என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்ஏடி20 தொடர்"

    • 4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன.

    பார்ல்:

    4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் முடிவில் டாப்4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் பார்ல் நகரில் நடந்த 3-வது லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, பார்ல் ராயல்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தது. ஜோர்டான் ஹெர்மேன் 62 ரன்கள் (28 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

    அடுத்து களம் இறங்கிய டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி, எதிரணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் 49 ரன்னில் சுருண்டது. எஸ்.ஏ. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் பிரிட்டோாரியா கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்சுக்கு எதிராக 52 ரன்னில் அடங்கியதே குறைந்த ஸ்கோராக இருந்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நோர்டியா 4 விக்கெட்டும், ஆடம் மில்னே, தாரிந்து ரத்னாயகே தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    • இந்திய வீரர்கள் விளையாடினால் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும்.
    • ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும்.

    கேப்டவுன்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த தொடரில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் கலந்து கொள்வதை பார்க்க விரும்புவதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது,

    எந்த இந்திய வீரர் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் எனக் கூறுவதில் எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. பேட்ஸ்மேன் என எடுத்துக் கொண்டால், விராட் கோலி தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், 100 சதவிகிதம் பும்ரா விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.

    இந்திய வீரர்கள் பலரும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடத் தொடங்கினால், இந்த தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும். ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எஸ்.ஏ.20 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
    • இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    ஜோகன்னஸ்பெர்க்:

    எஸ்.ஏ.20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்கில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், எம் ஐ கேப் டவுன் அணியும் மோதின.

    இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், தனது அணி இறுதிப்போட்டியை எட்டியதால் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பெடிங்ஹாமுக்கு சனிக்கிழமையான நேற்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் தனது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, தனது திருமணத்தை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார்.

    ×