என் மலர்
நீங்கள் தேடியது "ஹாரி புரூக்"
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்
இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார். நியூசிலாந்து தரப்பில் சக்கரி ஃபூல்க்ஸ் 4 விக்கெட்டுகளும் ஜேக்கப் டுஃபி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்
224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 36.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டெரில் மிட்செல் 78 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 -0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்.
224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தற்போது வரை 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போட்டியில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். தனது 15 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக கேன் வில்லியம்சன் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது
- 166 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.
இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹாரி புரூக் நங்கூரமிட்டு அதிரடியாக விளையாடினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் ஹாரி புரூக் ஸ்கோர்கார்டை உயர்த்தினார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க ஜேமி ஓவர்டன் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.
166 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்த நிலையில், கேப்டன் ஹாரி புரூக் மட்டும் அதிரடியாக விளையாடி 82 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளைய அவர் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனால் 35.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
9 விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் அதிரடியாக விளையாடி ஹாரி புரூக் அடித்த சதம் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சதங்களில் ஒன்றாக வரலாற்றில் முத்திரை படைத்தது.
- 5-வது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
- 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடர் சமமானது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கூட மிஸ் செய்யாமல் அனைத்து போட்டியிலும் சிராஜ் விளையாடி அசத்தியுள்ளார். 5 போட்டிகளில் விளையாடி 185.3 ஓவர்கள் (1113 பந்துகள்) வீசி 26 மெய்டனுடன் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார்.
இந்நிலையில் சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன் என இங்கிலாந்து அணியின் பேட்டர் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன். 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி, ஒவ்வொரு முறையும் 135kmph+ வேகத்தில் பந்து வீசினார். அவர் சிறந்தவர். இந்த வெற்றி அவருக்கு உரித்தானது.
என ஹாரி ப்ரூக் கூறினார்.
- நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
- 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.
2 ஆவது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் தங்களது சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதம் விளாசியவர்கள் பட்டியலில் 24 சதங்களுடன் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறினார்.
பாண்டிங் (ஆஸ்திரேலியா), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜெயவர்தனே (இலங்கை) ஆகியோர் தங்களது சொந்த மண்ணில் 23 டெஸ்ட் சதங்களை விளாசி அப்பட்டியலில் 2 ஆம் இடத்தில உள்ளனர்.
- இங்கிலாந்து வெற்றி பெற 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- இங்கிலாந்து நான்காம் நாள் முடிவில் 339 ரன்கள் எடுத்துள்ளது.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் டக்கெட் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஒல்லி போப் 27 ரன்னில் வெளியேறினார்.
ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதம் கடந்தனர்.
4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் 111 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 105 ரன்னில் வெளியேறினார்.
மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.
இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
- நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலிருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார்.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வரும் 24-ம் தேதி நடக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6¼ கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை வாங்கியது.
இதற்கிடையே, நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹாரி புரூக்கிற்கு பி.சி.சி.ஐ. 2 ஆண்டு தடை விதித்துள்ளது. ஐ.பி.எல். புதிய விதிப்படி ஒரு வீரர் அத்தியாவசிய காரணமின்றி விலகினால் 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என்ற ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனாலேயே அவருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்தது.
- சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்.
துபாய்:
ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரில் ஹாரி புரூக் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி 3 சதம் மற்றும் 1 அரைசதம் குவித்து அசத்தினார்.
2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக் ஐதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்.
- நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 126 ரன்களுக்கு சுருண்டது.
- இதன்மூலம் இங்கிலாந்து 267 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மவுண்ட் மாவ்கனி:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 58.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 89 ரன்னும், டெக்க்ட் 84 ரன்னும் எடுத்தனர். ஒல்லி போப் 42 ரன்னும், போக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், சபுத்தி, குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 306 ரன்களில் ஆல் அவுட்டானது. டாம் பிளெண்டல் சதமடித்து, அவர் 138 ரன்னிலும், கான்வே 77 ரன்னிலும் அவுட்டாகினர்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
19 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 374 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ரூட், ஹாரி புரூக் மற்றும் பென் போக்ஸ் ஆகியோர் அரை சதமடித்தனர். ரூட் 57 ரன்னிலும், ஹாரி புரூக் 54 ரன்னிலும், பென் போக்ஸ் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் ஒரு ரன்னில் அரை சதம் தவறவிட்டார்.
