என் மலர்
தென் ஆப்பிரிக்கா
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது.
- மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஜோகன்னஸ்பர்க்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வென்று 2-0 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக 17 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
ஷாய் ஹோப் 25 பந்தில் 48 ரன் எடுத்தார். ஹெட்மயர் 22 பந்தில் 48 ரன் குவித்தார்.
இதையடுத்து, டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 10 ஓவரில் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. டி காக் 28 ரன்னும், ஜேசன் ஸ்மித் 26 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது குடகேஷ் மோடிக்கும், தொடர் நாயகன் விருது டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
- தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
செஞ்சூரியன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சூரியனின் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஹெட்மயர் 42 பந்தில் 75 ரன்னும், ரூதர்போர்டு 24 பந்தில் 57 ரன்னும், பிராண்டன் கிங் 30 பந்தில் 49 ரன்னும் குவித்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கேசவ் மகராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். குறிப்பாக, டி காக் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
டிகாக் 49 பந்தில் 10 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 115 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 36 பந்தில் 77 ரன்னும் குவித்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது டி காக்குக்கு அளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் 158 ரன்கள் எடுத்தது.
கேப் டவுன்:
எஸ்.ஏ. டி20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார்.
சன்ரைசர்ஸ் சார்பில் மார்கோ யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப் 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வென்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஒரு கட்டத்தில் 48 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் இணைந்த மேதிவ்-ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். மேதிவ் 68 ரன்னும், ஸ்டப்ஸ் 63 ரன்னும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஆட்ட நாயகன் விருது டிவால்ட் பிரேவிசுக்கும், தொடர் நாயகன் விருது டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.
- மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது லாரியுடன் மோதல்.
- சம்பவ இடத்திலேயே 11 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பள்ளி மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தனியார் வாகனம் பல்வேறு தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பள்ளி சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் பேருந்து டிரைவரிடம் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
- எஸ்.ஏ. டி20 லீக் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
- பாப் டூ பிளசிஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.
கேப் டவுன்:
எஸ்.ஏ.20 லீக் என்றழைப்படும் தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக இந்தப் போட்டி 12 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற கேப்டவுன் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டூ பிளசிஸ் 44 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து ஆடிய எம்ஐ கேப்டவுன் அணி முதலில் தடுமாறியது. இருப்பினும் அந்த அணி 11.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் 44 ரன்களை சேர்த்ததன் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பாப் டூ பிளசிஸ் டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12,000 ரன்களைக் கடந்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
- தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அக்கும்பல் மதுபான விடுதி முன்பு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
பின்னர் அக்கும்பல் தப்பி சென்றபோது சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே 12 மர்ம நபர்கள் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 6-ந்தேதி தலை நகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது
- கட்டுமானத் திட்டத்தின் மேலாளருமான விக்கி ஜெய்ராஜ் பாண்டே உயிரிழந்தார்
தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் 4 மாடி கோயில் இடிந்து விழுந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது, திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இறந்த நான்கு பேரில், ஒருவர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினரும் கட்டுமானத் திட்டத்தின் மேலாளருமான விக்கி ஜெய்ராஜ் பாண்டே என அடையாளம் காணப்பட்டார்.
- தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
- பிரிடோரியா கேபிடல்ஸ் அணி கேப்டனாக கேசவ் மகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான ஏற்பாடுகளில் அனைத்து அணியினரும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ், பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கேசவ் மகராஜ் 33 போட்டிகளில் 27 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
- தென் ஆப்பிரிக்காவில் மதுபான பாரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இதில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மதுபான பாரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 2 சிறுவர்கள், ஒரு சிறுமி உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும்.
- இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்கஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் யாரையும் பின்தங்க வைக்காத வகையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்வில் பிரதமர் மோடி பேசினார்.
பின்னர் நடந்த 2-வது அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இயற்கை பேரழிவுகள் மனிதகுலத்திற்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளன. இந்த ஆண்டும், இயற்கை பேரழிவுகள் உலகம் முழுவதும் பெரும் மக்களை பாதித்துள்ளன. இது இயற்கை பேரழிவுகளை நிவர்த்தி செய்ய உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை தெளிவாக காட்டுகிறது.
பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும். எனவே பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவ வேண்டும். இதனுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஜி-20 நாடுகள் நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களைத் திரட்டி, மீள் தன்மை கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.
விண்வெளி தொழில்நுட்பம் அனைத்து மனிதகுலத்திற்கும் பயனளிக்க வேண்டும் என்று இந்தியாவும் நம்புகிறது. எனவே இந்தியா ஜி-20 திறந்த செயற்கைக்கோள் தரவு கூட்டாண்மையை முன்மொழிகிறது.
காலநிலை மாற்றம் மற்றும் பிற சவால்கள் காரணமாக, நமது விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகி வருகிறது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நாடுகளில் விவசாயிகள் உரங்கள், தொழில்நுட்பம், கடன், காப்பீடு மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா தனது சொந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.
வலுவான உலகளாவிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ஜி20 நாடுகள் ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், நிலையான விவசாயம் மற்றும் பேரிடர் தயார்நிலையை ஒருங்கிணைக்கும் விரிவான உத்திகளை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.
- ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.
ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேசினார்.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்ஜி ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.
- ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
- ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.
ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், சுகாதாரப் பாதுகாப்பு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் ஒற்றுமையாக துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்தார்.






