என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvSA"

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த அந்த அணி 50 ஓவரில் 269 ரன்கள் எடுத்தது.

    பைசலாபாத்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. சல்மான் ஆகா 69 ரன்னும், முகமது நவாஸ் 59 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 53 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் பர்கர் 4 விக்கெட்டும், பீட்டர் 3 விக்கெட்டும், கார்பின் பாஸ்ச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அதிரடியாக ஆடி சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். டோனி டி சோர்சி அவருக்கு பக்கபலமாக நின்று அரை சதம் கடந்து 79 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி காக் 123 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 139 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    லாகூர்:

    பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் 47 பந்தில் 68 ரன் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கும், தொடர் நாயகன் விருது பஹீம் அஷ்ரப்புக்கும் வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 4-ம் தேதி பைசலாபாத்தில் நடக்கிறது.

    • முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 194 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 139 ரன்னில் சுருண்டது.

    ராவல்பிண்டி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18.1 ஓவரில் 139 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி லாகூரில் நாளை மறுநாள் நடக்கிறது.

    • முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பதிலடி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முத்துசாமி 89, ஸ்டப்ஸ் 76, ரபாடா 71 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஆஷிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அசாம் மட்டும் நிலைத்து ஆடி அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 72 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 73 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    2-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென் ஆப்பிரிக்கா அணி பதிவு செய்து வராலாற்று சாதனை படைத்துள்ளது.

    • ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது
    • தமிழக வம்சாளி வீரரான முத்துசாமி மற்றும் ரபாடா கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இதில் ரியான் ரிக்கல்டன் 14 ரன்னிலும் மார்க்ரம் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ்- டோனி டி சோர்ஸி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

    டோனி டி சோர்ஸி 55 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரேவிஸ் 0, கைல் வெர்ரெய்ன் 10 ரன்னிலும் வெளியேறினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டப்ஸ் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து ஹர்மர் 2, யான்சன் 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    இந்நிலையில் இந்திய வம்சாளி வீரர்களான முத்துசாமி மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார்.

    30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மகாராஜ் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு முத்துசாமியுடன் ரபாடா ஜோடி சேர்ந்தார். ரபாடா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் பாகிஸ்தானை விட தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது. அதிரடியாக விளையாடிய ரபாடா டெஸ்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. ரபாடா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முத்துசாமி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஆஷிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
    • கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    • பாகிஸ்தான் கேப்டன் மசூத் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ஹார்மர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- இமாம் களமிறங்கினர். இதில் இமாம் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேப்டன் மசூத் - அப்துல்லா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாடி அரை சதம் அடித்தனர்.

    அப்துல்லா 57 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய பாபர் அசாம் 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து சவுத் சகீல்- மசூத் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மசூத் 87 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஸ்வான் 19 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ஹார்மர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- இமாம் களமிறங்கினர். இதில் இமாம் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேப்டன் மசூத் - அப்துல்லா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாடி அரை சதம் அடித்தனர். அப்துல்லா 57 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாபர் அசாம் களமிறங்கினார். சற்று தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக ஆடினார். அவர் 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் அவட் ஆனதும் சுற்றியிருந்த ரசிகர்கள் கவலையுடன் சோகத்துடன் காணப்பட்டனர்.

    அவர் டெஸ்டில் சதம் அடித்து கிட்டத்தட்ட 1000 நாட்கள் மேல் ஆகிவிட்டது. பாபர் அசாம் டெஸ்ட் போட்டியில் கடைசியாக சதம் அடித்தது 2022 டிசம்பர் 26 அன்று, நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடந்த போட்டியில் 161 ரன்கள் எடுத்தார்.

    அன்றிலிருந்து அவர் டெஸ்ட் சதம் அடிக்கவில்லை. 2025 அக்டோபர் வரை அவரது அதிகபட்ச ஸ்கோர் 81 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு 272 ரன்கள் இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்தது.
    • தென் ஆப்பிரிக்கா அணி 183 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் 12-ந் தேதி தொடங்கியது.

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    109 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 46.1 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன்- மார்க்ரம் களமிறங்கினர். இதில் மார்க்ரம் 3 ரன்னிலும் அடுத்த வந்த முல்டர் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனை தொடர்ந்து வந்த டோனி டி சோர்ஸி- ரிக்கல்டனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஆனால் இவர்களது நிதானமான ஆட்டம் கைகொடுக்கவில்லை. சோர்ஸி 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    விக்கெட்டுகள் சரிந்த நிலையில் களமிறங்கிய பிரெவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 54 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ரிக்கல்டனும் 45 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 60.5 ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி, அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நோமன் அலி தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.

    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    109 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாடு வம்சாவளியை சேர்ந்த சேனுரான் முத்துசாமி அசத்தியுள்ளார்.

    • சபீக் 41 ரன்னிலும் பாபர் அசாம் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களாக சபீக்- இமாம் உல் ஹக் களமிறங்கினர். இமாம் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மசூத் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து சபீக் - பாபர் அசாம் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சபீக் 41 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் பாபர் அசாம் 42 ரன்னில் வெளியேறினார்.

    இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சவுத் ஷகீல் பொறுப்புடன் விளையாடி 38 ரன்கள் சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி 46.1 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்
    • பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாட உள்ளது.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .

    . இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி கடைசி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் (20 ரன்), வியான் முல்டர் (17 ரன்) சீக்கிரம் வீழ்ந்தாலும் ரையான் ரிக்கெல்டனும், டோனி டி ஜோர்ஜியும் அரைசதம் அடித்து சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்களுடன் வலுவாக இருந்த தென்ஆப்பிரிக்கா கடைசி ஒரு மணி நேரத்தில் சறுக்கியது.

    ரிக்கெல்டன் 71 ரன்னிலும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 8 ரன்னிலும், டிவால்ட் பிரேவிஸ் ரன் ஏதுமின்றியும், கைல் வெரைன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்கா 67 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. டோனி ஜி ஜோர்ஜி (81 ரன்), முத்துசாமி (6 ரன்) களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முத்துசாமி 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோர்ஜி சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாட உள்ளது.

    ×