என் மலர்
நீங்கள் தேடியது "T20 World Cup 2026"
- தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
- இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது.
இஸ்லாமாபாத்:
வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது. இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது. ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்க தேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே வங்க தேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, ஐதராபாத் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் வங்கதேச போட்டியை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் போட்டி நடத்த முடியாவிட்டால் நாங்கள் நடத்த தயார் என்று பாகிஸ்தான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
- டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.
- இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. மேலும் சில அணிகள் பயிற்சியாளர்களையும் நியமித்து வருகின்றனர்.
அந்த வகையில் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவின் விக்ரம் ரத்தோரை நியமித்துள்ளது.
முன்னதாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மலிங்காவை குறுகிய கால அடிப்படையில் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டெவன் கான்வே, ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் , மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி.
- நான் பள்ளியில் இருந்தபோது, உலக கோப்பை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தோம்.
- இந்தியா முதல் சுற்றில் இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும்.
10-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த முறை ஐசிசி டி20 உலக கோப்பையை யாரும் பார்க்கப் போவதில்லை என தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:-
இந்த முறை ஐசிசி டி20 உலக கோப்பையை யாரும் பார்க்கப் போவதில்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தியா மற்றும் நமீபியா போன்ற போட்டிகள் உங்களை டி20 உலக கோப்பையிலிருந்து உண்மையில் விலக்கி வைக்கின்றன.
1996, 1999 மற்றும் 2003 -ம் ஆண்டுகளில், நான் பள்ளியில் இருந்தபோது, உலக கோப்பை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தோம். உலகக் கோப்பை அட்டைகளைச் சேகரித்து அட்டவணையை அச்சிட்டோம். ஏனெனில் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தது. அந்த எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகும்.
இந்தியா முதல் சுற்றில் இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும். அது அதை இன்னும் உற்சாகப்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில், அந்த எதிர்பார்ப்பு உணர்வு இல்லை.
- ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் கூப்பர் கனோலி இடம்பெற்றுள்ளார்.
- மிச்சேல் ஓவன், பென் டுவார்சியஸ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிக்கான இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் கூப்பர் கனோலி இடம்பெற்றுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான அவர் இடதுகை சுழற்பந்து வீரர் ஆவார். பிக் பாஷ் லீக் போட்டியில் அவரது ஸ்டிரைக் ரேட் 166.66 ஆக இருந்தது.
மிச்சேல் ஓவன், பென் டுவார்சியஸ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
காயத்தில் இருந்து குணம் அடைந்த கம்மின்ஸ், ஹேசல் வுட், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் இடம்பெற்று உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி
மிச்சேல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனெமன், மேக்ஸ் வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.
- 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் உதவியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது. அவரை குறுகிய கால அடிப்படையில் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.
2014-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை இலங்கை அணி மலிங்கா தலைமையில் வென்றது நினைவு கூரத்தக்கது.
- டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
- ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி:-
ரஷீத் கான் (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், குர்பாஸ், முகமது இஷாக், அடல், தர்வீஷ் ரசூலி, ஷாஹிதுல்லா கமால், ஒமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, நூர் அகமது, முஜீப் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்சாய்.
- 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
- இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
சென்னை:
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிரடி வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித் ஆகியோருக்கு இடம் இல்லை.
ஹாரி புரூக் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பேன்டன், ஜேக்கப் பெதெல், ஜாஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாம் கரண், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், ஃபில் சால்ட், ஜோஷ் டங், மற்றும் லூக் வுட்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
- இந்த தொடரில் இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார்.
மும்பை:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த அணியில் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இஷான் கிஷன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார்.
நடந்து முடிந்த SMAT தொடரில் கேப்டனாக மற்றும் பேட்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.
இந்த நிலையில். டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம்:-
அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
- இதில் கேப்டன் பொறுப்பில் இருந்து சாரித் அசலங்கா அதிரடியாக நீக்கப்பட்டார்.
கொழும்பு:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பொறுப்பில் இருந்து சாரித் அசலங்கா அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக கேப்டன்ஷிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இலங்கை தேர்வு குழு தலைவர் பிரமோதயா விக்ரமசிங்கா தெரிவித்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானில் விளையாடிய போது குண்டு வெடித்ததால் பாதுகாப்பு அச்சத்தால் அசலங்கா பாதியில் நாடு திரும்பினார். அங்கு தொடர்ந்து விளையாடும்படி இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியும் அவர் அதை ஏற்காததே பதவி பறிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். அசலங்கா ஒரு வீரராக தொடருகிறார்.
- 10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்குகிறது.
- 20 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
துபாய்:
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலக கோப்பையில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், 20 ஓவர் தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வானது.
இவை 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் டி20 உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை tickets.cricketworldcup.com தளத்தில் இன்று மாலை 6.15க்கு தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






