என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென் ஸ்டோக்ஸ்"

    • காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.
    • அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இத்தொடரில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறினர். குறிப்பாக 4-வது போட்டியில் பாதத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் நடக்க முடியாமல் தடுமாறினார். இருப்பினும் அவர் நாட்டுக்காக மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 53 ரன்கள் குவித்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

    அதே போல இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் கடைசி நாளில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஒற்றைக் கையுடன் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் பாராட்ட வைத்தது.

    முன்னதாக இப்படி திடீரென காயமடைபவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க முடியாது என்பது ஐசிசி விதிமுறையாகும். அதனால் காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைப்பதற்கு விதிமுறைகளில் தேவையான மாற்றம் செய்ய வேண்டும் என்று 4-வது போட்டியின் முடிவில் ஐசிசிக்கு கௌதம் கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.

    ஆனால் அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸை கர்மா பழி தீர்த்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்ய முடியும். அவருடைய மிகப்பெரிய ரசிகரான நான் அவருடைய அணுகுமுறையை ரசிக்கிறேன். ஆனால் நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும்.

    கிறிஸ் ஓக்ஸ் இங்கிலாந்துக்கு உதவி செய்வதற்காக தனது ஒற்றைக்கையை சட்டைக்குள் வைத்துக்கொண்டு விளையாட வந்தார். கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய அவருடைய அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். இருப்பினும் அது போன்ற காயத்திற்கு மாற்று வீரர் தேவை என்று மைக்கேல் வாகனும் தெரிவித்திருந்தார். என்னைப் பொறுத்த வரை மற்ற அணிகளின் கருத்தையும் பாருங்கள் என்று சொல்வேன்.

    ரிஷப் பண்ட் போன்றவர் காயத்தால் வெளியேறும் போது என்னவாகும் என்பதை ஸ்டோக்ஸ் கருத வேண்டும். நீங்கள் உங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள். அதற்காக மற்றவர்கள் கருத்தை நகைச்சுவை என்று சொல்வது மரியாதையற்றது. பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில் உங்களை கர்மா உடனடியாக அடித்துள்ளது.

    என்று அஸ்வின் கூறியுள்ளார்.

    • போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.
    • இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்களின் முடிவில் (2-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணிக்கு 35 ரன்களும் இந்தியா 4 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசியிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது :

    உண்மையிலேயே இந்த கடைசி போட்டியில் என்னால் விளையாட முடியாமல் போனது சற்று வருத்தம் தான். இந்த போட்டியும் 5-ம் நாள் வரை வந்து மிகச் சிறப்பாக முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே களத்தில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த ஒட்டுமொத்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக அமைந்தது.

    போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். ஏனெனில் அணியில் இடம்பிடித்திருந்த ஒவ்வொருவருமே இந்த தொடரில் தங்களது முழு பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

    அதிலும் குறிப்பாக போட்டியின் சூழல் கடினமாக இருந்த போதெல்லாம் தனித்தனியே வீரர்கள் அணியின் நலனுக்காக நின்று இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியாக இணைந்து நாங்கள் இந்த தொடரில் செயல்பட்ட விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமையாக உள்ளது.

    என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    • 4ஆவது டெஸ்டுக்கும் 5ஆவது டெஸ்டுக்கும் இடையில் 3 நாட்கள் இடைவெளி மட்டுமே உள்ளது.
    • ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5ஆவது மற்றும் கடைசி போட்டி நாளை தொடங்கியது.

    5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். மேலும் ஆர்ச்சர் இடம்பெற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாசன், கார்ஸ் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொடரில் முதல் டெஸ்டுக்கும் 2ஆவது டெஸ்டுக்கும் இடையில் ஜூன் 25 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை 7 நாட்கள் ஓய்வு இருந்தது. ஆனால் 2ஆவது டெஸ்டுக்கும் 3ஆவது டெஸ்டுக்கும் இடையில் ஜூலை 7 முதல் 9 வரை 3 நாட்கள் மட்டுமே ஓய்வு இருந்தது.

    அதேவேளையில் 3ஆவது டெஸ்டுக்கும் 4ஆவது டெஸ்டுக்கும் இடையில் 8 நாட்கள் ஓய்வு இருந்தது. 4ஆவது டெஸ்ட் போட்டிக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கும் இடையில் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.

    இந்த நிலையில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் 3 நாட்கள் இடைவெளி ரொம்ப குறைவு. வீரர்கள் காயத்தில் இருந்து மீள்வதற்கான காலஅவகாசம் போதாது என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் இடையிலான இடைவெளி சற்று அதிகமாக இருக்க வேண்டும். இரண்டு போட்டிக்கு 17 நாட்களும், 2 போட்டிகளுக்கு தலா 3 நாட்களும் இடைவெளி உள்ளது. மொத்தமாக உள்ள 23 நாட்களை குறைந்த பட்சமா ஐந்து நாட்களாக நிலையானதாக இருக்க வேண்டும்.

    இது இரண்டு அணிகளுக்கும் மிகவும் கடினமானது. பந்து வீச்சாளர்கள் ஏராளமான ஓவர்கள் வீச வேண்டிய நிலை உள்ளது. அதிக நேரம் களத்தில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
    • இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

    இந்நிலையில் 5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை ஒல்லி போப் வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சரும் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமானது.

    5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (இ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (வாரம்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.

    • இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.
    • போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா?

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி போட்டியை டிரா செய்யும் நிலைக்கு கொண்டு சென்றது. அப்போது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்து வந்தனர். ரவீந்திர ஜடேஜா 90 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடனும் இருந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை டிரா செய்து கொள்ளலாம் என அழைத்தார்.

    அப்போது 14 ஓவர்கள் மீதமிருந்தன. அந்தச் சூழ்நிலையில் எந்த ஒரு அணியாலும் வெற்றி பெற முடியாது என்பதால், ஸ்டோக்ஸ் அந்த முடிவை எடுத்தார். அதே சமயம், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போட்டியை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், அதை சதமாக மாற்ற நினைத்தனர். அதனால், பென் ஸ்டோக்ஸ் விடுத்த அழைப்பிற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

    இதன் காரணமாக, போட்டி முடிந்தவுடன் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுக்குக் கை குலுக்க மறுத்தார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஒருவர் 90 ரன்கள் எடுத்திருக்கும்போதும், மற்றொருவர் 85 ரன்கள் எடுத்திருக்கும்போதும் போட்டியை முடிக்கலாமா? அவர்கள் சதம் அடிக்கத் தகுதி இல்லாதவர்களா? என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து வீரர்களும் 90 ரன்கள் மற்றும் 85 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கும்போது போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா? ஒருவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பில் இருக்கும்போது அதை நாம் அனுமதிக்க வேண்டாமா? இங்கிலாந்து அணி இப்படித்தான் விளையாடும் என்றால் அது அவர்கள் விருப்பம். ஆனால், இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.

    என்று கவுதம் கம்பீர் கூறினார்.

    • ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர்.
    • கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கையை இந்திய கேப்டன் கில் மறுத்தார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் அடித்து கொண்டிருந்த நிலையில்,போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை இந்திய கேப்டன் கில் மறுத்தார்.

    இதையடுத்து தொடர்ந்து ஆடிய ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து இந்திய அணி போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ள ஒப்பு கொண்டது.

    இந்நிலையில் இது குறித்து பேசிய கேப்டன் கில், "4வது டெஸ்டில் எங்கள் வீரர்களின் பேட்டிங்கை நினைத்துப் பெருமை அடைகிறேன். களத்தில் எவ்வளவு நேரம் நீடித்து ஆட முடியுமோ அவ்வளவு நேரம் ஆடிவிட வேண்டும் என நினைத்தோம். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது ஆட்டம் சதத்திற்கு தகுதியானது என நினைத்தோம். எனவே ஆட்டத்தை சீக்கிரமாக முடிக்க ஒப்புக்கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.

    • போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார்.
    • ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் அடித்து கொண்டிருந்த நிலையில்,போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை இந்திய கேப்டன் கில் மறுத்தார்.

    இதையடுத்து தொடர்ந்து ஆடிய ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து இந்திய அணி போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ள ஒப்பு கொண்டது.

    இந்நிலையில், டிரா செய்ய கேட்டது குறித்து பேசிய கேப்டன் ஸ்டோக்ஸ், "ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அற்புதமாக விளையாடியதால், இந்திய அணி ஆட்டத்திற்குள் வந்துவிட்டது. டிரா மட்டுமே ஒரே முடிவு எனும் நிலையை கொண்டு வந்துவிட்டனர். ஒரு கட்டத்தில் நாங்களும் சோர்வடைந்து விட்டோம். எனவே கடைசி அரைமணி நேரத்தில் பவுலர்களை பந்துவீச வைத்து நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" என்று தெரிவித்தார். 

    மேலும், போட்டி முடிந்ததும் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். இதனால் நடுவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இறுதியாக ஜடேஜாவுடன் வேறுவழியின்றி ஸ்டோக்ஸ் கைகுலுக்கினார். ஆனால் அப்போது அவர் ஜடேஜாவின் முகத்தை கூட பார்க்கவில்லை.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்கள் குவித்தது.
    • பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 141 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடை 141 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 94 ரன்னும், ஜாக் கிராலே 84 ரன்னும், ஒல்லி போப் 71 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

    அடுத்து கே.எல்.ராகுலுடன் கேப்டன் சுப்மன் கில் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 137 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    இறுதி நாளில் இந்திய அணி நிதானமாக ஆடி போட்டியை டிரா செய்ய முனையும். இங்கிலாந்து இந்தியாவின் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முனையும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார்.
    • இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    186 ரன்கள் முன்னிலையுடன் 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 311 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கவுள்ளது. 

    • லார்ட்ஸ் டெஸ்டில் பும்ராவுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்சர் வீசினர்.
    • காயப்படுத்த வேண்டு என்ற திட்டத்தில் அவ்வாறு பந்து வீசினர் என கைஃப் குற்றச்சாட்டு.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா 112 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்தது. பும்ரா 54 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் எடுத்தார்.

    பும்ரா பேட்டிங் செய்யும்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தொடர்ச்சியாக பவுன்சர் வீசி பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக கைஃப் கூறுகையில் "பும்ராவுக்கு எதிராக பவுன்சர் வீச வேண்டும் என்பது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரின் திட்டம். பும்ரா அவுட்டாகவில்லை என்றால் கைவிரல் அல்லது தோள்பட்டையை காயப்படுத்த வேண்டும். அவர்கள் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் முக்கியமான பந்து வீச்சாளரை காயப்படுத்த இதுதான் பந்து வீச்சாளர்கள் மனநிலையில் நிலைத்திருக்கும். இந்த திட்டம் பின்னர் அவர்களுக்கு வேலை செய்தது. பும்ரா ஆட்டமிழந்தார்.

    இவ்வாறு பும்ரா தெரிவித்தார்.

    • பென் ஸ்டோக்ஸ் லார்ட்ஸ் மைதானத்தில் 44 ஓவர்கள் வீசினார்.
    • 5 விக்கெட் வீழ்த்தியதுடன், ரிஷப் பண்ட்-ஐ ரன்அவுட் ஆக்கினார்.

    நான் கேப்டனாக இருக்கும்போது பென் ஸ்டோக்ஸ் எனது பேச்சை கேட்கவில்லை என இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. தனது உடல்நிலை ஒத்துழைக்காததால் டெஸ்டில் மட்டும் விளையாடி வருகிறார். அடிக்கடி காயம் ஏற்படுவதால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கடின முயற்சியால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வார். பெரிய அளவில் பந்து வீசமாட்டா். ஆனால் இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டு இன்னிங்சில் சேர்த்து 44 ஓவர்கள் வீசினார். முதல் இன்னிங்சில் 2 விக்கெட், 2ஆவது இன்னிங்சில் 3 விக்கெட் என 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். ஒரே ஸ்பெல்லில் 9 ஓவர்களுக்கு மேல் வீசினார்.

    இந்த நிலையில் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னதாக நான் கேப்டனாக இருக்கும்போது, அதிக ஓவர்கள் வீச வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதும் பென் ஸ்டோக்ஸ் எனது பேச்சை கேட்கவில்லை என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜோ ரூட் கூறியதாவது:-

    நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் இது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் முயற்சி செய்து வருகிறேன். இதை அவரிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் எப்போதும் எனது பேச்சை கேட்கவில்லை. நான் கேப்டனாக இருக்கும்போது, அவர் என்னுடைய பேச்சை கேட்கவில்லை.

    இப்போது அவர் செய்தது நம்பமுடியாத முயற்சி. நாங்கள் முன்னோக்கி செல்வதற்கான நல்ல அறிகுறி. ஏனென்றால் அவர் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். அவருக்கு அந்த மனநிலையும், போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. அவரை எங்கள் கேப்டனாக கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்.

    இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    • மதிய உணவு இடைவேளைக்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது.
    • ஜடேஜா கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

    இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். மறுமுனையில் விளையாடிய கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 82 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற்ற 111 ரன்கள் தேவைப்பட்டது.

    8ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் நிதிஷ் ரெட்டி களம் இறங்கினார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் நிதிஷ் ரெட்டி (13) கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. 83 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிவடைந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் நம்பிக்கையுடன் விளையாடினர். முடிந்த அளவிற்கு பந்துகளை தடுத்து விளையாடினர். இதனால் ஓவருக்கு ஒரு ரன் என்ற அடிப்படையில் வந்தது. 62ஆது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தை பும்ரா தூக்கி அடிக்க, எளிதாக கேட்ச் பிடித்தனர். இதனால் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா 54 பந்தில் 5 ரன்கள் எடுத்தார்.

    பும்ரா ஆட்டமிழக்கும்போது இந்தியாவுக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டாக சிராஜ் களம் இறங்கினார். ஜடேஜா அரைசதம் கடந்து வெற்றிக்காக போராடினார். தேனீர் இடைவேளை வரை சிராஜ் தாக்குப்பிடித்தார். அப்போது இந்தியா 163 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 56 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர்இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பஷீர் வீசிய பந்தை சிராஜ் தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. இதனால் இந்தியா 170 ரன்னில் ஆல்அவுட் ஆகி 22 ரன்னில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து மற்றும் இந்தியா முதல் இன்னிங்சில் தலா 387 ரன்கள் சேர்த்தன. 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்கள் அடித்தது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    ×