என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammed Siraj"

    • கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
    • ஒரு வருடத்தில் 2-வது முறையாக இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் 0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

    இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் அதில் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் கம்பீர் டவுன் டவுன் என கோஷமிட்டனர். அதனை கம்பீர் கண்டுகொள்ளவில்லை.

    இதனை பார்த்த இந்திய வீரர் சிராஜ் அப்படியெல்லாம் கோஷமிட வேண்டாம் என்பது போல வாயில் விரல் வைத்து சைகை காட்டினார். தொடர்ந்து அனைவரையும் அமைதி காக்கவும் அவர் வேண்டி கொண்டார். இதில் ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன்.
    • தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.

    கொல்கத்தா:

    இந்தியாவுக்கு வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தமாகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த தொடர், 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக தென்ஆப்பிரிக்க அணி, நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வந்திருக்கிறார்கள். சமீபத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாங்களும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சமன் செய்தோம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். நல்ல பார்மில் இருப்பதால் நாங்களும் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

    தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன். வலுவான அணிக்கு எதிராக ஆடுவது எனது பந்து வீச்சை மேம்படுத்திக் கொள்ள உதவும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்' என்றார்.

    • இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
    • சிராஜ் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டும் 2-வது டெஸ்டில் 3 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நாளையுடன் முடிகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய 4-வது ஆட்ட நேர முடிவில் இந்தியா 63 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 58 ரன்கள் தேவையாக உள்ளது. இந்தியா வெற்றி பெறவே அதிக அளவில் வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் சிராஜ் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டும் 2-வது டெஸ்டில் 3 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம் இந்த ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரானார். இவருக்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த முசரபானி 36 விக்கெட்டுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    அதனை தொடர்ந்து ஸ்டார்க் (29), நாதன் லயன் (24), ஜோமல் வாரிகன் (23) என அதற்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

    • பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கேஎல் ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அந்த வகையில் பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாத்னை படைத்துள்ளார். அதேபோல கேஎல் ராகுல் 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட் தொடர்கிறார். இதை தவிர பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை.

    அடுத்ததாக பந்து வீச்சில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பும்ரா தொடர்கிறார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.

    ஆல்ரவுண்டரில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் ஜடேஜா உள்ளார். இந்த பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிடித்துள்ளார்.

    • காயம் காரணமாக பும்ராவுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படுகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பும்ராவின் முடிவை ஆதரித்துள்ளார்.

    காயம் காரணமாக முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாட பும்ரா முடிவு செய்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுகிறார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. டி20 தொடரில் மட்டும் விளையாடுகிறார்.

    பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-

    வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் குறித்து பும்ரா கவலைப்படுவதில்லை. அவருக்கு முதுகுப் பகுதியில் மோசமான காயம் ஏற்பட்டு, மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் பந்து வீசி, காயம் ஏற்பட்டிருந்தால் அதன்பிறகு அவரால் பந்து வீச முடியுமா அல்லது முடியாதா? என்பதை சொல்ல முடியாது. இது மோசமானது.

    அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர். ஆசிய கோப்பை தற்போதுதான் முடிவடைந்துள்ளது. அடுத்த வரும் டி20 உலகக் கோப்பை வருகிறது. 2027-ல் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அவர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய ரசிகர்கள் புரிந்து கொள்வது அவசியம். அவர் இந்திய அணியின் முதுகெலும்பு. அணிக்கு விளையாட தயாராக இருக்கும்போதெல்லாம், நாட்டிற்கான சிறப்பாக செயல்பட விரும்புவார். அவர் காயம் அடைந்தால், எப்படி செயல்பட முடியும்?.

    இது நுட்பமான சூழ்நிலை. அவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், அதில் இருந்து அவரால் குணம் அடைய முடியும். ஆனால், காயத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஏனென்றால், ரன்-அப், பவுலிங் ஆக்ஷன் மிகவும் கடினமானது. அதனால், பும்ரா சரியான முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறேன்.

    இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. கடைசி டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிராஜ் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றார்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ், ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

    அதேபோல், சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் ஹென்றி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய கடைசியாக 3 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை தயாரித்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் இதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

    இவருடன் இறுதிப் பட்டியலில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியுடம் இடம் பிடித்துள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியது.

    இறுதிப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸ் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 எனக் கைப்பற்றியது.

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
    • முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார்.

    இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர்.

    இந்த தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

    அதிலும் குறிப்பாக பும்ராவைத் தவிர்த்து, முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி நாளில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அது நம்ப முடியாத முயற்சி. 186 ஓவர்கள் பந்து வீசிய பிறகும், கடைசி நாளில் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துவது சிராஜின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தின் அறிகுறியாகும் என்று பாராட்டியுள்ளார்.

    பணிச்சுமை மேலாண்மை காரணமாக இறுதித் தேர்வில் பும்ரா பங்கேற்கவில்லை என்று பல இடங்களில் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார்.
    • முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளிலும் ஓய்வின்றி விளையாடியது மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக திகழ்ந்தார்.

    இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார். சிராஜ்- விராட் கோலி சகோதர்கள் போன்று பழகி வருகிறார்கள்.

    கடந்து 2018-ம் ஆண்டு சிராஜுக்கு மோசமான ஐபிஎல் தொடராக இருந்தது. அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து ஆர்.சி.பி அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.

    எனவே முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர். அவரிடம் இருந்து பெற்ற ஆலோசனைகளை தான் சிராஜ் கையாள்கிறார். விராட் கோலியிடம் இருந்து அவர் கோபம் மற்றும் வெற்றிக்கான வெறி ஆகியவற்றை மற்றும் கற்றுக் கொள்ளவில்லை. உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த பிட்னஸ் ஆலோசனைகளையும் விராட் கோலியிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் விராட் கோலி கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை சிராஜ் தனது வீட்டின் சுவற்றில் பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இந்த ஜெர்சி 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடைசி டெஸ்ட் போட்டியை நினைவுகூரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.
    • டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ஒரு இடமும் சுப்மன் கில் 3 இடங்கள் பின் தங்கி உள்ளனர். ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் கில் 13-வது இடத்திலும் உள்ளனர். முதல் இடத்தில் ரூட்டும் ஹாரி புரூக்கும் தொடர்கின்றனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்தை பிடித்து அசத்தி உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 3 இடங்கள் பின் தங்கி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    • கிறிஸ் வோக்ஸால் பேட்டிங் செய்ய முடியாததால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுப்பதை தடுக்க திட்டம்.
    • விக்கெட் கீப்பர் ஜுரெலை தயாராக இருக்கும்படி தெரிவிக்க முகமது சிராஜ் என்னிடம் தெரிவித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 5ஆவது நாள் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-2 என சமன் செய்தது.

    கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 4 விக்கெட் இருந்தது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

    7ஆவது விக்கெட்டாக ஸ்மித் ஆட்டமிழந்ததும், அட்கின்சன் களம் இறங்கினார். அப்போது இங்கிலாந்து 347 ரன்கள் எடுத்திருந்தது. அட்கின்சன் ஒரு பக்கம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளையாடிக் கொண்டிருந்தார். என்றாலும் மறுமுனையில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய முடியாத நிலையில் கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். மறுமுனையில் அட்கின்சன் விளயைாடினார். அப்போது இங்கிலாந்து அணிக்கு 17 ரன்கள் தேவை.

    அட்கின்சன் அதிரடியாக விளையாட முடிவு செய்தார். அதேவேளையில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து, மீண்டும் ஸ்டிரைக் எடுத்துக் கொள்ள முடிவு செய்தார்.

    இந்த நிலையில்தான் சிராஜ் வீசிய 84ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் அட்கின்சன் சிக்ஸ் அடிப்பார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. அப்போது சுப்மன் கில்லுக்கும், சிராஜுக்கும் இடையில் லேசான வாக்குவாதம் எற்பட்டது போன்ற வீடியோ வெளியானது.

