என் மலர்
நீங்கள் தேடியது "KL Rahul"
- முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.
- முதல் நாள் முடிவில் கர்நாடக 355 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 5 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து கே எல் ராகுலுடன், தேவ்தத் படிக்கல் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். 2-வது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 141 ரன்களுக்கு அவுட்டானார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 148 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 148 ரன்னுடனும், கருண் நாயர் 37 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- 153 பந்தில் சதம் அடித்து, 141 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- 2-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் சேர்ந்து 278 ரன்கள் குவித்தார்.
ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கர்நாடகா அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.
கே.எல். ராகுல் 153 பந்தில் சதம் அடித்தார். தேவ்தத் படிக்கல் 144 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் 211 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல்- தேவ்தத் படிக்கல் ஜோடி 278 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் ஆட்டமிழக்கும்போது கர்நாடகா 2 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்திருந்தது.
- 4-வது காலிறுதியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடியது.
- 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபியின் காலிறுதி ஆட்டங்களின் 4-வது காலிறுதியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கர்நாடகாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 120 ரன்னில் சுருண்டது.
இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 173 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் 53 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடிய மும்பை அணி 377 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஆகாஷ் ஆனந்த் 70 ரன்கள் குவித்தார். இதனால் கர்நாடகா வெற்றி பெற 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணியில் கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தினார். அவர் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ரவிச்சந்திரன் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் கர்நாடக அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
- அது வரும்போது வந்தே தீரும். அங்கே இழுத்தடிப்பதில் எந்த பயனும் இல்லை.
- நிச்சயமாக, எனக்கு ஓய்வு குறித்து முடிவு எடுக்க இன்னும் சிறிது காலம் ஆகும்.
இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக கே.எல். ராகுல் திகழ்ந்து வருகிறார். ஒருநாள் போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறது. இவரிடம் கெவின் பீட்டர்சன் ஓய்வு குறித்து கேள்வி கேட்டார்.
அதற்கு கே.எல். ராகுல் அளித்த பதில் பின்வருமாறு:-
நீங்கள் உங்களுக்கு நேர்மையாக இருந்தால், அது வரும்போது வந்தே தீரும். அங்கே இழுத்தடிப்பதில் எந்த பயனும் இல்லை. நிச்சயமாக, எனக்கு ஓய்வு குறித்து முடிவு எடுக்க இன்னும் சிறிது காலம் ஆகும். ஓய்வு குறித்து நான் யோசித்தேன். அது கடினமான முடிவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை உள்ளது.
நம் நாட்டில் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறும். உலகிலும் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறும். வாழ்க்கையில் இதைவிட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இந்த மனநிலை எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் என் முதல் குழந்தை பிறந்ததிலிருந்து, வாழ்க்கையை பார்க்கும் விதமே முற்றிலும் மாறிவிட்டது.
இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
33 வயதாகும் கே.எல். ராகுல் 67 டெஸ்ட் போட்டிகளில் 4,053 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 35.8 ஆகும். 94 ஒருநாள் போட்டிகளில் 3360 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 50.9 ஆகும். 72 டி20 போட்டிகளில் 2265 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.75 ஆகும்.
- சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
- பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 24 ரன்னிலும் சுப்மன் கில் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கோலி 23 ரன்னிலும் ஷ்ரேயாஸ் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
118 ரங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 27 ரன்னில் ஜடேஜா அவுட்டாக பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
- தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறேன் என கூறினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான, இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெயிக்வாட் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய அணியில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ருதுராஜ் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என இந்திய அணியின் தற்காலிக கேப்டன் கே ரள் ராகுல் தெரிவித்துள்ளார்.
அதில், தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறேன் என கூறினார்.
- ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம் பிடித்துள்ளார்.
- ஜெய்ஸ்வாலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது, ஒருநாள் அணி கேப்டனான சுப்மன் கில்லுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. இதனால் முதல் போட்டியில் அதன்பின் பேட்டிங் செய்யவில்லை. இரண்டாவது போட்டியிலிருந்து விலகினார்.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் விலகினார். இதனால் ஒருநாள் அணிக்கு வேறு கேப்டனை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் BCCI-க்கு ஏற்பட்டது. ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் உள்ளிட்டோர் கேப்டன் வரிசையில் இருந்தனர்.
இந்த நிலையில் கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மேலும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இடது கை அதிரடி பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி விவரம்:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜுரல்.
முதல் போட்டி 30-ந்தேதி ராஞ்சியிலும், 2ஆவது போட்டி டிசம்பர் 3-ந்தேதி ராய்ப்பூரிலும், 6-ந்தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது.
- சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், காயம் காரணமாக தன் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து கில் விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரவது ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வர வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. அண்மைய காலங்களில் பண்ட் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் கேப்டன் வாய்ப்பு கேஎல் ராகுளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு அதிகப்பமுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக பிசிசிஐ நாளை மும்பையில் தேர்வுக் குழு கூட்டத்தை நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
- கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது
நேர்காணல் ஒன்றில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "10 மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்படும் களைப்பை விட 2 மாதம் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வடைந்தேன்.
ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை. எதிர் அணியினர் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. எதிர் அணியால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே மைதானத்தில் எதிர் அணியின் ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.
இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இதற்கு பதில் அளிக்க தான் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாது. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார் .
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து தான் கே.எல்.ராகுல் இவ்வாறு பேசியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை இந்தாண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் சதம் விளாசினார்.
- டெஸ்ட்டில் கேஎல் ராகுலின் 11-வது சதம் இதுவாகும்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்த வரிசையில், கே.எல். ராகுல் 197 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 11-வது டெஸ்ட் சதமாகும்.
சதம் விளாசிய கேஎல் ராகுல் சதத்தை தனது மகளுக்கு அர்பணிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினார். இரண்டு விரலை வாயில் வைத்து கொண்டு கை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
- கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் 12 சதங்கள் விளாசியுள்ளனர். அத்துடன் ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த தொடராக இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது.
சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.
- கே.எல். ராகுல் 5 டெஸ்டில் 532 ரன்கள் குவித்தார்.
- சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.
ஆனால், அந்த சந்தேகத்தை இந்திய அணி தகர்த்தது. சிறப்பான ஆட்டத்தால் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என தொடரில் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.
இதற்கு முக்கிய காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக தொடக்க வீரரான கே.எல். ராகுல் அற்புதமாக விளையாடினார். அவர் 10 இன்னிங்சில் 2 சதம், 2 அரைசதத்துடன் 532 ரன்கள் குவித்துள்ளார். கவாஸ்கருக்கு (774 மற்றும் 542) அடுத்தப்படியாக வெளிநாட்டு மண்ணில் தொடக்க வீரரான அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் இந்த தொடர் அவருக்கு எப்போதும் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.
அதேபோல் சுப்மன் கில் கேப்டன் பதவியுடன் சிறப்பாக பேட்டிங் செய்ய கடினம். அவருக்கு மிகுந்த நெருக்கடி இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர். ஆனால், சுப்மன் கில் அபாரமாக விளையாடி 4 சதங்கள் விளாசினார். இதில் ஒன்று இரட்டை சதம் ஆகும். மொத்தம் 754 ரன்கள் குவித்துள்ளார். 10 இன்னிங்சில் அவரது சராசரி 75.4 ஆகும்.
ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கவாஸ்கருக்கு (774) அடுத்த இடத்தை பிடித்துள்ளார். இதனால் சுப்மன் கில்லுக்கும் இந்த தொடர் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.






