என் மலர்
நீங்கள் தேடியது "South Africa"
- இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கடும் பனி காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் 2-1 என்ற கணக்கில் முன்னிலை உள்ள இந்தியா அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் தொடரை இழக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
- 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியிலிருந்து காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சுப்மன் கில் விலகியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
பனிமூட்டம் காரணமாக இப்போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பினால், பேட்டிங் மேலும் வலுவடையும்.
- தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டு தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 117 ரன்னில் சுருட்டி அசத்திய இந்திய அணி அதே உத்வேகத்துடன் தொடரை கைப்பற்ற வரிந்து கட்டுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு ஒரு அரைசதம் கூட அடிக்காத இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பினால், பேட்டிங் மேலும் வலுவடையும்.
அதே சமயம் பேட்டிங்கில் தடுமாறும் தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டு தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது
- அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி நாளை மறுநாள் (டிச.17) நடைபெற உள்ளது.
இந்நிலையில் மிஞ்சியுள்ள இருபோட்டிகளில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் அக்சர் படேல் விலகியுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது காய்ச்சலால் விளையாடாத அக்சர் படேல், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அதே காரணத்துக்காக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டுமே குவித்ததால், அக்சர் படேல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார். இந்நிலையில் மிஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் அக்சர் படேல்.
- கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
- 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
- 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.
- கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது
- கட்டுமானத் திட்டத்தின் மேலாளருமான விக்கி ஜெய்ராஜ் பாண்டே உயிரிழந்தார்
தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் 4 மாடி கோயில் இடிந்து விழுந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது, திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இறந்த நான்கு பேரில், ஒருவர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினரும் கட்டுமானத் திட்டத்தின் மேலாளருமான விக்கி ஜெய்ராஜ் பாண்டே என அடையாளம் காணப்பட்டார்.
- 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது.
- 2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி, மார்ச் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி மொத்தம் பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. அவற்றில் இந்த தொடரும் ஒன்று. உலகக் கோப்பை போட்டிக்கான கனகச்சிதமான அணியை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் பக்கபலமாக இருக்கும் என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக எட்டு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. இதில் ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளனர். மற்றபடி அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவின் பார்ம் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. அவர் கடைசியாக களம் கண்ட 18 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரும் கணிசமாக ரன் குவித்தால் இந்தியாவின் பேட்டிங் வரிசை இன்னும் வலிமையடையும். 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா சூப்பர் பார்மில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய அவர் அண்மையில் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் 148 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இந்த தொடரிலும் அவரது அதிரடி ஜாலத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பும்ரா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 100 விக்கெட் மைல்கல்லை எட்டுவார். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா இடையே போட்டி நிலவுகிறது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இப்போது ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இருவரையும் பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியத்துடன், உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யாவின் வருகை அணியை சரியான கலவையில் வைத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் புதிய பந்தில் அருமையாக பந்து வீசினார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும்.
2026-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான எங்களது தயாரிப்பு, 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற உடனே தொடங்கி விட்டது. அதில் இருந்து சில புதிய விஷயங்களை முயற்சித்து பார்த்துள்ளோம். அவை அணிக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. கடைசியாக விளையாடிய 5-6 தொடர்களில் ஒரே மாதிரியான அணி கலவையுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். அதாவது அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ததில்லை. எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதை தொடருவோம்' என்றார்.
தென்ஆப்பிரிக்க அணி எய்டன் மார்க்ரம் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. டிவால்ட் பிரேவிஸ், குயின்டான் டி காக், கார்பின் பாஷ், ரீஜா ஹென்ரிக்ஸ் என 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய அதிரடி பட்டாளங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். மூத்த பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். கேஷவ் மகராஜ், மபகா, இங்கிடி, மார்கோ யான்சென் ஆகியோர் பந்து வீச்சு தாக்குதலுக்கு ஆயத்தமாக உள்ளனர்.
2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வேட்கையில் உள்ளனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில், 'ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். சிறந்த வீரர். உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். தனிநபராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்கு என்று பிரத்யேக வியூகம் எதுவும் தீட்டவில்லை. 20 ஓவர் கிரிக்கெட் என்றாலே குதூகலப்படுத்தும் வடிவமாகும். நாங்களும் அந்த பாணியிலேயே விளையாட விரும்புகிறோம். வீரர்கள் அழுத்தமின்றி உற்சாகமாக விளையாடி தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 12-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டி நடக்கும் கட்டாக்கில் இந்திய அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இரு தோல்வியும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சந்தித்தவையாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அல்லது ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், மார்க்ரம், டிவால்ட் பிரேவிஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லின்டே, மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், இங்கிடி, அன்ரிச் நோர்டியா.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- தென் ஆப்பிரிக்காவில் மதுபான பாரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இதில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மதுபான பாரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 2 சிறுவர்கள், ஒரு சிறுமி உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- விசாகப்பட்டினம், கோலிக்கு ராசியான மைதானம்.
