ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி
Published on

ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் கிளம்பினார். மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரங்கல் தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com