என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keshav Maharaj"

    • இந்த போட்டியை எங்களை மிகப்பெரிய அளவில் சோதித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக கருதுகிறோம்.
    • தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும்.

    கொல்கத்தா:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் நேற்று அளித்த பேட்டியில், 'இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற உண்மையான வேட்கையும், ஆவலும் எங்கள் அணிக்குள் அதிகமாக இருக்கிறது.

    அனேகமாக தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும். இந்த போட்டியை எங்களை மிகப்பெரிய அளவில் சோதித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக கருதுகிறோம். எங்களது திறமையை நாங்களே தரப்படுத்திக் கொள்ளவும், நாங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை பார்க்கவும் இது அருமையான வாய்ப்பு. இந்திய துணை கண்டத்தில் மற்ற பகுதிகளில் வெற்றி பெற தொடங்கி விட்டோம். இப்போது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது அடுத்த இலக்கு.

    கொல்கத்தா ஆடுகளம் பாகிஸ்தானில் இருந்தது போல் முழுமையாக சுழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்படும் என நினைக்கவில்லை. இந்தியாவின் பாரம்பரிய டெஸ்ட் ஆடுகளங்கள் போலவே இது இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதாவது போக போக ஆடுகளத்தன்மை மாறும் போது சுழலுக்கு உதவும்' என்றார்.

    தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
    • கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • மகாராஜ் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    கெய்ன்ஸ்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. ஹெட் 27 ரன்னில் சுப்ரயென் பந்து வீச்சில் ஸ்டெம்பிக் ஆனார்.

    இதனையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்கிலீஸ் 5, அலெக்ஸ் ஹேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்னில் அடுத்தடுத்து மகாராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனை தொடர்ந்து மார்ஷ் மற்றும் பென் த்வார்ஷுயிஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. பென் த்வார்ஷுயிஸ் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து மார்ஷ் 88 ரன்னிலும் ஆடம் ஜாம்பா 11 ரன்னிலும் வெளியேறினார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.

    • மகாராஜ் முதல் 4.2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • மகாராஜ் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    கெய்ன்ஸ்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. ஹெட் 27 ரன்னில் சுப்ரயென் பந்து வீச்சில் ஸ்டெம்பிக் ஆனார்.

    இதனையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்கிலீஸ் 5, அலெக்ஸ் ஹேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்னில் அடுத்தடுத்து மகாராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

    மகாராஜ் முதல் 4.2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் அதன்பிறகு விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அவர் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், கிரேக் எர்வினின் விக்கெட்டை தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

    கேசவ் மகராஜ் 59 டெஸ்டில் (99 இன்னிங்ஸ்) 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 முறை 5 விக்கெட்டும், ஒருமுறை 10 விக்கெட்டும் (ஒரே டெஸ்டில்) வீழ்த்தியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர்.

    இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.

    அவர் விலகியுள்ள நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
    • இதில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

    சென்னை:

    உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டி நேற்று நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 46.4 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷகீல், பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர்.

    தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து போராடி வென்றது. மார்க்ரம் 91 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின், பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    • கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

    ராஜஸ்தான் அணி ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் நிலையில் கேஷவ் மகராஜ் இணைந்துள்ள மேலும்

    இதேபோல கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அல்லா கசன்ஃபரை கொல்கத்தா அணி நியமித்துள்ளது.



     


    • இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.
    • இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    ரோகித் சர்மா மற்றும்  இந்திய அணியை பற்றிய கருத்துகளை தென் ஆப்பிரிக்க அணிகள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். தென் ஆப்பிரிக்காவிக் அணியின் கேப்டன் ஆன ஐடன் மார்க்ரம் இதுவரை கேப்டனாக போட்டியிட்டு விளையாடிய எந்த போட்டியிலும் தோற்றது கிடையாது.

    யூ19 உலகக் கோப்பை 2014 ஆம் ஆண்டு 6 போட்டி, ஓடிஐ உலகப்கோப்பை 2023 2 போட்டி, டி20 உலகக் கோப்பை 2024 8 போட்டியிலும் இதுவரை மொத்தம் 16 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்திய அணியுடன் மோத இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லை இந்திய அணியிடம் தோற்று தொடர் வெற்றியை இழக்குமா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.

    இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவனில் கேசவ் மகராஜ்-க்கு பதிலாக பெஹ்லுவாயோ இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது மஹராஜ் இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

    மஹாராஜ் விலகியதை அடுத்து அவருக்கு மற்று வீரராக ஜோர்ன் ஃபார்டுயின் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மேற்கொண்டு எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேஷவ் மஹாராஜ் இடம்பிடித்த நிலையில் தற்போது அவரால் டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

    • தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    இதையொட்டி தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு திருவனந்தபுரம் வருகை தந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை வந்த தென் ஆப்பிரிக்க வீரர்

    ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை வந்த தென் ஆப்பிரிக்க வீரர்

    இதற்கிடையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா வீர்ர கேசவ் மகாராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் இங்கிலாந்து கவுன்ட்டி அணியான லங்காஷைரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ். இவர் சமீபத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியிருந்தார். இவரை இங்கிலாந்து கவுன்ட்டி அணியான லங்காஷைர் ஒப்பந்தம் செய்துள்ளது.



    லங்காஷைர் தற்போது டிவிசன் -1ல் 14 போட்டிகளில் 10-ல் விளையாடி கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி வொர்செஸ்டர்ஷைர், சோமர்செட், யார்க்‌ஷைர், ஹம்ப்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் மகாராஜ் பங்கேற்பார்.

    மகாராஜ் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    ×