search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திர ஜடேஜா"

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இந்தியா- இங்கிலாந்து போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 3 சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 6000-க்கு கூடுதலான ரன்களும் பந்து வீச்சில் 600 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 6-வது வீரராக உள்ளார்.

    முதல் 5 வீரர்களில் கபில்தேவ் (இந்தியா), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), ஷான் பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா), டேனியல் வெக்டோரி (நியூசிலாந்து), ஷகீப் அல்ஹசன் (வங்கதேசம்), ஜடேஜா (இந்தியா) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

    மேலும் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலிலும் முதல் இந்தியராக ஜடேஜா இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் சானத் ஜெயசூர்யா 323 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    2-வது இடம் முதல் 5-வது இடங்கள் முறையே ஷகீப் அல்ஹசன் (317), டேனியல் விக்டோரி (305), ஜடேஜா (222), அப்துர் ரசாக் (207) ஆகியோர் உள்ளனர்.

    இங்கிலாந்து - இந்தியா இடையேயான போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்

    ஜடேஜா (42 விக்கெட்டுகள்)

    ஜேம்ஸ் ஆண்டர்சன் (40 விக்கெட்டுகள்)

    ஆண்ட்ரூ பிளின்டாப் (37 விக்கெட்டுகள்)

    ஹர்பஜன் சிங் (36 விக்கெட்டுகள்)

    ஸ்ரீநாத், அஸ்வின் (35 விக்கெட்டுகள்)

    • ஜடேஜா, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தினார்.
    • ஷர்துல் தாகூர் முதல் இன்னிங்சில் அரை சதமும் 2-வது இன்னிங்சில் சதமும் விளாசியுள்ளார்.

    ரஞ்சிக் கோப்பை 2024 - 25 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் சௌராஷ்ட்ரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி நேற்று தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி முதல் இன்னிங்சில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் படோனி 60, யாஷ் துள் 44 ரன்கள் எடுத்தார்கள். சௌராஷ்ட்ரா அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

    அதற்கடுத்ததாக களம் இறங்கிய சௌராஷ்ட்ரா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 271 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 38 (36) ரன்கள் எடுத்தார்.

    அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியை ரவீந்திர ஜடேஜா தனியாளாக சுருட்டி வீசினார். அவர் மொத்தம் 12.2 ஓவரில் 38 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடைய அற்புதமான பவுலிங் காரணமாக டெல்லி அணி 94 ரன்களில் சுருண்டது.

    இதனால் 12 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை எளிதாக வென்ற சௌராஷ்ட்ரா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மொத்தம் 12 விக்கெட்டுகள், 38 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் மும்பை- ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதி வருகிறது. முதல் இன்னிங்சில் மும்பை அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் அய்யர், துபே, ரகானே ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அந்த அணியில் அதிக பட்சமாக ஷர்துல் தாகூர் அரை சதம் விளாசினார்.

    இதனால் மும்பை அணி 120 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 206 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை மீண்டும் தடுமாறியது. 54 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த மும்பை 101 ரன்னில் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஷர்துல் தாகூர் - தனுஷ் கோட்டியன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் சதம் விளாசியும் தனுஷ் கோட்டியன் அரை சதம் விளாசியும் அசத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 274/7 என்ற நிலையில் உள்ளது.

    ரஞ்சிக் கோப்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், துபே உள்ளிட்ட நட்சத்திர இந்திய வீரர்கள் சுமாராக விளையாடி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

    • சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • அதில் ரிஷப் பண்ட் விக்கெட்டும் அடங்கும்.

    கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.

    எட்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. குறிப்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.

    இதனையடுத்து ரஞ்சி போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். மும்பை அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா 3 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல் பஞ்சாப் மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மேலும் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ரஞ்சியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளனர். இதனால் அவர்கள் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பி வரும் நிலையில் சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அதில் ரிஷப் பண்ட் விக்கெட்டும் அடங்கும். மேலும் பேட்டிங்கிலும் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 36 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும்.

    முன்னணி பேட்ஸ்மேன்கள் 10 ரன்கள் கூட எடுக்க முடியாத நிலையில் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடமில்லை.
    • இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்நிலையில் இத்தொடருக்கான தன்னுடைய இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

    ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி:-

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி, சுப்மன் கில், யுஸ்வேந்திர சாஹல்.

    • டி20 உலகக் கோப்பையை வென்றதும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

    இந்திய அணியின் நட்சத்திர இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது. இதில் இந்தியா 1-3 எனத் தொடரை இழந்தது. இதற்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக தோற்றது.

    இதனால் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மீது விமர்சனம் எழுந்தது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா தொடரில் கடைசி கட்ட போட்டிகளில் விளையாடினார். பேட்டிங்கில் ஓரளவு விளையாடினார்.

    இந்த சீசனில் இந்தியா ஏறக்குறைய முக்கியமான தொடர்களை முடித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின்னர் சாம்பியன்ஸ் டிராபி மட்டும்தான் மீதமுள்ளது. இங்கிலாந்து தொடர் வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடக்கிறது.

