என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குயிண்டன் டி காக்"

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த அந்த அணி 50 ஓவரில் 269 ரன்கள் எடுத்தது.

    பைசலாபாத்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. சல்மான் ஆகா 69 ரன்னும், முகமது நவாஸ் 59 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 53 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் பர்கர் 4 விக்கெட்டும், பீட்டர் 3 விக்கெட்டும், கார்பின் பாஸ்ச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அதிரடியாக ஆடி சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். டோனி டி சோர்சி அவருக்கு பக்கபலமாக நின்று அரை சதம் கடந்து 79 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி காக் 123 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக 3 வடிவிலான கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாட உள்ளது.
    • டி காக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இந்த 3 வடிவிலான தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக மார்க்ரம் இடம் பெற்றுள்ளார். டி20 அணிக்கு டேவிட் மில்லர் மற்றும் ஒருநாள் அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அதிரடி தொடக்க ஆட்டகாரரான குயிண்டன் டி காக் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். டிகாக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி நமீபியா அணியுடன் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. அந்த போட்டி வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். 140 போட்டிகளில் இடம்பெற்றுள்ள அவர் 17 சதம் மற்றும் 29 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார். டி காக் ஒருநாள் போட்டிகளில் 197 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்).

    ×