என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாலோ ஆன் குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த சுப்மன் கில்
- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம்.
- இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கவுரவம்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இந்த சர்ச்சைக்கு அணியின் கேப்டன் சுப்மன்கில் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம். எது சிறந்த முடிவாக இருக்குமோ அதை எடுக்க முயற்சிக்கிறேன். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கவுரவம். நான் மெதுவாக இந்தக் கவுரவத்திற்குப் பழகி வருகிறேன்.
நாங்கள் முதல் இன்னிங்சில் சுமார் 300 ரன்கள் (270 ரன்கள்) முன்னிலையில் இருந்தோம். அப்போது நாங்கள் யோசித்தோம். ஒருவேளை நாங்கள் மீண்டும் பேட்டிங் செய்து, ஒரு 500 ரன்கள் எடுத்தாலும், போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 6 அல்லது 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்தால், அது எங்களுக்கு ஒரு கடினமான நாளாக அமையக்கூடும். அதனால், அவர்களுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தோம். அதுதான் அந்த முடிவின் பின்னணியில் இருந்த சிந்தனை.
நான் பேட்டிங் செய்யக் களத்திற்குச் செல்லும்போது, நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சிந்திக்கிறேன். மூன்று, நான்கு வயதிலிருந்தே நான் பேட்டிங் செய்து வருகிறேன். அதனால், களத்திற்குள் சென்றால், ஒரு பேட்ஸ்மேனாக முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன்.
என்று கில் கூறினார்.