    இதுகுறித்து சுப்மன் கில் தற்போது விவரித்துள்ளார். இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

    84ஆவது ஓவரின் கடைசி பந்தை அட்கின்சன் எதிர்கொள்வார். அப்போது முகமது சிராஜ் உடன் ஆலோசிக்கும்போது சிக்ஸ் அடிக்க முடியாத வகையிலும், அதேவேளையில் சிங்கிள் ரன் ஓடாத முடியாத வகையில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் வகையிலும் பந்து வீச திட்டமிடப்பட்டது. அப்படி வீசினால் Bye ரன் ஓட முடியாத வகையில் ஜுரெலை விக்கெட் கீப்பிங் கையுறையை கழற்றி ரன்அவுட் செய்ய தயாரான நிலையில் இருக்க சொல்லும்படி என்னிடம் சிராஜ் தெரிவித்தார்.

    என்னிடம் தெரிவித்த உடன் அவர் பந்து வீச சென்றுவிட்டார். நான் ஜுரெலிடம் தெரிவிப்பதற்கு முன் சிராஜ் பந்து வீச ஓடி வந்து விட்டார். இதனால் ஜுரெலால் கையுறையை கழற்ற முடியவில்லை. ஆகவே, கடைசி பந்தில் Bye மூலம் ஒரு ரன் ஓடினர். எங்கள் திட்டம் சரியாக வேலை செய்யவில்லை.

    இதனால் முகமது சிராஜ் என்னிடம் வந்து, ஜுரெலிடம் திட்டத்தை சொன்னியா? எனக் கேட்டார். இதனால் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது. நான் அவரிடம் விளக்கமாக கூறினேன்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்தார்.

    84ஆவது ஓவரில் இங்கிலாந்து 7 ரன்களும், அடுத்த ஓவரில் 3 ரன்களும் அடித்தது. இதனால் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அட்கின்சன் க்ளீன் போல்டானார்.

    • பரபரப்பான கடைசி டெஸ்டில், 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
    • இந்தியா வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் அபாரமான பந்து வீசினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக விளையாடினார். ஓய்வு அளிக்கப்படாமல் 5 போட்டிகளிலும் விளையாட வைக்கப்பட்டார். 5 போட்டிகளில் தொய்வின்றி பந்து வீசினார். கடைசி போட்டியின் 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    பணிச்சுமை காரணமாக பும்ரா இடம் பெறாத நிலையில், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு குழுவை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கடைசி டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    முகமது சிராஜ் ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து பந்து வீசியதை கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கவாஸ்கர் முகமது சிராஜ் குறித்து கூறியதாவது:-

    இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது கவுரவம். நீங்கள் 140 கோடி மக்களை பிரதிநிதித்துவம் படுத்துகிறீர்கள். அதைத்தான் நாங்கள் முகமது சிராஜில் பார்த்தோம். சிராஜ் தனது எனர்ஜியை முழுமையாக வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். அவர் பணிச்சுமையின் என்பதை நீக்கிவிட்டார். பணிச்சுமை என்ற வார்த்தை இந்திய கிரிக்கெட் அகராதியிலிருந்து நீக்கப்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் முதல் டெஸ்டில் 41 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் 2-வது டெஸ்டில் 31.3 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளையும் 3-வது முதல் டெஸ்டில் 36.2 ஓவர்களும் 4 விக்கெட்டும், 4-வது டெஸ்டில் 30 ஓவர்களும் 1 விக்கெட்டும் 5-வது டெஸ்டில் 46.3 ஓவர்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்திய பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். மேலும் இங்கிலாந்து வீரர்களில் கூட எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 5 போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.

    ஒரு வேகப்பந்து வீச்சு வீரர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடி அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை இந்திய ரசிகர்கள் உள்பட பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜை போர் வீரரைப் போன்றவர் என புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×