என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jadeja"
- சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.
- ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் ஐந்தாவது சத பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்தனர். ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் ஐந்தாவது சத பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
மேலும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு டோனி- ஜடேஜா 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த சாதனையை சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் முறியடித்துள்ளது.
- சிறந்த பீல்டருக்கான விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.
- அந்த விருதை கேஎல் ராகுல் ஜடேஜாவுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வங்களாதேசம் அணி பேட்டிங் செய்த போது பும்ரா வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ரஹீம் எதிர்கொண்டார். அவர் கொடுத்த அற்புதமான கேட்ச்சை ரவீந்திர ஜடேஜா தாவி பிடித்து அவுட்டாகினார். அப்போது இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியின் நடுவில் கொடுக்கப்படும் சிறந்த ஃபீல்டருக்கான விருதை எனக்கு கொடுங்கள் என்று ரவீந்திர ஜடேஜா சைகை செய்த போது ஃபீல்டிங் பயிற்சிசாளர் கைதட்டி பாராட்டினார்.
மறுபுறம் ஏற்கனவே விக்கெட் கீப்பர் ராகுலும் அபாரமான கேட்ச் பிடித்ததால் இந்த போட்டியின் முடிவில் யாருக்கு அந்த விருது கொடுப்பது என்ற குழப்பம் பயிற்சியாளருக்கு ஏற்படும் அளவுக்கு இந்தியாவின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது.
இந்நிலையில் சிறந்த பீல்டருக்கான விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஓய்வு அறையில் உள்ள டிவியில் அந்த விருது யாருக்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் சிறந்த பீல்டர் விருது மைதானத்தில் உள்ள டிவியில் திரையிடப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாரத வீரர்கள் மற்றும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் டிராவிட் மற்றும் ரோகித் ரியாக்ஷன் வேற லெவலில் இருந்தது. அனைத்து வீரர்களும் பீல்டிங் பயிற்சியாளரை கட்டியணைத்து மகிழ்ந்தனர்.
Those reactions are priceless ?❤️
— Nithin (@Nithin_kumarrr) October 20, 2023
We are missing this environment in dressing room from a long time. This is TEAM❤️ @BCCI #Jadeja #ViratKohli #KLRahul #indiavsbangladesh pic.twitter.com/smOyvzWA6f
அந்த விருதை கேஎல் ராகுல் ஜடேஜாவுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.
- இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி அகமதாபாத் மைதானம் தயார் நிலையில் உள்ளது. நாளைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிற்பகல் 2 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான ஜடேஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வீட்டிற்கு வந்ததாக ஸ்டோரி வைத்துள்ளார். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- எனக்கு மிகவும் பிடித்தவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பாண்ட்யா பதிவிட்டுள்ளார்.
- நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது என ரெய்னா தெரிவித்துள்ளார்.
மும்பை:
டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்தவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2009-ம் ஆண்டு முதல் இன்றுவரை மற்றும் என்றென்றும் இவரிடம் எனது பயணம். மஹி பாய் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் மஞ்சள் நிறத்தில் சந்திப்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் சென்னை அணியின் முன்னாள் வீரரும், டோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ரெய்னா டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரிய அண்ணா டோனி. பிட்ச்சை பகிர்வது தொடங்கி, கனவுகளை பகிர்வது வரை நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது. உங்கள் பல, மற்றும் ஒரு நண்பராகவும், தலைவனாகவும் நீங்கள் கொடுத்த பலம் தான் என்னுடைய கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது.