    இதனால் அடுத்த டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பைக்கான அணியை எவ்வாறு தேர்வு செய்வது என்பதில் பிசிசிஐ கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

    எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இந்திய ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜடேஜாவை வைக்க வேண்டுமா? என தேர்வுக்குழு தலைவர் அகர்கருடன் கவுதம் கம்பிர் பேசுவார் என செய்திகள் வெளியாகி வருகிறது.

    இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெறுவாரா? என்பது தெரியவில்லை. அப்படி இடம் பெறவில்லை என்றால் அவருடைய ஒருநாள் கிரிக்கெட் முடிவுக்கு வருவதாக எடுத்துக் கொள்ளலாம்.

    சாமபியன்ஸ் டிராபியில் இடம் பெற்றால் அதற்கு பின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் ஓரங்கட்டப்படலாம் எனத் தெரிகிறது.

    அல்லது சப்போர்ட்டிற்காக வைத்துக் கொண்டு இளம் வீரர்களை வளர்த்து அதன்பின் அணியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தெரிகிறது. இதை அறிந்ததனால்தான் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அணிந்திருந்து ஜெர்சி நம்பர் கொண்ட போட்டோவை பதிவு செய்துள்ளார்.

    இதன்மூலம் இனிமேல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவேன். தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வருகிறது என்பத சூசகமாக தெரிவிக்கிறார் என நம்பப்படுகிறது.

    அவரது ரசிகர்கள் "அவர் ஓய்வு பெறுகிறாரா?" எனவும், "நீங்கள் இங்கிலாந்து தொடரில் தேவை" எனவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். "இன்னும் 8 வருடங்கள் வருடங்கள் விளையாடுவேன் என்பதை கூறுகிறார்" என ஒரு ரசிகர் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.

    ஜடேஜா 80 டெஸ்ட் போட்டிகளில் 323 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 24.14 ஆகும். 15 முறை 5 விகெ்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 3370 ரன்கள் அடித்துள்ளார். இதில் நான்கு சதம், 22 அரைசதம் அடங்கும்.

    197 ஒருநாள் போட்டிகளில் 220 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 36.07 ஆகும். 13 அரைசதங்களுடன் 2756 ரன்கள் அடித்துள்ளார்.

    • இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
    • நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    ஆஸ்திரேலியா தரப்பில் சாம் கான்ஸ்டாஸ் 60 ரன், கவாஜா 57 ரன், லபுசேன் 70 ரன், அலெக்ஸ் கேரி 31 ரன், மிட்செல் மார்ஷ் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் கம்மின்ஸ் 49 ரன், ஸ்டார்க் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர். நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆட உள்ளது.

    • அமெரிக்காவில் காசிக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருது வழங்கப்பட்டது.
    • அவருக்கு சிஎஸ்கே வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் செயலாளர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி கல்லிடைக்குறிச்சி எஸ் விஸ்வநாதன் என்ற காசியை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள ஹார்ட்போர்ட் நகரில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருது வழங்கப்பட்டது.

    கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த காசிக்கு, பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்த தகவலை, தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அது குறித்த வீடியோ தொகுப்பை சிஎஸ்கே அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் சிஎஸ்கே வீரர்கள் ஜடேஜா தமிழில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    மேலும் ருதுராஜ், அஸ்வின், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் ஆகியோர் இந்த வீடியோ மூலம் காசியை பாராட்டி உள்ளனர்.

    இந்த வீடியோ முடிவில் ஜடேஜா, காசி சார் சீக்கிரம் சென்னையில் பார்ப்போம் என தமிழில் கூறியது சிஎஸ்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜடேஜா பேசும் தமிழ் அருமையாக உள்ளது எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • அஸ்வின் ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
    • அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.

    பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

    அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது பேட்டி அளித்த ஜடேஜா முழுவதுமாக ஹிந்தியில் பேசியுள்ளார். இதனையடுத்து ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து உள்ளனர்.

    இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மட்டுமே. இதனால் ஜடேஜா இந்தியில் பேசினார்.

    ஆஸ்திரேலிய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை கிளப்பவே எப்போதும் முயற்சி செய்கின்றன என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய செய்தியாளர் சுபயன் சக்ரவர்த்தி கூறினார்.

    அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

    • அஸ்வின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் எனக்கு தெரியும்.
    • அவர் ஓய்வை அறிவிக்க போகிறேன் என்பது குறித்து சின்ன சிக்னல் கூட எனக்கு கொடுக்கவில்லை.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அஸ்வினின் ஓய்வு குறித்து ரவீந்திர ஜடேஜா பேசுகையில், கடைசி நிமிடத்தில் தான் அஸ்வின் ஓய்வு பெறும் முடிவு தெரிய வந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், அஸ்வின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் எனக்கு தெரியும். அந்த செய்தியே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் அன்றைய நாள் முழுவதும் நானும், அவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

    அப்போது அவர் ஓய்வை அறிவிக்க போகிறேன் என்பது குறித்து சின்ன சிக்னல் கூட எனக்கு கொடுக்கவில்லை. ஆனால் அஸ்வினின் சிந்தனை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

    கிரிக்கெட் களத்தில் விளையாடும் போது அஸ்வின் தான் என்னுடைய ஆலோசகர் போல் இருப்பார். கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் களத்தில் இருவரும் மாற்றி மாற்றி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

    ஆட்டத்தின் சூழல் என்ன, பேட்ஸ்மேன் என்ன செய்ய முயற்சிக்கிறார், அவருக்கு எதிராக என்ன திட்டம் அமைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறோம். இவை அனைத்தையும் நிச்சயம் மிஸ் செய்வேன். ஆனால் அஸ்வினின் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டரை களமிறக்க வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.

    கிரிக்கெட்டை பொறுத்தவரை யாரின் இடத்தையும் நிரப்ப முடியாது என்று கிடையாது. யார் சென்றாலும், அந்த இடத்திற்கு மற்றொருவர் கொண்டு வரப்படுவார். தற்போது அஸ்வின் ஓய்வு பெற்று சென்றுள்ளதால், இளம் வீரர்களுக்கு அவரின் இடத்தில் களமிறங்கி தங்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இருவரும் இணைந்து இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 587 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 12 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியதற்கு இவர்கள் இருவரும் தான் முதன்மை காரணமாக அமைந்துள்ளனர்.

    • இந்திய அணியில் ஜடேஜா, ஆகாஷ் தீப் சேர்ப்பு.
    • ஆகாஷ் தீப் பந்தை சிறப்பான வகையில் ஸ்விங் செய்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆடுகளத்தில் புற்கள் இருந்ததாலும், மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததாலும் பந்து வீச்சை தேர்வு செய்ததாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

    இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலியாவின் கவாஜா மற்றும் மெக்ஸ்வீட்னி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். 5.3 ஓவர்கள் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.

    சிறிது நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முகமது சிராஜ் 3 ஓவர்கள் வீசிய நிலையில் நிறுத்தப்பட்டார். அதன்பின் ஆகாஷ் தீப் அழைக்கப்பட்டார். இவர் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்து அசத்தினார். என்றாலும் விக்கெட் எடுக்க முடியவில்லை.

    ஆஸ்திரேலியா 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீட்னி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • இந்தியா மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது.
    • அஸ்வின் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடம் பெறவில்லை.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஹர்சித் ராணா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். அத்துடன் வேகப்பந்து வீச்சு பேட்டிங் ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்தியா களம் இறங்கும் என்பது உறுதியானது.

    இதனால் சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் இடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலியாவில் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலேக்ஸ் கேரி உள்ளிட்ட பல இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளதால் அஸ்வின் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இருவரையும் பின்னுக்குத் தள்ளி வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசினார்.

    கம்மின்ஸ், ஹேசில்வுட்டிற்கு எதிராக இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள். இருவரும் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் என்றாலும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இவர்களின் சராசரி சற்று குறைவுதான்.

    வாஷிங்டன் சுந்தர் இடது கை பேட்ஸ்மேன். இதனால் அஸ்வினுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கலாம்.

    • நிச்சயம் அணியில் பெரிய மாற்றம் இருக்கும்.
    • இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    வங்கதேசஅணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வொயிட்-வாஷ் செய்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்துள்ளளது. மேலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரில் வொயிட்-வாஷ் ஆவதும் இதுவே முதல் முறை. இதனால் அணியில் உள்ள சில சீனியர் வீரர்களுக்கு பிசிசிஐ செக் வைத்துள்ளது.

    நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் ரன்கள் அடிக்காதது பெரும் ஏமாற்றத்தை தந்தது.

    தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால், சீனியர் வீரர்கள் அணியிலிருந்து படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    "நிச்சயம் அணியில் பெரிய மாற்றம் இருக்கும். பார்டர் கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் அதில் மாற்றம் செய்ய முடியாது. ஆஸ்திரேலியா தொடர் சில வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கலாம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றது.

    உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றால் ரோகித், விராட், அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு சூப்பர் சீனியர்களும் இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம். பார்டர் கவாஸ்கர் தொடரின் முடிவு தான் அவர்களின் எதிர்காலம். ஒருவேளை மும்பை டெஸ்ட் தான் அந்த நான்கு பேரின் கடைசி சொந்த டெஸ்டில் ஒன்றாக இருக்கலாம்" என்று மேலும் கூறினார்.

    சீனியர் வீரர்களால் வாய்ப்புக்காக காத்திருக்கும் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அஷ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் தனது இடத்தை டெஸ்ட் அணியில் தக்க வைத்துள்ளார். ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல் ரெடியாக உள்ளார். ரோஹித் சர்மாவிற்கு பதில் அபிமன்யு ஈஸ்வரனும், விராட் கோலிக்கு பதில் ருதுராஜ் கைகுவாட்வும் உள்ளனர்.

    ரோகித், கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அஸ்வின் தற்சமயம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 

    ×