என் மலர்
நீங்கள் தேடியது "G20 Summit"
- இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
- ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு செய்தார். இதோடு எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
நைஜீரியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வந்த பிரதமர் மோடி, இங்கு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், "நாங்கள் எங்கள் நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தோம். எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
19வது ஜி20 மாநாட்டை பிரேசில் நடத்துகிறது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
- இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்
- பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் வைத்து 19-வது ஜி 20 உச்சி மாநாடானது நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர்.
அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. தற்போது நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இத்தாலி, பிரான்ஸ் அதிபர்கள் என உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் ஜி20 மாநாட்டின் ஹைலைட்டாக இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒன்றில் அனைத்து தலைவர்களும் சேர்ந்த எடுத்த குரூப் போட்டோவில் அமெரிக்க அதிபரை காணவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஜோ பைடன் வருதற்கு தாமதமானதால் அவர் புகைப்படத்தில் இருந்து விடுபட்டுள்ளார் என்று மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிகாரிகள் விளக்கமளித்தாலும், ஜோ பைடன் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைய உள்ளது என்பதால் அதன் பின்னர் அவரது முக்கியத்துவம் உலக அரங்கில் இருக்காது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் இருப்பதால் இதை இணையவாசிகள் டிரண்ட் செய்து வருகின்றனர்.
மற்றொரு புகைப்படம் இந்திய பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ லியோனி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்து நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் கண்கொட்டாமல் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மெலோனி மற்றும் மோடி நட்புறவு, கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியில் வைத்து நடந்த ஜி7 மாநாட்டில் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு மெலோனி + மோடி = மெலோடி என்று பொருள்படும்படி அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலானது. எனவே தற்போது ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மெலோனியை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ""ரியோ டி ஜெனிரோ ஜி 20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன.
கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.
- உலகின் தெற்கு நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொள்ளும்போதுதான் நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும்.
- ஆப்பிரிக்க யூனியனுக்கு முழு உறுப்பினர் வழங்கி தெற்குப் பகுதியின் குரலை வலுப்படுத்தியதுபோல், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை சீர்திருத்துவோம்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது. பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போர்களால் உலகின் தெற்கு நாடுகள் (Global South) உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உலகின் தெற்கு நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொள்ளும்போதுதான் நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும். டெல்லி உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க யூனியனுக்கு G20-ன் நிரந்தர பிரதிநிதி அந்தஸ்தை வழங்கியதன் மூலம் உலகின் தெற்குப் பகுதியின் குரலை வலுப்படுத்தியதுபோல், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை சீர்திருத்துவோம்.
இவ்வாறு பிரதம் மோடி கூறினார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி மாநாட்டிற்கிடையே பிரான்ஸ் அதிபர் மற்றும் இங்கிலாந்து, இந்தோனேசியா, போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடு பிரதமர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இங்கிலாந்து, இத்தாலி, போர்ச்சுக்கல் நாட்டு பிரதமர்களை சந்தித்தார்.
- பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.
பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
மாநாட்டிற்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அத்துடன் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்தோனேசியாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் பிரபோவோ சுபியான்டோவை சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்து கொண்ட முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
போர்ச்சுக்கல் பிரதமர் லூசிஷ் மாண்டினேக்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான உறவின் 50-வது ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
நார்வே பிரதரம் ஜோனஸ் கார் ஸ்டோரை சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானை சந்தித்து பேசினார்.
இத்தாலி பிரதமர் மொலோனியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா- இத்தாலி மூலோபாய உறவை மேலும் வலுப்படுத்துவதை உறுதி செய்தனர். 2025-2029 ஆண்டு வரையில் நடவடிக்கை திட்டம் இரு தரப்பிலும் இருந்தும் வரவேற்கப்பட்டது.
- இருதரப்பு சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.
- ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உரையாடினார்.
"ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சி மாநாட்டில் ஜோ பைடனுடன். அவரைச் சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி" என்று மோடி எக்ஸ் பதிவில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில், மோடியும் பைடனும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசினர்.
பிரேசில் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடி மற்றும் பைடென் இடையேயான இருதரப்பு சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. அடுத்த மாதம் பைடென் அமெரிக்க ஜனாதிபதி பதவியை குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்பிடம் ஒப்படைப்பதற்கு முன், இந்த சந்திப்பு அவர்களின் கடைசி உரையாடலாக இருக்கலாம்.
நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸிடம் 78 வயதான டிரம்ப் அமோக பெற்றார். டிரம்பின் பதவியேற்பு விழா ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது.