- போட்டி நடக்கும் விசாகப்பட்டினத்தில் இந்திய அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
நடப்பு தொடரில் இந்தியாவின் பேட்டிங் சூப்பராக இருக்கிறது. விராட் கோலி, ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல் ரன் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். ஆனால் 2-வது ஆட்டத்தில் 358 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது. இரவில் பனியின் தாக்கம் இருப்பதால் பவுலர்கள் பந்தை கச்சிதமாக பிடித்து வீச முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் எடுக்க முடிகிறது. அதாவது சூழல் 2-வது பேட்டிங்குக்கே சாதகமாக காணப்படுவதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் 'டாஸ்' இந்தியாவை துரத்தும் துரதிர்ஷ்டமாக இருக்கிறது. கடைசி 20 ஒரு நாள் ஆட்டங்களில் தொடர்ச்சியாக டாசில் தோற்றுள்ள இந்தியாவுக்கு இன்றைய போட்டியிலாவது அதிர்ஷ்டம் அடிக்குமா என்பதை பார்க்கலாம்.
மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் இந்த ஆண்டில் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். அதனால் அவர்கள் வெற்றியோடு நிறைவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் இரு ஆட்டங்களில் முறையே 135 மற்றும் 102 ரன்கள் வீதம் எடுத்த விராட் கோலி 'ஹாட்ரிக்' சதம் விளாசுவாரா? என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். விசாகப்பட்டினம், கோலிக்கு ராசியான மைதானம். இங்கு ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் 3 சதங்கள் அடித்துள்ள கோலி மறுபடியும் சதம் கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே சமயம் தடுமாறும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் இன்னும் வலிமையடையும்.
நமது பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 85 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் மாற்று வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் இந்த ஆட்டத்திலும் அவருக்கு இடம் கிடைக்கும். இந்திய அணி சொந்த மண்ணில் ஒரே பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை 1986-87-ம் ஆண்டுக்கு பிறகு இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்க இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, பிரேவிஸ், யான்சென் நல்ல பார்மில் உள்ளனர். முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். தசைப்பிடிப்பால் அவதிப்படும் நன்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜிக்கு இடமிருக்காது என்று தெரிகிறது.
தென்ஆப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியா வலுவாக மீண்டு வரும் என்பது தெரியும். அத்துடன் இது தொடரை தீர்மானிக்கும் ஆட்டம் என்பதால் உண்மையிலேயே சிறந்த போட்டியாக இருக்கப்போகிறது. எங்களது அணியில் சில பவுலர்கள் பேட்டிங்கும் செய்வதன் மூலம் அணியின் கலவை சரியாக அமைந்துள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய பிரேவிஸ், யான்சென், கார்பின் பாஷ் போன்ற வீரர்கள் எந்த தருணத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். தற்போதைய பேட்டிங் வரிசை மீது நிறைய நம்பிக்கை உள்ளது. நாளைய தினம் (இன்று) நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.
மொத்தத்தில் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் அனல்பறக்கும் என்று நம்பலாம்.
போட்டி நடக்கும் விசாகப்பட்டினத்தில் இந்திய அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. தென்ஆப்பிரிக்கா இங்கு இதற்கு முன்பு ஒரு நாள் போட்டியில் ஆடியதில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா
தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ரையான் ரிக்கெல்டன், டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, பார்த்மேன்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
- இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை வெற்றியோடு தொடங்கி பரிகாரம் தேடிக் கொண்டனர். விராட் கோலியின் சதமும், ரோகித் சர்மா, கேப்டன் லோகேஷ் ராகுலின் அரைசதமும் 349 ரன்கள் குவிக்க உதவியதோடு வெற்றிக்கும் வித்திட்டது. பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் கலக்கினர். இன்றைய மோதலிலும் கோலி, ரோகித் சர்மாவின் ரன்வேட்டை தொடருமா? இந்த ஆட்டத்தோடு இந்திய அணி தொடரை சொந்தமாக்கி விடுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மார்கோ யான்சென் (70 ரன்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன்), கார்பின் பாஷ் (67 ரன்), ஆகியோரது அதிரடியால் இலக்கை நெருங்கி வந்தது. எக்ஸ்டிரா வகையில் அதிகமான ரன்களை (23) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உடல்நலக்குறைவால் முதல் ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா அணிக்கு திரும்புகிறார். அவரது வருகை அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும்.
'பொதுவாக நான் டாப்-3 வரிசையில் ஆடுவேன். ஆனால் இப்போது எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த இடத்தில் களம் காணுவேன்' என பவுமா குறிப்பிட்டார். சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் சுப்ராயனுக்கு இடமிருக்காது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு, ஒரு நாள் ஆட்டம் நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை 108 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.
தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
- ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் செல்வராகன் கேள்வி.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலை வகித்து வருகிறது. மேலும் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
இதனால் பலரும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நான் எப்போதும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன். ஜஸ்ப்ரித் பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? என குறிப்பிட்டுள்ளார்.






