search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zimbabwe"

    • 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.


    இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது. 

    • ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாக ஹீத் ஸ்ட்ரீக் இருந்துள்ளார்.
    • சர்வதேச கிரிக்கெட்டில் ஹீத் ஸ்ட்ரீக் இதுவரை 455 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்தார். 49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரீக் 65 டெஸ்ட் போட்டிகள், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    1993 முதல் 2005-ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடி இருக்கும் ஹீத் ஸ்ட்ரீக் 455 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கல்லீரல் புற்றுநோயால் நீண்ட காலம் போராடி வந்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

    • முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
    • ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி கோப்பையை வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் நேற்று 3வது ஒருநாள் போட்டி தலைநகர் ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 44.5 ஓவர்கள் முடிவில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிபட்சமாக அந்த அணியின் சிகந்தர் ரசா 38 ரன்கள் அடித்தார். ஆப்கான் தரப்பில் அதிபட்சமாக ரசித்கான் 3 விக்கெட்களையும், பரூக்கி, நபி தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

    பின்னர் களம் இறங்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்தது. அதிபட்சமாக கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 38 ரன்கள் அடித்தார். முகமத் நபி 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

    ஜிம்பாப்பே அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜிம்பாப்வேயில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், டாவோஸ் பயணத்தை பாதியில் ரத்து செய்த அதிபர் எம்மர்சன், உடனடியாக நாடு திரும்பினார். #ZimbabwePresident
    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அறிவிப்பை அதிபர் எம்மர்சன் மனங்காக்வா அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் ஹராரே, தென்மேற்கு நகரமான புலவாயோ போன்ற இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்கின்றனர். இந்த வன்முறைப் போராட்டம் மற்றும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில், உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றிருந்த அதிபர் எம்மர்சன் மனங்காக்வா, மாநாட்டில் பங்கேற்காமல் நேற்று இரவே நாடு திரும்பினார்.



    பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது சரியான நடவடிக்கைதான் என்றும், பாதுகாப்பு படையினர் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    அதேசமயம் போராட்டக்காரர்களுக்கும் அதிபர் எம்மர்சன் மனங்காக்வா, கடும் கண்டனம் தெரிவித்தார். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் இந்த போராட்டம் அமைதியான போராட்டம் அல்ல என்று அவர் கூறினார்.  போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், காவல் நிலையங்களை சூறையாடி, ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை திருடிச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். #ZimbabwePresident
    ஜிம்பாப்வே நாட்டில் கரும்பு லோடு ஏற்றிச்சென்ற லாரியும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Zimbabwe #BusAccident
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே என்ற பகுதியில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற மூன்றாவது பேருந்து விபத்து இதுவாகும். ஏற்கனவே, நவம்பர் 6ம் தேதி ருசாபே பகுதியில் நடைபெற்ற விபத்தில் 50 பேரும், நவம்பர் 15ம் தேதி மேற்கு நிக்கல்சன் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 42 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #Zimbabwe #BusAccident
    வங்காள தேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் விரைவில் அவுட்டாகினர். 4-வது வீரராக களம் இறங்கிய முகமது மிதுன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
     
    4-வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக்யூ உடன் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தனர். மொமினுல் ஹக்யூ 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

    இறுதியில், வங்காள தேசம் 160 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்களுடனும், மெஹிது  ஹசன் மிராஸ் 68 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ஜார்விஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் சாரி 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.



    பிரெண்டன் டெய்லர் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி சதமடித்தார். அவர் 110 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, பீட்டர் மூர் 83 ரன்னில் வெளியேறினார். இவர்களது ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 300 ரன்களை எட்டியது.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    வங்காள தேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டும், மெஹிதி ஹாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். #BANvZIM
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் அணி 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. #BANvZIM
    ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்கவில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், இம்ருல் கயஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வெளியேற்றினர். லித்தன் தாஸ் 9 ரன்னிலும், இம்ருல் கயஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர்.

    அதன்பின் இறங்கிய மொமினுல் ஹக் நிதானமாக ஆடினார். தொடர்ந்து இறங்கிய மொகமது மிதுன் டக் அவுட்டானார்.



    அவரை அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் மொமினுல் ஹக்குக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
    இதனால் இருவரும் நின்று நிதானமாக ஆடியதால் வங்காள தேசத்தின் ரன்கள் உயர்ந்தது. இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.

    நிதானமாக ஆடிக் கொண்டிருந்த மொமினுல் ஹக் 161 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 266 ரன்கள் குவித்தது. அடுத்து இறங்கிய தைஜுல் இஸ்லாம் 4 ரன்னில் வெளியேறினார். 

    இறுதியில், முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் அணி 90 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 111 ரன்களுடனும், மகமதுல்லா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணி சார்பில் கைல் ஜார்விஸ் 3 விக்கெட்டும், சதாரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #BANvZIM
    ஜிம்பாப்வே நாட்டில் எதிர் எதிரே வந்த 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Zimbabwe #BusAccident
    ஹராரே:

    ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையில், எதிர் எதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Zimbabwe #BusAccident
    வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. #BANvZIM
    வங்காளதேசம் - ஜிம்பாப்வே இடையிலான முதல் டெஸ்ட் சியால்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 282 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 143 ரன்னில் சுருண்டது.

    இதனால் ஜிம்பாப்வே 139 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர் மசகட்சா மட்டும் நிலைத்து நின்று 48 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது. தைஜுல் இஸ்லாம் ஐந்து விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஒட்டுமொத்தமாக ஜிம்பாப்வே 320 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    ஆட்டத்தின் 3-வது நாளான நேற்று 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வங்காளதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்காளதேச அணி 169 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனால் ஜிம்பாப்வே 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நவம்பர் 11-ம் தேதி தொடங்குகிறது. #BANvZIM 
    ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 10 மாதங்களில் ஒரே பள்ளிக்கூடத்தை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பமாக ஆனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    ஹராரே:

    ஜிம்பாப்வேயின் சிருமன்சு மாவட்டத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் இரண்டாம் நிலை பள்ளி மாணவிகள் 16 பேர் கர்ப்பமாகி உள்ளனர். இது குறித்து தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ‘எங்களின் எச்.ஐ.வி தடுப்பு செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதில் இளம் வயதில் கர்ப்பம் தரிப்பது முக்கிய பங்கு வகிக்கின்றது.

    ஓர்டன் பள்ளியில் 16 மாணவிகள் கடந்த 10 மாத காலத்தில் கர்ப்பமாக ஆகியுள்ளது உறுதியாகியுள்ளது. இதில் சில மாணவிகள் பள்ளிக்கு வராமல் எங்கோ ஓடி விட்டார்கள். கர்ப்பமான மாணவிகள் அனைவரும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள்.

    பள்ளிக்கூடம் அருகில் உள்ள பகுதிகளில் சுரங்க தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் அமெரிக்க டாலர்களை தான் ஊதியமாக பெறுகிறார்கள்.

    இதை காட்டி மயக்கி மாணவிகளை தங்கள் வலையில் வீழ்த்துகிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.  இதை தடுக்க மாணவிகளின் பெற்றோர்களும், அரசியல் தலைவர்களும் உதவ வேண்டும்’ என கூறியுள்ளார்.
    வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. #BANvZIM
    ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாமில்டன் மசகட்சா, பிரியன் சாரியும் களமிறங்கினர்.



    பிரியன் சாரி 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய பிரெண்டன் டெய்லர் 6 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய மசகட்சா 52 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சியன் வில்லியம்ஸ் பொறுப்பாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார். சிக்கந்தர் ராசா 19 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர் மூர் 37 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சக்பவா 20 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டும், அபு ஜெயத், நஸ்முல் இஸ்லாம், மகமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #BANvZIM
    சிட்டகாங்கில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் அபார வெற்றி பெற்றது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் சிட்டகாங்கில் 2-வது ஒருநாள் போட்டி பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.
     
    தொடக்க வீரர்கள் மசகட்சா (14), செப்ஹாஸ் (20) சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அடுத்து வந்த பிராண்டன் டெய்லர் (75), வில்லியம்ஸ் (47), சிகந்தர் ரசா (47) சிறப்பாக விளையாடினார்கள். இதனால் ஜிம்பாப்வே 50 ஓவரில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 246 ரன்கள் சேர்த்தது.



    வங்காள தேச அணியின் மொகமது சயிபுதின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, வங்காள தேசம் 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் லித்தன் தாஸ் மற்றும் இம்ருல் கயாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இருவரும் பொறுப்புடனும், நிதானமாகவும் ஆடி அரை சதமடித்தனர். லித்தன் தாஸ் 83 ரன்னிலும், இம்ருல் கயாஸ் 90 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பசே மகமது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

    தொடர்ந்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன் ஆகியோர் இறுதிவரை நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.    

    இறுதியில், வங்காள தேசம் அணி 44.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் 40 ரன்னுடனும், மொகமது மிதுன் 24 ரன்னுடனும் களத்தில் நின்றனர். மொகமது சயிபுதின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியுடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வங்காள தேசம் கைப்பற்றியுள்ளது. #BANvZIM
    ×