என் மலர்
நீங்கள் தேடியது "ருதுராஜ் கெய்க்வாட்"
- இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் சதம் அடித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் 105 ரன்னும் விராட் கோலி 102 ரன்னும் கே.எல்.ராகுல் 66 ரன்னும் அடித்தனர்.
இதையடுத்து 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
தொடக்க ஆட்டக்காரரான மார்க்ரம் 98 பந்துகளில் 110 ரன்கள் விளாசி அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பவுமா 46 ரன்னிலும் அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நிதானமாக விளையாடிய ப்ரீட்ஸ்கி 68 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய போஸ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.
49.2ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
- இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ரோகித் களமிறங்கினர். இதில் ரோகித் 8 பந்தில் 14 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ருதுராஜ்- விராட் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
ருதுராஜ் 105 ரன்னிலும் விராட் கோலி 102 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனை தொடர்ந்து கேஎல் ராகுல் - ஜடேஜா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதம் கடந்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறேன் என கூறினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான, இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெயிக்வாட் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய அணியில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ருதுராஜ் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என இந்திய அணியின் தற்காலிக கேப்டன் கே ரள் ராகுல் தெரிவித்துள்ளார்.
அதில், தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறேன் என கூறினார்.
- இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர்.
- சுப்மன் கில் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாடவில்லை.
தென்ஆப்பிரி்க்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில் விளையாடாததால் ரோகித் சர்மா உடன் இன்னொரு வீரர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டியுள்ளது. தற்போது அந்த வீரர் யார்? என்பதுதான் கேள்விக்குறி.
டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்கி, சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் காம்பினேசன் ஒர்க்அவுட் ஆகும் என நினைக்கலாம்.
அதேவேளையில் உள்ளூர் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி உள்ளார். இவரும் தொடக்க வீரராக களம் இறங்கக் கூடியவர். இவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
அதேவேளையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கியவர்தான். தற்போது மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி வருகிறார். ஒருவேளை ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களம் இறங்கினால், அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். அப்படி என்றால் கே.எல். ராகுல் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா- ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா- கே.எல். ராகுல் இதில் எந்த ஜோடி தெடாக்க ஜோடியாக களம் இறங்கும் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
15 பேர் கொண்ட இந்திய அணி:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜுரல்.
- முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து நான்கு ரன்கள் அடித்திருந்த நிலையில் கழுத்து வலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் எஞ்சியுள்ள நாட்களில் இருந்து வெளியேறிய சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஒருவேளை சுப்மன் கில் இரண்டாவது போட்டியை தவறவிடும் பட்சத்தில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார்.
அதோடு சுப்மன் கில் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது 4-வது இடத்தில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் மிரட்டி வரும் ருதுராஜ் அணியில் இடம் பெற வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ருதுராஜ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரசிகர்களும் ருதுராஜ்-க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களி ருதுராஜ் டிரெண்ட் ஆனார்.
- தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியா ஏ அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. இந்தியா ஏ அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
திலக் வர்மா தலைமை தாங்க, ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா ஏ அணி விவரம்:-
திலக் வர்மா (கேப்டன்), ருதுராக் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மானவ் சுதார், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
- கருண் நாயர் 174 ரன்கள் விளாசினார்.
- ருதுராஜ் கெய்க்வாட் 116 ரன்கள் சேர்த்தார்.
ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கோவா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 174 ரன்கள் விளாசினார். இதனால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இவர், சண்டிகாருக்கு எதிராக 116 ரன்கள் விளாசினார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
- ருதுராஜ் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஜலஜ் சக்சேனா 49 ரன்னில் அவுட் ஆனார்.
இந்தியாவில் உள்நாட்டில் நடக்கும் பிரதான முதல்தர கிரிக்கெட்டான 91-வது ரஞ்சி கோப்பை தொடர் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்குகிறது. 'எலைட்' பிரிவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா, பரோடா, நாகாலாந்து, நடப்பு சாம்பியன் விதர்பா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இதேபோல் 'பிளேட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும்.
இந்நிலையில் கேரளா- மராட்டியம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேரள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மகராஷ்டிரா அணி 1 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளையும் 18 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ருதுராஜ் மற்றும் ஜலஜ் சக்சேனா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 15-வது முதல் தர அரை சதம் ஆகும்.
இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது. 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜலஜ் சக்சேனா ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ருதுராஜ் 91 ரன்னில் வெளியேறினார்.
மழை காரணமாக ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மகாராஷ்டிரா அணி 59 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.
- டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
- அந்த அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, மேற்கு மண்டல அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 87 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 206 பந்துகளில் ஒரு சிக்சர், 25 பவுண்டரி உள்பட 184 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சமீபத்தில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது.
- சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை வாங்கிவிட ராஜஸ்தான் அணி ஆலோசனை நடந்தி வருகிறது.
மும்பை:
2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக எதிர் அணிகளில் இருந்து டிரேட் செய்து சில வீரர்களை வாங்க முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பாகவே தங்களது அணியை கட்டமைக்க முடிவு எடுத்திருக்கிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது. அதற்கேற்ப ராஜஸ்தான் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சனும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை வாங்கிவிட வேண்டும் என்று ராஜஸ்தான் அணி ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேச்சுவார்த்தைக்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜிடம் இருந்து பதில் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கொடுக்க வேண்டுமென்றால், சிஎஸ்கே அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே ஆகிய மூவரில் ஒருவரை கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி தரப்பில் எந்த வீரரையும் கொடுக்க முன் வரவில்லை.
- சி.எஸ்.கே. அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
- 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் சி.எஸ்.கே. அணி உள்ளது.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 5-ல் தோற்றது. 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்) , கொல்கத்தா (8 விக்கெட்) என தொடர்ச்சியாக தோற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே அணி 2-வது வெற்றிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. எஞ்சி இருக்கும் 8 போட்டியில் 7-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.
சி.எஸ்.கே. கேப்டனாக பணியாற்றிய ருதுராஜ் கெய்க்வாட் கவுகாத்தியில் நடந்த போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆட்டத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பையை சேர்ந்த 17 வயதான தொடக்க வீரர் ஆயுஷ்மத்ரே சேர்க்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எஞ்சிய போட்டிகளில் சி.எஸ்.கே. அணியில் இணைந்து கொள்வார். வருகிற 20-ந் தேதி மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
ஆயுஷ் மத்ரே ஏற்கனவே தேர்வு பயிற்சி முகாமில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 17 வயதான இவர் இதுவரை 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 504 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்
இதன்மூலம் பிரித்விஷாவின் வாய்ப்பு பறிபோகியுள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகாத அவர் ருதுராஜூக்கு பதிலாக அணியில் இடம் பெறுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை.
- 2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மீண்டும் எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருதுராஜ் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.
2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.