நியூசிலாந்து சார்பில் டிக்னர், பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டும், நீல் வாக்னர், குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்களை
ஸ்டூவர்ட் பிராட் விரைவில் வெளியேற்றினார். இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
இந்நிலையில், நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்தின் டேரில் மிட்சேல் அரை சதம் அடித்து அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதியில் நியூசிலாந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்த்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் , ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஹாரி புரூக்குக்கு அளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 228 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்து இறங்கிய மார்க்ரம், அதிரடியில் மிரட்டினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட அரை சதமடித்து அவுட்டானார்.
3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், புரூக் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.
அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன் எடுத்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 55 பந்துகளில் 100 ரன்களுடனும், கிளாசன் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. இதையடுத்து, 229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
- டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் இடம் தான் பேட்டிங் செய்ய ஒரு சிறப்பான இடம் என்று அனைவரும் கூறுவார்கள்.
- சமூக வலைதளத்தில் என்னை கிண்டல் செய்யாத ரசிகர்களே கிடையாது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரர் ஹாரி புரூக் 55 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 100 ரன்களை குவித்தார்.
பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்த ஹாரி புரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சதம் அடித்தது குறித்து ஹாரி புரூக் கூறியதாவது:-
இந்த இரவு எனக்கு ஒரு ஸ்பெஷலான இரவு. ஒரு வழியாக நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த போட்டியின் மிடில் ஓவர்களில் சற்று பதட்டமாக தான் இருந்தேன். ஆனாலும் அதன்பிறகு என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சிறப்பாக விளையாட முடிந்தது. டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் இடம் தான் பேட்டிங் செய்ய ஒரு சிறப்பான இடம் என்று அனைவரும் கூறுவார்கள்.
ஆனால் என்னை பொறுத்தவரை நான் எங்கு களமிறங்கி விளையாடவும் தயார். ஏனெனில் என்னுடைய பேட்டிங் சக்சஸ் பெரும்பாலும் ஐந்தாவது இடத்தில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. என்னுடைய நான்கு டெஸ்ட் சதங்களுமே ஐந்தாவது இடத்தில் இறங்கி கிடைத்தது தான். இந்த போட்டியில் ரசிகர்கள் எங்களை உற்சாகப்படுத்தியதில் மகிழ்ச்சி.
சமூக வலைதளத்தில் என்னை கிண்டல் செய்யாத ரசிகர்களே கிடையாது. இன்று என் சதத்தை பார்த்து பாராட்டிய ரசிகர்கள் தான் சில நாட்களுக்கு முன்னர் என்னை விமர்சித்து இருந்தனர். இப்போது அவர்களையெல்லாம் வாயடைத்து போக வைத்ததில் மகிழ்ச்சி. நான் இன்று என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.
என ஹாரி புரூக் கூறினார்.
- இங்கிலாந்து வெற்றிபெற 251 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
- ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி அரை சதமடிக்க இங்கிலாந்து 254 ரன்கள் எடுத்து வென்றது.
லண்டன்:
ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 80 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் 77 ரன்னும், கவாஜா 43 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது பென் டக்கெட் 23 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொயீன் அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய சாக் கிராலி 44 ரன்னில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து ஜோ ரூட் 21 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஹாரி புரூக் அரை சதமடித்து ஆறுதல் அளித்தார். 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில், இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 254 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கிறிஸ் வோக்ஸ் 32 ரன்னும், மார்க் வுட் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தற்போது ஆஷஸ் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.






