search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aswin"

    • சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது.
    • தமிழக வீரர் அஸ்வின் மட்டும் காவிக்குப் பதிலாக நீல தொப்பி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டிக்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உடைகள் காவி நிறத்தில் இருந்தன. தொப்பியும் காவி நிறத்தில் வழங்கப்பட்டு இருந்தது.

    ஆனால், தமிழக வீரர் அஸ்வின் மட்டும் காவிக்குப் பதிலாக நீல தொப்பி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    இது தமிழகத்தில் காவிக்கு இடமில்லை என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீட்சா 3.
    • இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பீட்சா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. தற்போது மங்காத்தா, மேகா, ஜீரோ, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த அஸ்வின் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த இயக்கியுள்ளார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இதில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் பீட்சா 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை.
    • இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என வல்லுனர்கள் கணித்த காரணத்தினால் 2 சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குமா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

    ஏனென்றால் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அஸ்வின் சிறந்த ஆப் ஸ்பின்னர், ஜடேஜா சிறந்த லெக் ஸ்பின்னர். அத்துடன் இரண்டு பேரும் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள். இதனால் யாரை எடுப்பார்கள் என்ற விவாதம் நடந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில், டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை. இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    அஸ்வினை அணியில் சேர்க்காதது மிக கஷ்டமான ஒன்றுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆடும் சூழ்நிலை மற்றும் அணியின் வெற்றி காம்பினேஷன் ஆகியவற்றிற்காக அவரை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என ரோகித் சர்மா தெரிவித்தார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. இந்தியா 4 வேக பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கி உள்ளது.

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டி மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிந்து விட்டால் அஸ்வினை சேர்க்காதது குறித்து எந்த விவாதம் எழும்ப வாய்ப்பில்லை.

    ஒரு வேளை போட்டி ஐந்தாவது நாள் வரை நீடித்தால் சுழற் பந்துவீச்சு தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் ஆஸ்திரேலியாவில் ஐந்து இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அஸ்வின் எப்போதுமே சவாலாக இருப்பார். ஆகையால் இந்தப் போட்டி முடிந்தபின் ஒருவேளை இந்தியாவுக்கு சாதகமாக போட்டி அமையாவிட்டால் அஸ்வினை அணியில் எடுக்காதது குறித்து மிகப்பெரிய விவாதம் எழும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ×