என் மலர்
நீங்கள் தேடியது "ரவிச்சந்திரன் அஸ்வின்"
- ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கவுள்ளது.
- சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.
சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.
அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்தது.
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கேவுடன் வர்த்தகம் செய்யும் யோசனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெக்ரா ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
- ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.
சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.
அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்து வருகிறது.
அதற்கு குஜராத் அணியும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சிஎஸ்கே அணியிடம் பெரிய டிமாண்ட் எதுவும் முன் வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிஎஸ்கே அணிக்கு கொண்டு வரப்பட்டால், அது சேப்பாக்கம் பிட்சில் மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமையும்.
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஸ்வின்.
அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று அஸ்வின் கூறியிருந்தார்.
அந்த வகையில் 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்து விளையாடினார். அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் சில போட்டிகள் அவர் விளையாடவில்லை. இதனால் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எதிர்வரும் ஐ.எல்.டி டி20 சீசனுக்காக என்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு அணி என்னை வாங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐ.எல்.டி டி20 லீக் போட்டிகளில் இந்திய முன்னாள் வீரர்களான யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது.
- ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.
சென்னை:
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வின். இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார்.
ஓய்வு குறித்து அஸ்வின் கூறியதாவது:-
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.
பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
என அவர் கூறினார்.
பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
அதற்கு காரணத்தை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் ஓய்வு அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.
அதன்பிறகு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் போட்டிகளில் அவரை ஓரங்கட்டினார்கள். 2009-ம் ஆண்டிற்கு பிறகு, முதல் முறையாக 10-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடும் நிலைமை ஏற்பட்டது.
இதனால், ஐபிஎல் 19ஆவது சீசனுக்கு முன், அஸ்வினை சிஎஸ்கே கழற்றிவிடும் எனக் கூறப்பட்டது. அந்த தகவல் வெளியான சில நாட்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிவோல்ட் பிரேவிஸை வாங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அஸ்வின் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நான் அப்படி பேசவில்லை எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போட்டியின் போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், குட்டி ஸ்டோரீஸ் என்ற பெயரில் அஸ்வின் வெளியிட்டுவரும் யூடியூப் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருந்தினராக பங்கேற்றார். அப்போது, ஓய்வுமுடிவு குறித்த ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்குச் சென்று, பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அது தனக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு.
என்று அஸ்வின் கூறினார்.
- துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார்.
- சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதாக அஸ்வின் கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டது பல ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது.
அதே போல டி20 கிரிக்கெட்டில் வேகமாக ரன்கள் குவிப்பதில் தடுமாற்றத்தைக் கொண்டுள்ள சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் தொடக்க வீரராக களமிறங்கி சதங்களை அடித்து மறுவாழ்வு பெற்ற சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதை நினைத்தால் வருத்தமாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத்துக்காக நிறைய ரன்கள் அடித்துள்ள சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் 3-வது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அப்படிப்பட்ட அவரையும் ஷ்ரேயாஸ் ஐயரையும் நீக்கியுள்ளதற்காக நான் சோகமடைந்துள்ளேன்.
ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கில் வருங்காலத்தில் ஆல் ஃபார்மட் கேப்டனாக இருக்கலாம். ஆனால் 3 ஃபார்மட்டிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டிய அவசியமில்லை. கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சஞ்சு சாம்சனுடைய இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது என்பது சோகமான விஷயமாகும். அதனால் சஞ்சு கண்டிப்பாக விளையாடப் போவதில்லை. சுப்மன் தொடக்க வீரராக விளையாடுவார்.
என்று கூறினார்.
- அணித் தேர்வை பொறுத்தவரை யாரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது.
- ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினையை சரி செய்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் அணிக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'அணித் தேர்வை பொறுத்தவரை யாரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது. ஒன்றிரண்டு பேரை வெளியேற்ற வேண்டி இருக்கும். அவர்களிடம் பேசும் போது சோகமும், ஏமாற்றமும் தெரியும். தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. அதே நேரம் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜெய்வாலுக்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களை சேர்க்காதது நியாயமற்ற முடிவு.
குறிப்பாக ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 11 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். 'ஷாட்பிட்ச்' பந்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினையை சரி செய்தார். ஐ.பி.எல்.-ல் ரபடா, பும்ரா போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி வந்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பிரமாதமாக பேட்டிங் செய்தார். அதில் நமக்கு கோப்பையை வென்று தந்தார். சுப்மன் கில் போன்று ஷ்ரேயாஸ் அய்யரும் மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். அவரை மட்டும் விட்டது ஏன், அவர் என்ன தவறு செய்தார்?' என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷ்ரேயாஸ் அய்யர் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் 17 ஆட்டங்களில் ஆடி 6 அரைசதம் உள்பட 604 ரன்னும், சாம்பியன்ஸ் கோப்பையில் 5 ஆட்டங்களில் ஆடி 243 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்.
- 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடினார். 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர், பின்னர் பல அணிகளுக்காக விளையாடி, பின்னர் 2025-ல் மீண்டும் சிஎஸ்கே-வுக்கு திரும்பினார்.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ராஜஸ்தான் அணியில் இருந்த தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வினும் வெளியேற உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் 212 போட்டிகளில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.
- அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார்.
இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இத்தொடரில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறினர். குறிப்பாக 4-வது போட்டியில் பாதத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் நடக்க முடியாமல் தடுமாறினார். இருப்பினும் அவர் நாட்டுக்காக மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 53 ரன்கள் குவித்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றது.
அதே போல இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் கடைசி நாளில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஒற்றைக் கையுடன் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் பாராட்ட வைத்தது.
முன்னதாக இப்படி திடீரென காயமடைபவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க முடியாது என்பது ஐசிசி விதிமுறையாகும். அதனால் காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைப்பதற்கு விதிமுறைகளில் தேவையான மாற்றம் செய்ய வேண்டும் என்று 4-வது போட்டியின் முடிவில் ஐசிசிக்கு கௌதம் கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸை கர்மா பழி தீர்த்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்ய முடியும். அவருடைய மிகப்பெரிய ரசிகரான நான் அவருடைய அணுகுமுறையை ரசிக்கிறேன். ஆனால் நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும்.
கிறிஸ் ஓக்ஸ் இங்கிலாந்துக்கு உதவி செய்வதற்காக தனது ஒற்றைக்கையை சட்டைக்குள் வைத்துக்கொண்டு விளையாட வந்தார். கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய அவருடைய அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். இருப்பினும் அது போன்ற காயத்திற்கு மாற்று வீரர் தேவை என்று மைக்கேல் வாகனும் தெரிவித்திருந்தார். என்னைப் பொறுத்த வரை மற்ற அணிகளின் கருத்தையும் பாருங்கள் என்று சொல்வேன்.
ரிஷப் பண்ட் போன்றவர் காயத்தால் வெளியேறும் போது என்னவாகும் என்பதை ஸ்டோக்ஸ் கருத வேண்டும். நீங்கள் உங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள். அதற்காக மற்றவர்கள் கருத்தை நகைச்சுவை என்று சொல்வது மரியாதையற்றது. பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில் உங்களை கர்மா உடனடியாக அடித்துள்ளது.
என்று அஸ்வின் கூறியுள்ளார்.
- அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
- அஷ்வினின் ஆவணப்படம் நாளை சிஎஸ்கே யூடியூப் சேனலில் வெளியாகிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாளை சிஎஸ்கே யூடியூப் சேனலில் இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று IPL, TNPL போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