மகிழ்ச்சி, வெற்றி, நல்ல உடல்நலம் கொண்டதாக இந்த ஆண்டும் உங்களுக்கு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன். தொடர்ந்து வழிநடத்துக்கள், உங்களது மேஜிக்கை பரப்பிக்கொண்டே இருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன்.
- ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று மும்பையின் சாதனையை சமன் செய்தது.
சி.எஸ்.கே. கோப்பையை வெல்ல ஜடேஜா முக்கிய பங்கு வகித்தார். அவர் கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்தார்.
15-வது ஐ.பி.எல். சீச னில் ஜடேஜா கேப்டனாக இருக்க டோனி தானாகவே வழிவிட்டார். நடுவில் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். இதுதொடர்பாக ஜடேஜாவுக்கும், சி.எஸ்.கே. நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த சீசனில் டோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் டோனிக்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோஷமிட்டதால் அவர் வருத்தம் அடைந்தார். டுவிட்டர் பக்கத்தில் இதை அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்து உள்ளார். டோனி மீது ஜடேஜா எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜடேஜாவை பொறுத்தவரை அவர் மிக சிறப்பாக பந்துவீசினார். பேட்டிங்கில் முன்னனி பேட்ஸ்மேன்கள் விளையாடி முடிக்கும்போது அவருக்கு குறைந்த பந்துகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருந்தது.
ஜடேஜாவுக்கு அடுத்து டோனி வருவார் என்று அவருக்கு தெரியும். ரசிகர்கள் டோனி மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகை வைத்து இருக்கலாம். இது ஜடேஜாவை புண்படுத்தி இருக்கலாம். இதுகுறித்து அவர் டுவிட் செய்து இருந்தாலும் கூட எங்களிடம் எதையும் புகாராக தெரிவிக்கவில்லை.
டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன். வழக்கமான விஷயங்கள் தான் பேசினோம். தனிப்பட்ட முறையில் அங்கு எதுவும் பேசவில்லை.
ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். ஐ.பி.எல். கோப்பை வெற்றியை டோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறியதில் இருந்தே நாம் இதை புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆஸ்திரேலியா போட்டிகளில் விளையாடாமல் ப்ரெஷ்யாக வருகிறது
- இந்திய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி சோர்வாக வந்துள்ளனர்.
இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் விவரிக்கிறார்.
இரு அணிகள் குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஓவல் சூழ்நிலை இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் பொருத்தமானதாக இருக்கும். இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்றதைவிட அதிக அளவில் எதிர் அணிகளை வீழ்த்தியுள்ளன. இதனால் இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்திற்கும் தகுதியானவை.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதேவேளையில் இந்திய வீரர்கள் உச்சக்கட்ட போட்டித்தன்மை வாய்ந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளனர்.
ஒரு அணி ப்ரெஷ் ஆக வருகிறது. மற்றொரு அணி சோர்வாக உள்ளது. இதுபோன்ற பெரும்பாலான காரணிகள் போட்டியை பாதிக்கலாம்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சிறந்த போட்டிகளில் ஒன்று. இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 32 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு பேரையும் தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா 6-வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். அவரது பேட்டிங் திறனை மேம்படுத்தியுள்ளதால், அவரை ஒரு பேட்ஸ்மேனாக கருதலாம். தேவைப்பட்டால் சில ஓவர்கள் வீச வைக்கலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜடேஜாவை அணியில் வைத்துக் கொண்டால், போட்டி நான்காவது அல்லது ஐந்தாவது நாள் செல்லும் நிலை ஏற்பட்டு, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலை ஏற்பட்டால், சிறந்த 2-வது சுழற்பந்து வீச்சு வாய்ப்பாக இருக்கும்.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
- ஜடேஜாவுக்கு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று அஸ்வின் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.
- சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் ஜடேஜா மைதானத்தில் இருந்த போது DJ அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார்.
2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி (மாலை 3மணி) தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. அவர் லண்டனில் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஒரு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். ஜடேஜாவுக்கு வானத்தைப் போல படத்தில் இடம் பெற்ற 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என்று 'நானும் அவரும் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் போது அவர் அந்த பாட்டை தான் போட்டு கேட்பார்' என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் ஜடேஜா மைதானத்தில் இருந்த போது DJ அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார்.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சென்னை ரசிகர்கள் அதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

- சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
- போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அகமதாபாத்:
16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.

சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது. போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் profile-யை மாற்றியுள்ளார். அதில் ஜடேஜாவை டோனி தூக்கியது போல உள்ள புகைப்படத்தை தனது profile-லில் வைத்துள்ளார். லீக் போட்டிகளில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என குரல் கொடுத்த ரசிகர்களை கையெடுத்து கும்பிட வைத்து விட்டார் ஜடேஜா என்றால் மிகையாகாது.
- வெற்றிக்கான பவுண்டரியை ஜடேஜா அடித்த போது வெளியே கேப்டன் டோனி கண்ணை மூடி அமைதியாக இருந்தார்.
- பின்னர் தான் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஜடேஜா மிகவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து ஐ.பி.எல். கோப்பையை 5-வது முறையாக பெற்றுக் கொடுத்தார்.
வெற்றிக்கான பவுண்டரியை ஜடேஜா அடித்த போது வெளியே கேப்டன் டோனி கண்ணை மூடி அமைதியாக இருந்தார். பின்னர் தான் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஜடேஜா அருகில் வந்த போது டோனி அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைத்தது.
கோப்பையை வாங்கும் தருணத்தில் ஜடேஜாவையும், அம்பதிராயுடுவையும் அழைத்து சென்று வாங்க வைத்து டோனி ரசித்தார். இந்த வீடியோ மற்றும் இரண்டு புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.