search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zimbabwe"

    • சிக்கந்தர் ராசா வீசிய முதல் ஓவரில் டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.
    • பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    இப்போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். முதல் ஓவரை சிக்கந்தர் ராசா வீசிய வீசினார். டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். அந்த பால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஒரே பந்தில் 13 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் டி20 போட்டியில் முதல் பந்திலேயே 13 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

    மேலும், டி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய 2 ஆவது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஷ்வால் படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு தான்சானியாவை சேர்ந்த இவான் இஸ்மாயில் செலிமானி என்ற வீரர் ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசியுள்ளார்.

    • 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.
    • 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும் சுப்மன் கில் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    ரியான் பராக் 22 ரன்னிலும் சிவம் துபே 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது.

    இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    • நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • 168 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து வருகிறது.

    நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும் சுப்மன் கில் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    ரியான் பராக் 22 ரன்னிலும் சிவம் துபே 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    168 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து வருகிறது.

    5 போட்டிகள் டி20 தொடரில் 3 - 1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள்.
    • உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் ஜிம்பாப்வே அணி போராடும்.

    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 100 ரன், 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் என்று பெரிய பட்டாளமே வரிசை கட்டி நிற்கிறது. பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மிரட்டு கிறார்கள்.

    எதிர்பாராதவிதமாக முதலாவது ஆட்டத்தில் சிறிய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்த 2 ஆட்டங்களில் அதிக ரன் குவித்து வெற்றிக்கனியை பறித்தது. அதே போல் இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வசப்படுத்தும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். அதே சமயம் கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும். எனவே அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

    ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகந்தர் ராசா, வெஸ்லி மாதவெரே, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், கிளைவ் மடான்டே, முஜரபானி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் ஜிம்பாப்வே அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது.

    ஜிம்பாப்வே: வெஸ்லி மாதவெரே, டாடிவான்சே மருமானி, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன் ), ஜோனதன் கேம்ப்பெல், கிளைவ் மடான்டே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் என்கராவா, சதரா.

    மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • நாளை இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஹராரே:

    சுப்மன்கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை ஹராரேவில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய போட்டியில் இந்தியா தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பேட்டிங்கில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ருதுராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பந்து வீச்சில் அலேஷ்கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

    சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, தொடரை இழக்காமல் இருக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் பென்னாட், டியான் மியர்ஸ், மாதேவேரே, முசராபானி, சத்தரா, ரிச்சர்ட் நிகரவா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    வெற்றி கட்டாயத்துடன் களம் இறங்கும் ஜிம்பாப்வே அதற்காக கடுமையாக போராடும். ஆனால் இளம் இந்திய அணி வலுவாக இருப்பதால் ஜிம்பாப்வேவுக்கு கடினமாக இருக்கும்.

    • ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
    • இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக முகமதுல்லா 54 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானியும் பிரையன் பென்னட்டும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில், தடிவானாஷே மருமணி 1 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ஜோடி சேர்ந்த பிரையன் பென்னட்டும் சிக்கந்தர் ராசாவும் வங்கதேச பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 70 ரன்கள் குவித்து பிரையன் பென்னட் அவுட் ஆனார். சிக்கந்தர் ராசா 76 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என வங்கதேசம் கைப்பற்றியிருந்த நிலையில், 5வது டி20யில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

    • 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.


    இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது. 

    • ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாக ஹீத் ஸ்ட்ரீக் இருந்துள்ளார்.
    • சர்வதேச கிரிக்கெட்டில் ஹீத் ஸ்ட்ரீக் இதுவரை 455 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்தார். 49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரீக் 65 டெஸ்ட் போட்டிகள், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    1993 முதல் 2005-ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடி இருக்கும் ஹீத் ஸ்ட்ரீக் 455 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கல்லீரல் புற்றுநோயால் நீண்ட காலம் போராடி வந்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

    • முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
    • ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி கோப்பையை வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் நேற்று 3வது ஒருநாள் போட்டி தலைநகர் ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 44.5 ஓவர்கள் முடிவில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிபட்சமாக அந்த அணியின் சிகந்தர் ரசா 38 ரன்கள் அடித்தார். ஆப்கான் தரப்பில் அதிபட்சமாக ரசித்கான் 3 விக்கெட்களையும், பரூக்கி, நபி தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

    பின்னர் களம் இறங்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்தது. அதிபட்சமாக கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 38 ரன்கள் அடித்தார். முகமத் நபி 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

    ஜிம்பாப்பே அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜிம்பாப்வேயில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், டாவோஸ் பயணத்தை பாதியில் ரத்து செய்த அதிபர் எம்மர்சன், உடனடியாக நாடு திரும்பினார். #ZimbabwePresident
    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அறிவிப்பை அதிபர் எம்மர்சன் மனங்காக்வா அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் ஹராரே, தென்மேற்கு நகரமான புலவாயோ போன்ற இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்கின்றனர். இந்த வன்முறைப் போராட்டம் மற்றும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில், உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றிருந்த அதிபர் எம்மர்சன் மனங்காக்வா, மாநாட்டில் பங்கேற்காமல் நேற்று இரவே நாடு திரும்பினார்.



    பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது சரியான நடவடிக்கைதான் என்றும், பாதுகாப்பு படையினர் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    அதேசமயம் போராட்டக்காரர்களுக்கும் அதிபர் எம்மர்சன் மனங்காக்வா, கடும் கண்டனம் தெரிவித்தார். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் இந்த போராட்டம் அமைதியான போராட்டம் அல்ல என்று அவர் கூறினார்.  போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், காவல் நிலையங்களை சூறையாடி, ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை திருடிச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். #ZimbabwePresident
    ஜிம்பாப்வே நாட்டில் கரும்பு லோடு ஏற்றிச்சென்ற லாரியும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Zimbabwe #BusAccident
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே என்ற பகுதியில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற மூன்றாவது பேருந்து விபத்து இதுவாகும். ஏற்கனவே, நவம்பர் 6ம் தேதி ருசாபே பகுதியில் நடைபெற்ற விபத்தில் 50 பேரும், நவம்பர் 15ம் தேதி மேற்கு நிக்கல்சன் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 42 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #Zimbabwe #BusAccident
    வங்காள தேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் விரைவில் அவுட்டாகினர். 4-வது வீரராக களம் இறங்கிய முகமது மிதுன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
     
    4-வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக்யூ உடன் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தனர். மொமினுல் ஹக்யூ 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

    இறுதியில், வங்காள தேசம் 160 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்களுடனும், மெஹிது  ஹசன் மிராஸ் 68 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ஜார்விஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் சாரி 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.



    பிரெண்டன் டெய்லர் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி சதமடித்தார். அவர் 110 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, பீட்டர் மூர் 83 ரன்னில் வெளியேறினார். இவர்களது ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 300 ரன்களை எட்டியது.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    வங்காள தேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டும், மெஹிதி ஹாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். #BANvZIM
    ×