search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்லர்"

    ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.
    மும்பை:

    தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், தென் ஆப்ரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

    இதில் பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 4 சதம் உட்பட 824 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.

    இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் ஒவ்வொரு முறையும் பெரிய ஷாட்டை அடிக்கும்போதும் கேமராவில் வான் டெர் டுசெனின் மனைவி லாரா தவறுதலாக காட்டப்பட்டார். இதனால் பலர் லாராவை பட்லரின் மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டனர். இதுகுறித்து கிண்டலாக பேசிய லாரா ‘நான் பட்லரை 2வது கணவராக தத்தெடுத்துவிட்டேன்’ என தெரிவித்தார்.

    இதுகுறித்து லாரா கூறியதாவது:-

    நான் ஜோஸ் பட்லரின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும்போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறார்கள். பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை.

    என் கணவர் ரஸ்ஸி சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லருக்கு உற்சாகத்தை தெரிவித்து வருகிறேன். இந்த சீசனில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன்.

    இவ்வாறு கிண்டலாக கூறினார். 
    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி நான்கு சதம் அடித்து இருந்தார்.

    அகமதாபாத்:

    பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற  ஐ.பி.எல். கிரிக்கெட்  2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.  

    பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் எளிதாக நுழைந்தது.  

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் 4வது சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் முதல் இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
     
    ஏற்கனவே அவர் 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றிருந்தார். 

    இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 4 சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×