என் மலர்
நீங்கள் தேடியது "US Nuclear Treaty"
- ரஷியா அருகே 2 அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
- அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்கிறோம் என ரஷியா அறிவித்துள்ளது.
மாஸ்கோ:
ரஷியாவிற்கு அருகே 2 அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஷியாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்திருந்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ரஷியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம்.
அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- 2021ல் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2021ல் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பாராளுமன்றத்தில் பேசினார்.
ரஷியா இன்னும் ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை. அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார்.
போர் நடைபெறும் உக்ரைனுக்கு சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கூறினார்.
- அமெரிக்கா, ரஷியா இடையிலான ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும்.
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தெரிவித்தார். அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார்.
ரஷியாவின் இந்த முடிவு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறியதாவது:-
புதிய தொடக்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது தொடர்பான ரஷியாவின் அறிவிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற செயல். ஆனால் ஆயுத கட்டுப்பாடுகள் குறித்து ரஷியாவுடன் பேச அமெரிக்கா தயாராக உள்ளது.
ரஷியா உண்மையில் என்ன செய்கிறது என்பதை உன்னிப்பாக கவனிப்போம். எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காக நாங்கள் சரியான நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா, ரஷியா இடையே 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும். ஆனால் அது சமீபத்திய ஆண்டுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ரஷியா நடந்துகொள்ளவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது.






