என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: 248 ரன்களுக்கு சுருண்டு பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ்
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது.
- ஜெய்ஸ்வால் 175 குவித்து அவுட்டானார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிகே அத்னாஸ் 41 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாலோ ஆன் ஆனதால் 2 ஆவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் பேட்டிங் செய்யவுள்ளது.






