என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர்"

    • ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம்.
    • இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கவுரவம்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இந்த சர்ச்சைக்கு அணியின் கேப்டன் சுப்மன்கில் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம். எது சிறந்த முடிவாக இருக்குமோ அதை எடுக்க முயற்சிக்கிறேன். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கவுரவம். நான் மெதுவாக இந்தக் கவுரவத்திற்குப் பழகி வருகிறேன்.

    நாங்கள் முதல் இன்னிங்சில் சுமார் 300 ரன்கள் (270 ரன்கள்) முன்னிலையில் இருந்தோம். அப்போது நாங்கள் யோசித்தோம். ஒருவேளை நாங்கள் மீண்டும் பேட்டிங் செய்து, ஒரு 500 ரன்கள் எடுத்தாலும், போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 6 அல்லது 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்தால், அது எங்களுக்கு ஒரு கடினமான நாளாக அமையக்கூடும். அதனால், அவர்களுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தோம். அதுதான் அந்த முடிவின் பின்னணியில் இருந்த சிந்தனை.

    நான் பேட்டிங் செய்யக் களத்திற்குச் செல்லும்போது, நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சிந்திக்கிறேன். மூன்று, நான்கு வயதிலிருந்தே நான் பேட்டிங் செய்து வருகிறேன். அதனால், களத்திற்குள் சென்றால், ஒரு பேட்ஸ்மேனாக முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன்.

    என்று கில் கூறினார்.

    • 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ரோஸ்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 518 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது.

    இந்தியா 'பாலோ-ஆன்' வழங்கியதால் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் (87 ரன்), ஷாய் ஹோப் (66 ரன்) களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த கேம்ப்பெல் சிறிது நேரத்தில் தனது 'கன்னி' சதத்தை நிறைவு செய்தார். ஜடேஜாவின் பந்தில் மெகா சிக்சரோடு மூன்று இலக்கத்தை தொட்டார். 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை பெற்றார்.

    அணியின் ஸ்கோர் 212 ஆக உயர்ந்த போது, கேம்ப்பெல் (115 ரன், 199 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஜடேஜாவின் சுழலில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

    4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன், கேப்டன் ரோஸ்டன் சேஸ் இணைந்தார். இருவரும் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். அபாரமாக ஆடிய ஷாய் ஹோப் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 3-வது சதத்தை எட்டினார். டெஸ்டில் 8 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ஆனால் செஞ்சுரிக்கு பிறகு நிலைக்கவில்லை. முகமது சிராஜ் வீசிய பந்தை ஷாய் ஹோப் (103 ரன், 214 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்த போது பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. கேப்டன் ரோஸ்டன் சேஸ் தனது பங்குக்கு 40 ரன்கள் (72 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச் 12 ரன்னில் வெளியேற்றப்பட்டார். ஒரு கட்டத்தில் அந்த அணி 311 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 10-வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்சும், ஜெய்டன் சீல்சும் கைகோர்த்து இந்திய பவுலர்களுக்கு 'தண்ணி' காட்டினர். 22 ஓவர்கள் சமாளித்த இவர்கள் தங்களது முன்னிலை ஸ்கோரை 100-க்கு மேல் தாண்ட வைத்து அசத்தினர். தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ஒரு வழியாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிரித்தார். அவர் வீசிய பந்தை தூக்கியடித்து சீல்ஸ் (32 ரன், 67 பந்து) கேட்ச் ஆனார்.

    முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 118.5 ஓவர்களில் 390 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு இவர்கள் 79 ரன்கள் திரட்டினர். கிரீவ்ஸ் 50 ரன்களுடன் (85 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியாவுக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் (8 ரன்) வாரிகனின் சுழலில் சிக்கினார்.

    இதன் பின்னர் லோகேஷ் ராகுலும் (25 ரன், நாட் அவுட்), சாய்சுதர்சனும் (30 ரன், நாட் அவுட்) மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 63 ரன் எடுத்தது.

    இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சாய் சுதர்சன் 39 ரன் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் சுப்மன் கில் 13 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 35.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

    2 -வது டெஸ்டின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும் இந்த தொடரின் தொடர் நாயகனாக ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
    • சிராஜ் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டும் 2-வது டெஸ்டில் 3 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நாளையுடன் முடிகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய 4-வது ஆட்ட நேர முடிவில் இந்தியா 63 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 58 ரன்கள் தேவையாக உள்ளது. இந்தியா வெற்றி பெறவே அதிக அளவில் வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் சிராஜ் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டும் 2-வது டெஸ்டில் 3 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம் இந்த ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரானார். இவருக்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த முசரபானி 36 விக்கெட்டுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    அதனை தொடர்ந்து ஸ்டார்க் (29), நாதன் லயன் (24), ஜோமல் வாரிகன் (23) என அதற்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து சாய் ஹோப்புடன் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் சதம் அடித்து அசத்தினர்.

