கர்கள் உட்பட மற்றவர்களைக் காயப்படுத்தியது. போர் நிறுத்தம் முடிவதற்குள் அது ராக்கெட்டுகளை வீசத் தொடங்கியது. சில பிணைக்கைதிகளை விடுவிப்பதில் அது செய்த கடமைகளை மறுத்தது என தெரிவித்தார்.

    • இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
    • அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    புதுடெல்லி:

    இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று டெல்லியில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    • அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து இஸ்ரேலை ஆதரிக்கின்றன
    • தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது

    இருபத்தி ஏழு அமெரிக்கர்கள் உட்பட 1000 பேருக்கும் மேல் பரிதாபமாக பலியாகிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை இஸ்ரேல் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.

    அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பென்சில்வேனியா மாநில பிலடெல்பியாவில் பேசும் போது குறிப்பிட்டதாவது:

    இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றனர். பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களை குறித்து அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறி அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தையும் செய்ய உள்ளது என நம்பிக்கை தெரிவித்தேன்.

    இவ்வாறு பைடன் கூறியுள்ளார்.

    • அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் இன்று ஜோர்டான் சென்றடைந்தார்.
    • பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாசையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

    அம்மான்:

    இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரினால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஜோர்டான் சென்றடைந்தார்.

    அவர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அதிபரைச் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி சீனா சென்றுள்ளார்.
    • மந்திரி ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை மந்திரி குவின் காங்கை சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    அமெரிக்கா, சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக இரு நாடுகளும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன.

    இதற்கிடையே, இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் சீன பயணம் குறித்து பேசினர்.

    அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்துக்கு பிறகு வெளியுறவு மந்திரியின் சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக பீஜிங் வந்துள்ளார். சீன வெளியுறவுத் துறை மந்திரி குவின் காங்கை சந்தித்துப் பேசினார்.

    • அமெரிக்கப் பத்திரிகையாளரை கைது செய்ததற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
    • அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் 2-ம் ஆண்டாக தொடர்கிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ளன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை ரஷியா முன்வைத்துள்ளது.

    இதற்கிடையே, போர்ச்சூழலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்துள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து உள்ளது.

    ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்துள்ளார் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

    உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷியாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

    இந்நிலையில், அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரஷியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ரஷிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் தொடங்கியது.
    • இதில் பங்கேற்க 40 நாடுகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி 20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

    இதில், சீன வெளியுறவு மந்திரி குவின் கேங், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேசக்கூடும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • ரஷியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கூறினார்.
    • அமெரிக்கா, ரஷியா இடையிலான ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும்.

    அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தெரிவித்தார். அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார்.

    ரஷியாவின் இந்த முடிவு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறியதாவது:-

    புதிய தொடக்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது தொடர்பான ரஷியாவின் அறிவிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற செயல். ஆனால் ஆயுத கட்டுப்பாடுகள் குறித்து ரஷியாவுடன் பேச அமெரிக்கா தயாராக உள்ளது.

    ரஷியா உண்மையில் என்ன செய்கிறது என்பதை உன்னிப்பாக கவனிப்போம். எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காக நாங்கள் சரியான நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்கா, ரஷியா இடையே 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும். ஆனால் அது சமீபத்திய ஆண்டுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ரஷியா நடந்துகொள்ளவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது.

    • சீன வெளியுறவு மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அவர் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார்.

    முனீச்:

    சீனாவின் வெளியுறவு துறை மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணத்தின் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மேக்ரனைச் சந்திக்கவுள்ளார். இந்தாண்டின் பிற்பாதியில் இடம்பெறவுள்ள மேக்ரனின் சீனப் பயணம் குறித்து விவாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் பொறுப்பை ஏற்றபிறகு வாங் யீ மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

    எட்டு நாள்கள் நீடிக்கும் அண்மைப் பயணத்தின்போது அவர், இத்தாலி, ஹங்கேரி, ரஷியா ஆகியவற்றுக்கும் செல்கிறார்.

    ரஷியாவுடனான நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது சீனா. ஐரோப்பாவிலும் பெய்ஜிங்கின் நற்பெயரை வலுப்படுத்துவது அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில்,முனீச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கலந்து கொண்டார். அப்போது அவர் சீன வெளியுறவு மந்திரியை சந்தித்துப் பேசினார்.

    உளவு பலூன் பறந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் இரு மந்திரிகளும் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
    • சீன பயணத்தின்போது இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என தகவல்

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது. அதன் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், தனது சீன பயணத்தை ஒத்திவைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சீன அதிகாரிகளுடனான தனது சந்திப்புகளின்போது, இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக ஏபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது. அவரது சீனப் பயணம் ஒத்திவைக்கப்படும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு, உள்நாட்டு அரசுசாரா நிறுவனங்களும் (என்ஜிஓ) பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என தலிபான் அரசாங்கம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. எந்த ஒரு என்.ஜி.ஓ. நிறுவனமாக இருந்தாலும் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் ஆப்கானிஸ்தானில் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பொருளாதாரத்துறை மந்திரி காரி தின் முகமது ஹனீப் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில், என்.ஜி.ஓ. நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தடை விதித்த தலிபான் உத்தரவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள் மையமாக உள்ளனர். இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

    மேலும் இந்த தடையானது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்காக்கும் உதவியை சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    • ரஷியாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை.
    • இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 


    இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    உக்ரைனில் நடைபெறும் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்த ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்சினை அல்ல, தற்போது போர் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதட்டத்தால் அது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது. 


    தொழில்நுட்ப தரம், திறன், குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் ஒரு தேர்வை செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது.

    பிரான்சிடம் இருந்து நாங்கள் ரஃபேல் விமானத்தை வாங்கினோம், இஸ்ரேலிடம் இருந்தும் வாங்கி உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, போட்டி நிறைந்த சூழ்நிலையில் சிறந்த ஒப்பந்தத்தை எப்படி பெறுவது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    அப்போது பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றம் அவர் குறிப்பிட்டார்.

    ×