search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wriddhiman Saha"

    • விராட் கோலி இன்ஸ்டா பதிவில் என்ன ஒரு வீரர் என்று பாராட்டியிருந்தார்.
    • இந்த சீசனில் இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடிய சஹா, 273 ரன்கள் வரையில் அடித்துள்ளார்.

    நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 51-வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பம் முதலே சஹா அதிரடி காட்டி ஆடினார். அவர் 20 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி குஜராத் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 21 பந்துகளிலும், 24 பந்துகளிலும் விஜய் சங்கர் அரைசதம் அடித்திருக்கிறார். தொடர்ந்து ஆடிய சஹா 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹாவின் பேட்டிங்கை கண்டு வியந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி கூட இன்ஸ்டா பதிவில் என்ன ஒரு வீரர் என்று பாராட்டியிருந்தார்.

    இந்த சீசனில் இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடிய சஹா, 273 ரன்கள் வரையில் அடித்துள்ளார். இதில் 7 சிக்ஸர்கள், 35 பவுண்டரிகள் அடங்கும். அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்குப் பதிலாக விருத்திமான் சஹா இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக சென்னை அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

    அதே போன்று தற்போது ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஹா, கேஎல் ராகுலுக்குப் பதிலாக இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய பந்து வீச்சாளரான தொட்டா கணேஷ் இந்த யோசனையை கூறியிருக்கிறார். வரும் ஜூன் 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
    கொல்கத்தா:

    24-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “பிளேஆப்” சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்தோடு ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐ.பி.எல்.லில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 10 இடங்களை பிடித்து வெளியேறின.

    பிளேஆப் சுற்றின் ‘குவாலிலையர் 1’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தல் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறுவது குஜராத்தா? ராஜஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்கும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.

    லக்னோ-பெங்களூர் இடையே நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தல் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய குவாலிபையர் 1 ஆட்டம் பரபரப்பாகவும், விறு விறுப்பாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மும்பை மற்றும் புனேயில் நடந்தது. பிளே ஆப் சுற்றில் குவாலிபையர் 1, எலிமினினேட்டர் ஆட்டங்கள் கொல்கத்தாவிலும், குவாலிபையர் 2, இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடக்கிறது.

    இந்த நிலையில் எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்காக நான் விளையாடுகிறேன். எனவே எனது சொந்த மைதானம் அகமதாபாத் மொதேரா ஸ்டேடியம் ஆகும்.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக நான் நீண்ட காலம் ஆடவில்லை. இதனால் ஈடன் கார்ன் எனது சொந்த மைதானம் அல்ல. எந்த மைதானத்திலும் குஜராத் அணி சிறப்பாக விளையாடும்.

    இந்திய அணிக்கான தேர்வு குறித்து நான் நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துவதாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன்களை குவிக்க வேண்டும். முதல் 6 ஓரில் அதிரடியாக ஆடுவதுதான் முக்கியமானது.

    இவ்வாறு விர்த்திமான் சஹா கூறியுள்ளார்.

    சஹா இந்த ஐ.பி.எல். சீசனில் 9 ஆட்டத்தில் 3 அரை சதத்துடன் 312 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான சஹா, இங்கிலாந்தில் வெற்றிகரமாக ஆபரேசனை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார். #Saha
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பராக திகழந்து வருபவர் விருத்திமான் சஹா. ஐபிஎல் தொடரின்போது இவரது கைவிரவில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியை மேற்கொண்டார்.

    ஆனால் அது பயன் தராததால் சஹா அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக சஹா இங்கிலாந்து சென்று மான்செஸ்டரில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.

    இன்னும் மூன்று வாரங்கள் கழித்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருதவற்கான பயிற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அறுவை சிகிச்சை குறித்து சஹா கூறுகையில் ‘‘காயத்திற்கு கட்டுப்போட்டபடி இருப்பது கடினமானது. கையை அங்கும் இங்குமாக அசைக்க இயலாது. ஒரே நிலையில் இருக்க வேண்டும். இது வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதை விட கடினமானது. இது ஒன்றுதான் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு சரியான வழி’’  என்றார்.


    காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா பங்கேற்பது சந்தேகமான நிலையில் தினேஷ் கார்த்தி-க்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #DineshKarthik #WriddhimanSaha #AfghanistanTest
    சென்னை:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் டெஸ்ட் விளையாட ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அங்கீகாரம் அளித்தது.

    அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் மோதுகிறது. இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (ஜூன் 4-ந்தேதி) பெங்களூரில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் இருந்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரகானே கேப்டனாக செயல்படுவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    அணியில் இடம் பெற்று இருந்த விக்கெட் கீப்பர் விரித்திமான் சகா ஐ.பி.எல். போட்டியின் போது காயம் அடைந்தார். கொல்கத்தாவுக்கு எதிரான ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் அவருக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னைக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆடவில்லை.

    காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டிலும் ஆடுவது சந்தேகம். இதனால் அவர் இடத்தில் சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அவரது பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங்கும் நன்றாக இருந்தது. இதனால் அவர் அணி இடம் பெறுவதற்கான வாய்ப்பில் அதிகமாக இருக்கிறார். ஐ.பி.எல்.லில் அவர் 498 ரன் எடுத்தார்.

    தினேஷ் கார்த்திக் கடைசியாக 2010-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடி இருந்தார்.

    இதேபோல பார்த்தீவ் படேலும் வாய்ப்பு இருக்கிறார். விரித்திமான் சகா இடத்தில் இடம் பெற இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.#DineshKarthik #WriddhimanSaha #AfghanistanTest
    ×