என் மலர்
கிரிக்கெட் (Cricket)

VIDEO: இங்கிலாந்து பவுலர்களை கதறவிட்ட இந்தியா - ஜடேஜாவிடம் கைகுலுக்க மறுத்த பென் ஸ்டோக்ஸ்
- போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார்.
- ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் அடித்து கொண்டிருந்த நிலையில்,போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை இந்திய கேப்டன் கில் மறுத்தார்.
இதையடுத்து தொடர்ந்து ஆடிய ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து இந்திய அணி போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ள ஒப்பு கொண்டது.
இந்நிலையில், டிரா செய்ய கேட்டது குறித்து பேசிய கேப்டன் ஸ்டோக்ஸ், "ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அற்புதமாக விளையாடியதால், இந்திய அணி ஆட்டத்திற்குள் வந்துவிட்டது. டிரா மட்டுமே ஒரே முடிவு எனும் நிலையை கொண்டு வந்துவிட்டனர். ஒரு கட்டத்தில் நாங்களும் சோர்வடைந்து விட்டோம். எனவே கடைசி அரைமணி நேரத்தில் பவுலர்களை பந்துவீச வைத்து நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், போட்டி முடிந்ததும் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். இதனால் நடுவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இறுதியாக ஜடேஜாவுடன் வேறுவழியின்றி ஸ்டோக்ஸ் கைகுலுக்கினார். ஆனால் அப்போது அவர் ஜடேஜாவின் முகத்தை கூட பார்க்கவில்லை.






