என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvsNZ"

    • டி காக் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
    • ரிக்கெல்டன் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வன்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்காவின் மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 7 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெக்கொன்சி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக் 3-வது பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ரிக்கெல்டன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 1.5 ஓவரில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த பிரேவிஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். தென்ஆப்பிரிக்கா பவர் பிளேயான முதல் 6 ஓவரில 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் அடித்துள்ளது.

    • கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 196 இலக்கை இந்தியா சேசிங் செய்தது.
    • இதனால் தென்ஆப்பிரிக்கா 200 ரன்களுக்கு மேல் குவிக்க திட்டமிட்டிருக்கலாம்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து இலங்கை புண்ணியத்தால் (பாகிஸ்தானுக்கு எதிராக 147 ரன்களை எட்டியது) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா 196 இலக்கை எட்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    தென்ஆப்பிரிக்கா அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
    • இந்த முறை தென்ஆப்பிரிக்கா அணி எளிதாக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை.

    ஐசிசி தொடரில் மிகவும் எதிர்பார்க்கும் அணியாக தென்ஆப்பிரிக்கா எப்போதுமே திகழ்ந்து வரும். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தில் நாக்அவுட் சுற்றில் ஏமாற்றம் அளிக்கும். அதேவேளையில் நட்சத்திர அணியாகவே திகழாது நியூசிலாந்து. ஆனால் வீறுகொண்டு எழுந்து விளையாடுவார்கள்.

    இப்போதும் அதேபோன்றுதான் தென்ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து இலங்கை தயவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இந்த இரு அணிகளும் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் அரையிறுதியில் மோதுகின்றன. இதற்கு முன்னதாக மூன்று முறை இரு அணிகளும் உலகக் கோப்பை நாக்அவுட் போட்டியில் விளையாடியுள்ளன. மூன்று முறையும் நியூசிலாந்துதான் வெற்றி வாகை சூடியுள்ளது.

    2011 உலகக் கோப்பை காலிறுதி, 2015 உலகக் கோப்பை அரையிறுதி, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆகியவற்றில் தென்ஆப்பிரிக்காவை நியூசிலாந்து வீழ்த்தியுள்ளது.

    ஆனால் இந்த முறை தென்ஆப்பிரிக்கா மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது. இதனால் பழைய வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.

    • நியூசிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது.
    • நியூசிலாந்து அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 32-வது லீக் ஆட்டம் புனேயில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா- டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    தென்ஆப்பிரிக்கா அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி இலங்கை (102 ரன்), ஆஸ்திரேலியா (134 ரன்), இங்கிலாந்து (229 ரன்), வங்காளதேசம் (149 ரன்), பாகிஸ்தான் (1விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. நெதர்லாந்திடம் 38 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    நியூசிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. நாளையும் இந்த வெற்றி நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்வதில் திணறுகிறது. பாகிஸ்தானுக்கும் எதிராக இதை காண முடிந்தது. முதலில் ஆடினால் மட்டுமே அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கிறது.

    நியூசிலாந்து அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டத்தில் (இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியா (4 விக்கெட்), ஆஸ்திரேலியா (5 ரன்) அணிகளிடம் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் நியூசிலாந்து இருக்கிறது.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரு அணிகளும் 71 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 41-ல், நியூசிலாந்து 25-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை.

    • முதல் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
    • 2-வது அரைஇறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    9-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.

    நேற்று துபாயில் நடைபெற்ற முதல் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று 2-வது அரைஇறுதி போட்டி நாளை லாகூரில் நடக்கிறது. இதில் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா-ஏ பிரிவில் 2-ம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    ×