    அவரும் சதம் அடித்த சிறிது நேரத்தில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வந்த கேப்டன் சேஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் உடன் ஜெய்டன் சீல்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

    இதில் க்ரீவ்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் பும்ரா 3விக்கெட்டும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்கள் குவித்ததன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதலில் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடினர். இதனால் 7 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    18 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராகுல் 25 ரன்களுடனும் சாய் சுதர்சன் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இன்னும் இந்தியா வெற்றி பெற 58 ரன்கள் தேவை. நாளை கடைசி நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 390 ரன்கள் எடுத்தது.
    • சாய் ஹோப் மற்றும் ஜான் ஜாம்பெல் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து சாய் ஹோப்புடன் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் சதம் அடித்து அசத்தினர்.

    அவரும் சதம் அடித்த சிறிது நேரத்தில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வந்த கேப்டன் சேஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் உடன் ஜெய்டன் சீல்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

    இதில் க்ரீவ்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்கள் குவித்ததன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    • ஜான் கேம்பல் 115 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
    • முதல் சதம் அடிக்க அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் கேம்பல் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார்.

    இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 19 ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    கடைசியாக 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் டேரன் கங்கா இந்தியாவிற்கு எதிராக சதமடித்திருந்தார்.

    மேலும் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்ய அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிரெவோர் கொடாட் உள்ளார். இவர் முதல் சதத்தை பதிவு செய்ய 58 இன்னிங்ஸ்கள் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது.
    • ஜெய்ஸ்வால் 175 குவித்து அவுட்டானார்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.

    இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிகே அத்னாஸ் 41 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாலோ ஆன் ஆனதால் 2 ஆவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் பேட்டிங் செய்யவுள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அதனேஸ் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ஜான் கேம்பல் மற்றும் சந்தர்பால் களமிறங்கினார். இவர்கள் இருவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர்.

    இதனை தொடர்ந்து 7-வது ஓவரில் சுழற்பந்து வீச்சை களமிறக்கினார் சுப்மன் கில். அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய கேம்பல் 2-வது பந்தில் சாய் சுதர்சனின் அருமையான கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த அலிக் அதனேஸ் மற்றும் சந்தர்பால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி, 2-வது விக்கெட்டை 28-வது ஓவரில் வீழ்த்தியது.

    ஜடேஜா பந்து வீச்சில் சந்தர்பால் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அதனேஸ் 41 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஸ்டன் வந்த வேகத்தில் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாய் ஹோப்- டெவின் இம்லாக் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சுப்மன் கில் கேப்டனாக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • டாஸில் தோல்வியடைந்து விடுவார் என்று பும்ரா, ரன் அப்புக்கு புறப்பட்டார் என கம்பீர் சிரித்தப்படி கூறினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது.

    முன்னதாக சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 6 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் தான் முதல் முறையாக டாஸை வென்றுள்ளார்.

    சுப்மன் கில் டாஸ் வென்றதை பின்னாடி இருந்த பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஜடேஜா, அக்ஷர் படேல், பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் ஒருவழியா டாஸில் வெற்றி பெற்று விட்டார் என்பது போல சிரித்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வந்த கில்லுக்கு சக வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் பாராட்டினர். அப்போது கம்பீர் கில்லிடம் நீ எப்படியும் டாஸில் தோல்வியடைந்து விடுவாய் என பும்ரா பவுலிங் போடுவதற்கு ரன் அப்புக்கு ஏற்பாடு செய்ய கிளம்பினார் என சிரித்துக் கொண்டே கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    • ஜூரல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சுப்மன் கில் 129 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த நிதிஷ் குமார், கில்லுடன் ஜோடி சேர்ந்தார். நிதிஷ் குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவ்வபோது பவுண்டரியும் சிகருமாக பறக்க விட்டார். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கில் அரை சதம் அடித்து அசத்தினார்.

    அதிரடியாக விளையாடி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் 43 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஜூரல் களமிறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்திருந்தது. சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10-வது சதம் ஆகும். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜூரல் 44 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கில் சதம் விளாசினார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதத்தை பதிவு செய்தார் சுப்மன் கில்.

     புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள்.

    இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10 சதம் ஆகும்.

    இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கில் (10 சதம்) படைத்துள்ளார். அந்த பட்டியலில் ரோகித் 9 சதங்களுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 7 சதங்களுடன் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தில் உள்ளார்.

    மேலும் ஒரு காலண்டர் ஆண்டில் 5 சதங்கள் விளாசிய இந்திய கேப்டன்கள் வரிசையில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் சுப்மன் கில் 5 சதங்களுடன் 3 - வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 2017-ம் ஆண்டிலும் 2018-ம் ஆண்டிலும் 5 சதங்கள் விளாசி முதல் இரண்டு இடங்களில் உள்ளார். இவர் 2016 -ம் ஆண்டில் 4 சதங்கள் விளாசியிருந்தார்.

    சச்சின் டெண்டுல்கர் 1997-ம் ஆண்டு இந்திய கேப்டனாக 4 சதங்கள் அடித்திருந்தார். அவர் சாதனையை கில் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார்.

    அடுத்து வந்த நிதிஷ் குமார், கில்லுடன் ஜோடி சேர்ந்தார். நிதிஷ் குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவ்வபோது பவுண்டரியும் சிகருமாக பறக்க விட்டார். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கில் அரை சதம் அடித்து அசத்தினார்.

    அதிரடியாக விளையாடி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் 43 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஜூரல் களமிறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    ×