search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ipl 2022"

    நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    இந்த சீசன் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம்.

    இளம் வீரர்கள், சீனியர்கள் என அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக விளையாடினர். அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். போட்டியில் பந்து வீச்சாளர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இதனால் ஏலத்தில் அவர்கள் மீது முதலீடு செய்து எடுத்தோம். இன்றைய நாள் (நேற்று) எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு வாழ்த்துக்கள் என்றார்.
    போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம் என ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    கோப்பையை வென்றது குறித்து குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    ஒரு அணியாக விளையாடினால் அற்புதங்களை செய்ய முடியும் என்பதற்கு இந்த அணியே சரியான உதாரணம்.

    நானும், பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ராவும் சிந்தனையில் ஒரே மாதிரியானவர்கள். போட்டிகளை வெல்லக் கூடிய சரியான பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க விரும்பினோம். 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக இருக்கலாம்.

    ஆனால் பந்து வீச்சாளர்கள் உங்களை வெற்றி பெற வைப்பார்கள். வீரர்களுக்கு அணி ஊழியர்கள் வழங்கிய ஆதரவு அற்புதமானது. போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம்.

    5 இறுதிப்போட்டிகளில் (மும்பை அணியில் விளையாடிய போது) வெற்றி பெற்றதால் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்.

    குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    ஏனென்றால் நாங்கள் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளோம். வரும் தலைமுறையினர் இதை பற்றி பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
    சர்வதேச போட்டியில் 2½ ஆண்டுகளாக சதம் அடிக்காத இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இந்த ஐ.பி.எல். சீசன் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

    33 வயதான விராட் கோலி 16 ஆட்டத்தில் விளையாடி 341 ரன்கள் எடுத்தார். 2 முறை மட்டுமே அரை சதம் அடித்தார். அவரது சராசரி 22.73 ஆகும்.

    பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க வீரராக அடி குறைவான ரன்களையே எடுத்தார்.

    இந்த நிலையில் விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது நமக்கு தெரிந்த விராட் கோலி அல்ல. வேறு விராட் கோலிதான் இந்த சீசனில் விளையாடினார். இந்த சீசனில் செய்த தவறுகளை ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே அவர் செய்தது இல்லை.

    ரன்கள் குவிக்காத போது இது போன்று நிகழலாம். மோசமான பேட்டிங் நிலையை மாற்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம். அது பல்வேறு விதமாக ஆட்டம் இழப்பதற்கு வழி வகுக்கும்.

    இந்த சீசனில் அனைத்து விதமான முறையிலும் கோலி அவுட் ஆகி உள்ளார்.

    இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் தோல்வி அடைந்த போதிலும் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தற்காக விராட் கோலி தனது உருக்கமான பதிவில் நன்றி தெரிவித்து உள்ளார்.
    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி நான்கு சதம் அடித்து இருந்தார்.

    அகமதாபாத்:

    பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற  ஐ.பி.எல். கிரிக்கெட்  2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.  

    பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் எளிதாக நுழைந்தது.  

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் 4வது சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் முதல் இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
     
    ஏற்கனவே அவர் 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றிருந்தார். 

    இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 4 சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களுரூவிடம் தோற்று வெளியேறியது. இதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியதாவது:-

    லக்னோ அணிக்கு இந்த தொடர் சிறப்பாக அமைந்தது. ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று தெரிவித்தார்.

    நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த குவாலிபையர்-1 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. இதனால் குஜராத் அணிக்கு 189 ரன் இலக்காக இருந்தது.

    ஜோஸ்பட்லர் 56 பந்தில் 89 ரன்னும் ( 12 பவுண்டரி , 2 சிக்சர் ) , கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தனர். முகமது ஷமி , தயாள், சாய் கிஷோர் ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    டேவிட் மில்லர் 38 பந்தில் 68 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) , கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 27 பந்தில் 40 ரன்னும் ( 5 பவுண்டரி ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 21 பந்தில் 35 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மேத்யூ வேட் 30 பந்தில் 35 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். டிரெண்ட் போல்ட், மெக்காய் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    புதுமுக அணியான குஜராத் தனது முதல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதித்தது.

    குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லரை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு மாதிரியானவர்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.

    ரஷீத்கான் பந்து வீச்சு நன்றாக இருந்தது. மீண்டும் அவருக்கு பந்து வீச்சில் நல்ல நாளாக அமைந்தது. இந்த தொடர் முழுவதும் அவர் கிரிக்கெட் பயணம் அற்புதமாக இருந்தது.

    இந்த போட்டித் தொடரில் டேவிட் மில்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

    நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன்.

    நான் எனது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை சமநிலைப்படுத்த தொடங்கி விட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக இது ஒரு நிலையான முயற்சியாகும். என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற குடும்பம் உதவியது.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    முதலில் ஆடி 188 ரன் குவித்தது மகிழ்ச்சியை அளித்தது. இது நல்ல ஸ்கோர்தான் என்று கருதினோம். ஆனால் ஈடன் கார்டன் மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது.

    இந்தப் போட்டி தொடரில் அதிர்ஷ்டம் (டாஸ்) முக்கிய பங்கு வகிக்கிறது. சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்தப் போட்டியில்நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
    கொல்கத்தா:

    24-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “பிளேஆப்” சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்தோடு ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐ.பி.எல்.லில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 10 இடங்களை பிடித்து வெளியேறின.

    பிளேஆப் சுற்றின் ‘குவாலிலையர் 1’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தல் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறுவது குஜராத்தா? ராஜஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்கும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.

    லக்னோ-பெங்களூர் இடையே நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தல் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய குவாலிபையர் 1 ஆட்டம் பரபரப்பாகவும், விறு விறுப்பாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மும்பை மற்றும் புனேயில் நடந்தது. பிளே ஆப் சுற்றில் குவாலிபையர் 1, எலிமினினேட்டர் ஆட்டங்கள் கொல்கத்தாவிலும், குவாலிபையர் 2, இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடக்கிறது.

    இந்த நிலையில் எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்காக நான் விளையாடுகிறேன். எனவே எனது சொந்த மைதானம் அகமதாபாத் மொதேரா ஸ்டேடியம் ஆகும்.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக நான் நீண்ட காலம் ஆடவில்லை. இதனால் ஈடன் கார்ன் எனது சொந்த மைதானம் அல்ல. எந்த மைதானத்திலும் குஜராத் அணி சிறப்பாக விளையாடும்.

    இந்திய அணிக்கான தேர்வு குறித்து நான் நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துவதாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன்களை குவிக்க வேண்டும். முதல் 6 ஓரில் அதிரடியாக ஆடுவதுதான் முக்கியமானது.

    இவ்வாறு விர்த்திமான் சஹா கூறியுள்ளார்.

    சஹா இந்த ஐ.பி.எல். சீசனில் 9 ஆட்டத்தில் 3 அரை சதத்துடன் 312 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×