நைஜீரியாவிற்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி தனது பிரேசில் பயணத்தை தொடங்கிய மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜி20 உச்சிமாநாட்டில் வறுமை, பசி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது போன்ற உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ஜி20 தலைவர்கள் ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் காசாவின் நிலைமை குறித்தும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரேசில் நாட்டில் 18-19 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்திய பிரதமர் மோடி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, தென்அமெரிக்க நாடான பிரேசில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றாக கயானா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு முதலில் சென்றார். அங்கு அந்நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அந்நாட்டு அதிபருடன் இருநாட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து பிரேசிலுக்கு சென்றடைந்துள்ளார். பிரேசில் நாட்டில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பிரேசில் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார். 55 நாடுகளை கொண்ட ஆப்பிரிக்கா யூனியன் நிரந்தர உறுப்பினராக்கப்பட்டு முதன்முறையாக கலந்து கொள்ள இருக்கிறது.
ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தரையிறங்கியுள்ளேன். பல்வேறு உலகத் தலைவர்களோடு உச்சி மாநாட்டின் ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள பேச்சுக்களை எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி போப் ஆண்டவரை சந்தித்தார்.
- மோடி தன்னை கடவுள் அனுப்பியவர் எனத் தெரிவித்திருந்ததை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் பதிவு.
ஜி-7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.
இந்நிலையில், மோடியை போப் பிரான்சிஸ் சந்தித்தது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டது. அதில், "கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிஸ்க்கு கிடைத்துள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர். "தீவிர இஸ்லாமிக் மற்றும் நகர்ப்புற நக்சலைட்டுகளால் கையாளப்படுவதாக அறியப்படும் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ், தொடர்ந்து தேசிய தலைவர்களை இழிவுப்படுத்தும் பதிவுகளை பதிவிட்டு வருகிறது. தற்போது மரியாதைக்குரிய போப் ஆண்டவர் மற்றும் கிறிஸ்டியன் சமூகத்தினரை கிண்டல் செய்துள்ளது" என கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, பொது செயலாளர் கேசி வேணுகோபால் இதை ஆதரிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.
கேரள மாநில பாஜக பொது செயலாளர் ஜார்ஜ் குரியன் "பதிவு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக கேரளாவில் கிறிஸ்தவம் மூன்றாவது பெரிய மதமாக உள்ளது. அவற்றை புண்படுத்தும் வகையில் இருந்து" என்றார்.
பாஜக ஐடி அணி பொறுப்பாளர் அமித் மால்வியா "மற்றவர்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்துவதுதான் காங்கிரஸ் வரலாறு. கத்தோலிக்க மதத்தவரான முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
கடவுளைப் பற்றி கேலி செய்வது மதங்களுக்கு எதிரானது அல்ல என்று போப் பிரான்சிஸ் கூறியதை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் "ஒரு பார்வையாளரின் உதடுகளிலிருந்து கூட புத்திசாலித்தனமான புன்னகையை நீங்கள் கொண்டு வந்தால், நீங்கள் கடவுளையும் சிரிக்க வைக்கிறீர்கள் என போப் ஆண்டவர் கூறினார்" என தெரிவித்தது.
இது ஒரு நகைச்சுவைாக்க பதிவிட்டதாகவும், மக்களை சந்திக்காமல் இருக்கும் பிரதமர் மோடியை செயலை வெளிக்காட்டுவதற்கும், அவர் தன்னை வழக்கமான மனிதன் அல்ல. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றார். அதன்அடிப்படையில் இந்த டுவிட்டர் இதற்கான கேலி ட்வீட் ஆகும்" கேரள மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் விடி பல்ராம் நியாயப்படுத்திருந்தார்.
இருந்த போதிலும் கடுயைமான விமர்சனம் எழுந்த நிலையில், டுவிட்ட பதிவை நீக்கம் செய்துவிட்டது, இது கிறிஸ்தவர்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என கேரள மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- ஜி7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்றது.
- வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.
ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.
இந்நிலையில், மோடியை போப் பிரான்சிஸ் சந்தித்தது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளது. அதில், "கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிசுக்கு கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
- டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
- இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டை இந்த வருடம் இத்தாலி தலைமையேற்று நடத்தியது. கடந்த ஜூன் 13 முதல் 15 வரை நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.
இந்தியாவின் மேற்கு கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக எமிரேட்ஸுக்கு சென்று அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும். இந்நிலையில்தான் தற்போது ஜி7 நாடுகள் கூட்டத்தில் எமிரேட்ஸில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஜி 7 நாடுகள் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது அமையும் என்பதே ஆகும். எது எப்படியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் இந்தியாவில் பொருளாதார உறவுகள் மேம்படும் என்பது உறுதி.
- இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் ராபர்டோ கால்டெரோலி அமர்ந்திருக்கும் இடத்துக்கு நடந்து சென்று அவரது முகத்தில் இத்தாலியக் கொடியை வீசினார்.
ஜி7 மாநாடு இன்று [ஜூன் 14] இத்தாலியில் வைத்து நடைபெற உள்ளதால் இந்தியப் பிரதமர் மோடி உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் குழுமத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இத்தாலி பாராளுமன்றத்தில் எம்.பிக்களிடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நேற்று முன் தினம் [ஜூன் 12] இத்தாலி பாராளுன்ற கீழ் சபையில் இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ஆளும் வலதுசாரி கூட்டமைப்பு கொண்டுவந்த இந்த மசோதாவை எதிர்கட்சியான 5 ஸ்டார் இயக்கம் கடுமையாக எதிர்த்தது.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் 5 ஸ்டார் இயக்க எம்.பி லியோனார்டோ டோனோ, பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் ராபர்டோ கால்டெரோலி அமர்ந்திருக்கும் இடத்துக்கு நடந்து சென்று அவரது முகத்தில் இத்தாலியக் கொடியை வீசினார்.
இதனால் ஆளும் வலதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் லீக் மற்றும் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சிப் பிரதிநிதிகள் டோனோவிடம் விரைந்து சென்று அவரை பிடித்து இழுத்தனர். இதனால் ஏற்பட்ட கைகலப்பில் இருந்து டோனோவை காப்பற்ற காவலர்கள் படாதபாடு பட்டனர்.
இதனையடுத்து காயமடைந்த டோனோ அவையில் இருந்து வீல் சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து டோனோ ஊடகங்களுக்கு கூறுகையில், என்னை அவர்கள் பல முறை உதைத்தனர். எனது மார்பில் வலுவாக ஒரு உதை விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. விரைவில் அதன் மீது மறு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே பாராளுமன்றத்தில் நடந்த கைகலப்பு தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது.
- இதில் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகள் பலவும் கலந்துகொண்டன.
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது.
இந்த மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் சொர்க்கலோகம்போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டது. ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செப்டம்பரில் நடத்தியது. ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- அண்டை நாடான இந்தியா தலைமை ஏற்று, ஜி20 மாநாட்டை நடத்தியுள்ள நிலையில்...
- நாங்கள் வெளிநாடு கொள்கையில் தோல்வியடைந்ததாக நினைக்கிறேன்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒருமித்த கருத்தோடு ஜி20 டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை தவிர்த்து அனைத்து தலைவர்களும் டெல்லியில் கூடியிருந்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பிரதமர் மோடி 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன், இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து, நன்றி தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ''நாட்டிற்கு உலகின் டாப் 20 தலைவர்கள் வருகை தரும்போது, அது அந்த நாட்டிற்கு பெருமை. இதன்மூலம் இந்திய பொருளாதாரம் இன்னும் அதிக பயனடையும்'' என்றார்.
#WATCH | Some reactions from people in Pakistan praising India for successfully hosting the G-20 summitA local says, "...When heads of the top 20 countries visit the country, it is an honour for the country. Indian economy will get many benefits from it..." pic.twitter.com/vxbCoZIfmk
— ANI (@ANI) September 14, 2023
மற்றொரு நபர் ''அண்டை நாடான இந்தியா தலைமை ஏற்று, ஜி20 மாநாட்டை நடத்தியுள்ள நிலையில், நாங்கள் வெளிநாடு கொள்கையில் தோல்வியடைந்ததாக நினைக்கிறேன். பாகிஸ்தானில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொருளாதாரம், பாதுகாப்பு நிலை மோசம் அடைந்துள்ளது'' என்றார்.
#WATCH | Pakistan: Another local says, "I think we have failed in our foreign policy and because of this the G-20 summit is being held in our neighbouring country and heads of state are coming. In the last 5-6 years our economy and the security situation have deteriorated. The… pic.twitter.com/HFhwPhWPtg
— ANI (@ANI) September 14, 2023
இன்னொருவர் ''இன்று நாங்கள் எங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாக்க முயற்சி செய்யும்போது, இந்தியா ஜி20 தலைவர்களை வரவழைத்து மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தியா சிறந்த அடியை எடுத்து வைத்துள்ளது. இந்தியர்களுக்கு இது பெருமையளிக்கும் தருணம்'' என்றார்.
#WATCH | Another local says, "Today when we are trying to save our economy, India is hosting the top 20 countries. India has taken a good step. This was a proud moment for Indians... The pictures that have come from India, PM Modi's pictures with the world leaders, they got… pic.twitter.com/bbZsu5Z1a3
— ANI (@ANI) September 14, 2023