என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sydney Thunder"

    • 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

    சென்னை:

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

    அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.

    இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.

    இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.

    இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.

    • 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

    அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஸ்வின்.

    அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தகுதி பெற்றது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் ஓவன்- காலேப் ஜூவல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    • 2025-ம் ஆண்டுக்கான பிக்பாஷ் கோப்பையை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வென்றது.
    • இறுதி போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய 23 வயதான இளம் வீரர் மிட்செல் ஓவன் அதிரடியாக விளையாடினார். இதனால் ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இதன்மூலம் பிக்பாஷ் தொடரில் அதிகவேக சதம் அடித்த கிரெய்க் சிம்மன்ஸ் (39) சாதனையை ஓவன்(39) சமன் செய்தார். 2014-ம் ஆண்டு நிகழ்த்தி இந்த சாதனையை ஓவன் 11 ஆண்டுகளுக்கு பிறகு சமன் செய்துள்ளார்.

    • பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    • ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன் சதம் அடித்து அசத்தினார்.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்யில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன், அதிரடியாக விளையாடிய 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார். குறிப்பாக ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல இவர் முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில் 2015-ல் ரசிகனாக ஹரிகேன்ஸ் அணியின் வெற்றியை ரசித்த ஓவன், 10 ஆண்டுகளுப் பிறகு (2025) ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல ஒரு வீரனாக களத்தில் ஆடியுள்ளார். இந்த இரு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டரை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற அடிலெய்டு பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் கேரி 40 பந்தில் 59 ரன்களும், கேப்டன் இன்கிராம் 43 பந்தில் 75 ரன்களும் விளாச அடிலெய்டு 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களம் இறங்கியது.

    வாட்சன் (28), பட்லர் (23), பெர்குசன் (47), ஜோ ரூட் (18) ரன்களில் வெளியேற சிட்னி தண்டர் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் #BigBashLeague
    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இனறு நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி தண்டர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், கேப்டன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    வாட்சன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 54 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். க்ரீன் 14 பந்தில் 26 ரன்கள் விளாச சிட்னி தண்டர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.


    மேத்யூ வடே

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் மேத்யூ வடே, ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். ஷார்ட் 39 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்களும், வடே 49 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 85 ரன்கள் குவித்தனர்.

    பெய்லி 10 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
    இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட்டும், துணைக் கேப்டன் ஜோஸ் பட்லரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடுகிறார்கள். #BigBash2018
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் பொதுவாக வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடுவது கிடையாது. ஆனால் தற்போது ஏராளமான வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    2018 ஐபிஎல் தொடரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடினார்கள். டெஸ்ட் அணி கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஜோ ரூட் ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகவில்லை. அவரை எந்த அணியில் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.



    இந்நிலையில் தற்போது ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோரை பிக் பாஷ்  டி20 லீக்கில் விளையாடும் சிட்னி தண்டர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2018-19 சீசனில் இருவரும் ஏழு போட்டிகளில் விளையாடுவார்கள்.

    ஜோஸ் பட்லர் முதல்முறையாக விளையாட இருக்கிறார். அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர் கடந்த பிக்பாஷ் சீசனில் 202 ரன்கள் சேர்த்தார்.
    ×