search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ipl cricket"

    • கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார்.
    • டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

    விருத்தாசலம்:

    கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி கடந்த 24-ந் தேதி இரவு வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர், தனது செல்போனில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பாா்த்தபடி தனியார் பஸ்சை ஓட்டினார். அவரது அலட்சியத்தால் பஸ் விபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்திலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

    டிரைவர் செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியதை சில பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிரைவர் விருத்தாசலம் அடுத்த சக்கரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உரிய அறிவுரை கூறிய அதிகாரிகள், அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு மாத காலத்திற்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் கூறுகையில். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, செல்போனில் வேறு ஏதேனும் பார்க்கக்கூடாது என்று ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.

    இதையும் மீறி யாரேனும் செல்போன் பார்த்தபடியோ அல்லது செல்போனில் பேசியபடியோ வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

    • பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது.
    • பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது. தற்போது ஆண்கள் அணி போட்டியில் களம் இறங்க போகிறது. இந்த ஆண்டு தடைகளை உடைத்து ஆண்கள் அணி கோப்பையை வெல்லும் என்ற நம்புகிறேன். இதற்கு பொறுமையாக இருக்க வேண்டும்.

    பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.

    • பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
    • கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 22 மற்றும் 26-ந்தேதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.

    பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை -பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.

    பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

    எம்.டி.வி. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.

    காமராஜர் சாலையில் இருந்து வரும் பி.ஆர். ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சிலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

    அனுமதி அட்டை இல்லாமல் அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யு.டி. எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.
    • ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது.

    மும்பை:

    உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டாக ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திகழ்கிறது. 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த போட்டியில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. விளம்பரங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றால் வருவாய் குவிகிறது.

    16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.லின் வணிக நிறுவன மதிப்பு தற்போது ரூ.1.3 லட்சம் கோடியாகும். இதனை உலகம் முழுவதும் உள்ள பல விளையாட்டு உரிமைகளை மதிப்பிடும் உலகளாவிய முதலீடு வங்கியான ஹெளலி ஹான் லோகி தெரிவித்துள்ளது. இது கடந்த ஐ.பி.எல். போட்டியை விட வணிக மதிப்பு 80 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.

    ஐ.பி.எல். போட்டியின் பிராண்ட் மதிப்பு ரூ.26,600 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் சென்னை சூப்பர் கிங்சின் பிராண்ட் மதிப்பு தான் அதிகமாக இருக்கிறது. அந்த அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.1760 கோடியாக உள்ளது. அதற்கு அடுத்தப் படியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ரூ.1605 கோடியாகவும், மும்பை இந்தியன்சுக்கு ரூ.1504 கோடியாகவும், கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ரூ.1490 கோடியாகவும் பிராண்ட் மதிப்பு இருக்கிறது.

    ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. என்.பி.ஏ., இங்கிலாந்து பிரீமியர் லீக், ஜெர்மனி கால்பந்து லீக் போன்றவற்றை விட ஐ.பி.எல். ஒளிபரப்பு கட்டணம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2023 முதல் 2027 வரை ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக வணிக மதிப்பு அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு கிரிக்கெட் வாரியம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைவிட இது 3 மடங்கு விலை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் நாளை தொடங்குகிறது.
    • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக ரசிகர்கள் இந்தப் போட்டியை பார்ப்பதால் ஒளிபரப்பு உரிமத்தைபெற எப்போதுமே கடும் போட்டி நிலவும்.

    2008-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சோனி நெட்வொர்க் நிறுவனம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமத்தை பெற்று இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஸ்டார் நிறுவனம் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பியது. அந்த நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.16,347 கோடிக்கு வாங்கி இருந்தது.

    2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பு மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமத்துக்கான டெண்டர் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே தொடங்கி இருந்தது.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் நாளை தொடங்குகிறது. இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமம் இந்திய துணைக்கண்டம் ஒளிபரப்பு என 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18, ஜே.வி. தற்போதைய ஒளிபரப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி (ஸ்டார்), ஜீ குழுமம், சோனி நிறுவனம் ஆகியவை கடும் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.

    2 அல்லது 3 ரவுண்டகள் ஏலம் கேட்க வாய்ப்பு உள்ளது. அதிக தொகையை கேட்கும் நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படும்.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு மற்றும் இணைய வழி பயன்பாடுக்கான டிஜிட்டல் உரிமம் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி நான்கு சதம் அடித்து இருந்தார்.

    அகமதாபாத்:

    பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற  ஐ.பி.எல். கிரிக்கெட்  2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.  

    பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் எளிதாக நுழைந்தது.  

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் 4வது சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் முதல் இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
     
    ஏற்கனவே அவர் 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றிருந்தார். 

    இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 4 சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். #IPL2019 #CSK #RCBvCSK #Dhoni
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணி  20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  சென்னை அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 

    இதையடுத்து, டோனி தனி ஒருவனாக போராடினார். அரை சதம் அடித்து அசத்திய அவர் 84 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். அவர் 48 பந்தில் 7 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார். #IPL2019 #CSK #RCBvCSK #Dhoni
    ஐ.பி.எல். போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் இன்று தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #KKRvRCB
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியின் 35-வது ‘லீக்’ ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் தினேஷ்கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ஐதராபாத் (6 விக்கெட்), பஞ்சாப் (28 ரன்), பெங்களூர் (5 விக்கெட்), ராஜஸ்தான் (8 விக்கெட்) ஆகிய அணிகளை வென்று இருந்தது. டெல்லி (சூப்பர் ஓவர், 7 விக்கெட்), சென்னை (7 விக்கெட், 5விக்கெட்) ஆகிய அணிகளிடம் தலா 2 முறை தோற்று இருந்தது.

    ஏற்கனவே பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் மீண்டும் தோற்கடித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றது. அந்த தோல்வியில் இருந்து மீளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆந்த்ரே ரஸ்சல், (322 ரன்), கிறிஸ்லின் (212 ரன்), நிதிஷ் ரானா (201 ரன்) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், சுனில் நரீன், பியூஸ் சாவ்லா போன்ற சிறந்த பவுலர்களும் கொல்கத்தாவில் உள்ளனர்.

    பெங்களூர் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை பெற அந்த அணிக்கு மிகவும் கடினமே. எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    அந்த அணி பஞ்சாப்பை மட்டும் 8 விக்கெட்டில் வென்றது. மும்பையிடம் 2 முறையும் (6 ரன், 5 விக்கெட்), சென்னை (7 விக்கெட்), ஐதராபாத் (118 ரன்), ராஜஸ்தான் (7 விக்கெட்), கொல்கத்தா (5 விக்கெட்), டெல்லி (4 விக்கெட்) ஆகியவற்றிடம் ஒருமுறையும் தோற்றது.

    விராட்கோலி (278 ரன்), டிவில்லியர்ஸ் (307 ரன்), யசுவேந்திர சாஹல் (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் பெங்களூர் அணி முன்னேற்றம் அடையாமல் இருப்பது பரிதாபமே. #IPL2019 #KKRvRCB
    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது . #IPL2019 #SRHvDC
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் இந்த முறை 7 ரன்னிலும், பிரித்வி ஷா 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 24 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார்.  அவர் 45 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிஷப் பன்ட் 23 ரன்னில் அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஐதராபாத் அணி வெற்றிபெற 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.




    ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 9.5 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கண்ட நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ (41 ரன்) கீமோ பால் பந்து வீச்சில் ரபடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை (51 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.


    18.5 ஓவர்களில் ஐதராபாத் அணி 116 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 15 ரன்களுக்குள் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், கீமோ பால் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் ஆட்டநாயகன் விருது பெற்றார். 8-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சுவைத்த 5-வது வெற்றி இதுவாகும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்திடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

    #IPL2019 #SRHvDC
    கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா, தாஹிரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. #IPL2019 #CSKvKKR
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

    சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 10 ரன்னிலும் வெளியேறினர். 

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த கிறிஸ் லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்களை எடுத்தது.



    சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இதையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. வாட்சன் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

    டு பிளசிஸ் 24 ரன்னிலும், அம்பதி ராயுடு 5 ரன்னிலும், கேதார் ஜாதவ் 20 ரன்னிலும், டோனி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். #IPL2019 #CSKvKKR
    ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் அல்ஜாரியின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. #IPL2019 #SRHvMI
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் இறங்கினர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி மும்பை அணியினர் ரன்கள் எடுக்க திணறினர்.

    ரோகித் சர்மா 11 ரன்னிலும், டி காக் 19 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், இஷான் கிஷன் 17 ரன்னிலும், குருணால் பாண்டியா 6 ரன்னிலும் அவுட்டாகினர். மும்பை அணி 65 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்டியா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் சாஹர் 10 ரன்னில்  வெளியேறினார்.

    பொலார்ட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்துள்ளது. பொல்லார்ட் 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐதராபாத் அணி சார்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், மொகமது நபி, சந்தீப் சர்மா, ரஷித் கான், புனவேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் 96 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.



    மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய அல்ஜாரி 3.4 ஓவரில் 12 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். #IPL2019 #SRHvMI
    சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. #IPL2019 #CSKvKXIP
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 56 ஆக இருக்கும்போது வாட்சன் 26 ரன்னில் அவுட்டானார். டு பிளசிஸ் அதிரடி ஆட்டத்தால் 38 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 20 ரன்னில் வெளியேறினார். 

    இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. டோனி 37 ரன்களுடனும், ராயுடு 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

    பஞ்சாப் அணி சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் இறங்கினர்.

    கெயிலை 5 ரன்னில் அவுட்டாக்கிய ஹர்பஜன் சிங், மயங்க் அகர்வாலை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற்றினார். ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    அதன் பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த சர்ப்ராஸ் கான் நிதானமாக ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர். 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.

    அணியின் எண்ணிக்கை 117 ஆக இருக்கும்போது ராகுல் 55 ரன்னில் வெளியேறினார். கடைசியில் சர்ப்ராஸ் கான் 67 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    சென்னை அணி சார்பில் ஹர்பஜன், குகலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2019 #CSKvKXIP
    ×